October 1, 2011

உங்களைப் பார்த்தால் பிறருக்கு என்ன தோன்றும் அதற்கு பதில் சொல்கிறது ஓர் இணையதளம்.

நாம்
எல்லோருமே மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றனர்கள் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கும். இதில் யாருமே விதி விலக்கல்ல என்றே கருதுகிறேன். சிலர் வெளிப்படையாகவே கேட்டு விடுவார்கள்.
இன்னும் சிலர் மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நினைத்து கொண்டு கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள்.
மற்றவர்கள் நினைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர். இவை ஒருபுறம் இருக்க, உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.
ஜட்ஜ்.மீ என்னும் அந்த தளம் சக இணைய தள நண்பர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழி செய்கிறது.
மற்றவர்களின் எண்ணங்களை அறிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உங்கள் புகைப்படத்தை இடம்பெற செய்வது மட்டும் தான். அதன்பிறகு உறுப்பினர்கள் உங்களை பற்றிய அவர்களுடைய கருத்தை தெரிவிப்பார்கள்.
பர்ஸ்ட் இம்ப்ரஷன் ஈஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டல்லவா? அதே போலவே உங்களை பார்த்ததும் தோன்றக்கூடிய பிம்பத்தை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொருவருக்கும் உங்களை பார்க்கும் போது எத்தகைய எண்ணம் ஏற்படுகிறது என்பதை அவர்கள் உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் தெரிவிக்கும் கருத்துக்கள் வழியே அறிந்து கொள்ளலாம்.
எப்படியும் தினந்தோறும் நம்மை எத்தனையோ பேர் பார்க்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் நம்மைப்பற்றி ஒரு எண்ணம் தோன்றும். அந்த எண்ணங்களை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
எண்ணங்கள் என்றவுடன் பக்கமாக கருத்துக்களோ அல்லது விமர்சனங்களோ கிடையாது. அழகாக வரைபடத்தின் வாயிலாக உணர்த்தப்படுகின்றன.




ஒவ்வொரு புகைப்படத்தின் அருகிலும் இந்த வரைபடம் தோன்றுகிறது. சகஜமாக பேசக்கூடியவர், கூச்ச சுபாவம் உள்ளவர், புத்திசாலியானவர், அழுத்தமானவர் என நான்கு காரணிகளின் அடிப்படையில் வரைப்படத்தில் ஒருவரை பற்றிய மதிப்பீடு காட்டப்படுகிறது.
புகைப்படத்தை பார்த்ததும் தோன்றக்கூடிய எண்ணங்களை இணைய நண்பர்கள் வரைபடத்தின் மீது கிளிக் செய்து உணர்த்தலாம். இணைய நண்பர்களின் கருத்தையும் வரைபடத்தில் அவற்றின் முடிவுகளையும் அழகாக காணலாம்.
தேர்தல் போன்ற நேரங்களில் கட்சிகளின் செல்வாக்கு அலசி ஆராயப்பட்டு வரைபடத்தின் மீது காட்டப்படுவது போல நீங்களும் உங்களைப் பற்றிய அலசலை வரைபடமாக காணலாம்.
ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தில் புகைப்படத்தை சமர்பித்து மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம். அதே போல இந்த தளத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மற்றவர்களின் புகைப்படங்களையும் பார்த்து நமக்கு தோன்றும் முதல் எண்ணத்தையும் தெரிவிக்கலாம்.
இந்த மதிப்பீட்டு தளத்தை பார்க்கும் போது மற்ற மதிப்பீட்டு தளங்களுக்கு எல்லாம் முன்னோடியாக கருத்தப்படும் ‘ஹாட் ஆர் நாட்’ தளத்தின் நினைவு வரலாம்.
ஹாட் ஆர் நாட் தளம் ஒருவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்களின் புகைப்படத்தை பார்த்து மற்றவர்கள் மதிப்பெண்கள் அளிப்பதை அடிப்படையாக கொண்டது. இந்த தளம் சுவாரஸ்யமானது என்றாலும் இதன் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டு.
ஆனால் ஜட்ஜ்.மீ தளம் அவ்வாறு இல்லாமல் எவருக்குமே ஆர்வம் இருக்ககூடிய தங்களைப் பற்றிய மற்றவர்களின் முதல் எண்ணங்களை அறிய உதவுகிறது. இதன் அடிப்படையில் ஒருவர் பொதுவாக தங்களைப் பற்றி அறிந்து கொண்டு தேவை என்றால் தங்களை மாற்றி கொள்ளவும் முற்படலாம்.











நன்றி


http://etamilnews.com

September 30, 2011

இணையத்தின் சக்கரவர்த்தி கூகுல்.பாகம் ஐந்து.

கூகுல் பல்வேறு விதமான வசதிகளை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. அவைகளில் மின்னஞ்சல் சேவை வழங்கும் ஜிமெயிலின் பணி மகத்தானது.ஜிமெயில் பற்றி சில முக்கிய தகவல்கள்.



ஜிமெயில்


ஜிமெயில், ஏப்ரல் 1 , 2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப் படுத்தப்பட்ட காலப் பகுதியில் இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏற்கனவே பயன்படுத்துபவரின் அழைப்பிதழ் தேவை. ஆரம்பத்தில் அமெரிக்காவில் அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் வழியாக வழங்கப்பட்டது. தொடக்கத்தில், 1 GB அளவாக இருந்த சேமிப்புத் திறன் ஏப்ரல் 1, 2005 முதல், ஜிமெயிலின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக 2 GB ஆக கூட்டப்பட்டது.(தற்போதைய சேமிப்புத் திறன் 8GB SEP,2011 )ஆரம்பத்தில் இதன் வளர்ச்சி வீதம் கூடுதலாகவே இருந்தது. இதன் தற்போதைய வளர்ச்சி விகிதம் நாளுக்கு 3.348 மெகா பைட் ஆகும்.
ஜிமெயில் ஏஜாக்ஸ்ஸை மிகப்பெருமளவில் பயன்படுத்துகின்றது. தற்கால உலாவிகளின் ஜாவாஸ்கிரிப்ட் முறையைப் பயன்படுத்தி சிறந்த பயனர் அனுபவத்தைத் தருகின்றது. இதற்கு இன்டநெட் எக்ஸ்ப்ளோரர் 5.5, பயர்பாக்ஸ் 0.8+, மொஸிலா அப்ளிக்கேசன் ஸ்யூட் 1.4+, சவாரி 1.2.1+, நெட்ஸ்கேப் 7.1+, ஒபேரா 9+, ஆகிய உலவிகள் மூலம் பயன்படுத்தப்பட்டது .பழைய உலாவிப் பதிப்புகளில் இன்ரநெட் எக்ஸ்ளோளர் 4.0+, நெட்ஸ்கேப் 4.07+, ஒபேரா 6.03+ அடிப்படை HTML பார்வையைத்தரும் . ஜிமெயில் நகர்பேசிகளில் WAP முறையிலும் அணுகக்கூடியது.
ஏப்ரல் 12 , 2006 முதல் கூகிள் காலண்டர் சேவையையும் இணைத்துக் கொண்டது.



ஜிமெயிலின் அந்தரங்கத் தன்மை Privacy policy குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. ஜிமெயில் மின்னஞ்சல் கணக்குகள் அழிக்கப்பட்ட பின்னரும் சிறிது காலத்திற்கு இவை பாதுகாக்கப்படும். மேலும் பொதுப் பாதுகாப்பிற்காக மின்னஞ்சல் படிக்கக் கூட கொடுக்கப்படும்.
இது பெரும்பான்மையோருக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஜிமெயிலின் புது புது வசிதிகளுக்காக பயன்படுத்துகின்றனர்.


ஜிமெயில் தற்போது, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இடைமுகத்தை அளிக்கின்றது. அரபு , பல்கோரிய, குரோத்தியன், செக், டெனிஸ், டச்சு , எஸ்தோனிய, பினிஷ் , பிரெஞ்சு , ஜெர்மன் , கிரேக்கம் , ஹீத்ரு, ஹிந்தி , ஹங்கேரியன் , ஐஸ்லாந்திக், இந்தோனேசியன், இத்தாலி, ஜப்பானிஷ், கொரியன், லத்வியா, லித்துவேனியா, போலிஷ் , போத்துக்கீசியன், உரோமானிய, ரஷ்யன், செர்பியன், சீனம், ஸ்லோவாக், ஸ்லோவேனியன், ஸ்பானிஸ், ஸ்வீடிஸ், ராகாலெக், தாய் , சம்பிரதாய சீனம் , துருக்கி , பிரிட்டீஷ் ஆங்கிலம் , அமெரிக்கன் ஆங்கிலம், உக்ரேனிய, வியட்நாமிய மொழிகளில் இடைமுகமானது வெளிவந்துள்ளது.






இன்னும் தேடுவோம்............

September 29, 2011

2010 ல் ஆயுதங்கள் வங்கியதில் இந்தியா முதலிடம்.

இந்தியா எந்த துறையில் வளர்கிறதோ இல்லையோ ஆனால் நாட்டின் பாதுகாப்பிற்கென செலவிடும் பணத்தின் அளவில் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு வேகமான வளர்ச்சிதான். கடந்த 2010 ம் ஆண்டில் ஆயுதங்கள் வாங்கியதில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. அந்த வகையில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக ரூ.28,420 கோடி மதிப்பில் ஆயுதங்களை இந்தியா வாங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2010 ல் ரஷ்யாவிடம் ரூ.7,350 கோடி மதிப்பிலான 29 எம்.ஐ.ஜி. மற்றும் 29 கே போர் விமானங்கள், இங்கிலாந்திடம் 57 ஹவாக் ஜெட்கள், இத்தாலியிடம் 12 ஏ.டபிள்யூ 100 ஹெலிகாப்டர்களையும் இந்தியா வாங்கியுள்ளது.
இது போன்று ஆயுதங்கள், கருவிகள் வாங்கியதில் இந்தியா முதலிடமும், தைவான், சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. மேலும் உயர் தொழில் நுட்ப ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா பெற்றுள்ளது.
வளரும் நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் அமெரிக்கா, ரஷ்யா முதல் 2 இடங்களில் உள்ளன. உலக அளவில் 2010 ம் ஆண்டில் ஆயுதங்கள் பரிமாற்ற ஒப்பந்தங்களின் மதிப்பு 1.98 லட்சம் கோடி. 2009 ல் இது ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்து குறிப்பிடதக்கது.

பறவைகளின் அழிவுக்கு காரணமான மனிதன்.

நம் உலகில் பல்லாயிரக் கணக்கான பறவையினங்கள் உயிர் வாழ்ந்தன.ஆனால் இப்போது சில ஆயிரங்கள் என சுருங்கிவிட்டது.பறைவையினங்கள் அழிவதற்கும் அழிந்து கொண்டு வருவதற்கும் மனிதர்களாகிய நாம்தான் முக்கிய காரணம் என்பதை மறுக்க இயலாது.பறவைகளுக்கு பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்துவதும் அதே மனிதான் .



கி. பி. 1500 க்குப் பின்னர்தான் நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் அழிந்துள்ளன. அத்துடன் பறவையினங்களின் அழிவு வீதமும் அதிகரித்துச் செல்வதாகவே உள்ளது. இப்பொழுது உலகில் உயிர்வாழும் ஏறத்தாழப் பத்தாயிரம் இனப் பறவைகளில் 1200 இனங்கள் அழியும் அபாயத்திலுள்ளதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் தீவுகளில் வாழும் குறிப்பாகப் பறக்க இயலாத பறவையினங்களே அதிக ஆபத்தை சந்திக்கின்றன.

சில நூறு வருடங்களுக்கு முன்பு ஓக்குகள் என அழைக்கப்படும் பறவையினங்கள் கனடாவுக்கு அருகிலுள்ள தீவுகளிலும் கிரீன்லாந்து ,ஐஸ்லாந்து ,நார்வே, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற இடங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப் போக்கில் இப்பறவைகள் மனிதர்களாலும் விலங்குகளாலும் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசி ஜோடிகள் 1844 ல் ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அருகில் உள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.இவைகள் தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. சிறிய ஓக்குகளைப் போல பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப்பறவைகள் மனிதருக்கு இலக்காகக் கூடியனவாக இருந்தன.பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மட்டுமே இடுகின்றன.




டேடோ அழிந்த பறவையினங்களில் இதுவும் ஒன்று. இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டேடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் உண்ணக்கூடியது.மாமிச உண்ணிகள் இல்லாத தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டேடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமையால் அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கீசியர்கள் 1505 இல் சென்றனர். பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டேடோ பறவையினம் முற்றுலுமாக அழிக்கப்பட்டது. டேடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது.




யானைப் பறவை அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும்.மடகாஸ்காரில் காணப்பட்ட இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும் அரை டன் எடை உடையதாகவும் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீட்டரை விட அதிக சுற்றளவுடையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியதே காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் நமக்கு நெருக்கமாக இருக்கும் நாம் எப்போதும் பார்க்கக் கூடிய சிறிய பறவையினமான சிட்டுக்குருவிகள் அழிந்து கொண்டு வருவதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. அதற்கான காரணமாக அலைப்பேசி கோபுரங்களைக் சுட்டிக்காட்டுகின்றனர். அதிலிருந்த வெளிப்படும் மின் காந்த அலைகள் சிட்டுகுருவிகளை வெகுவாக பாதிப்பதால் அவைகள் அழிந்து வருவதாக கூறுகின்றனர்.

பறவையினங்களை காப்பாற்ற எத்தனை அமைப்புகள் ஏற்படுத்தினாலும் மனிதனின் செயற்கையான படைப்பால் இயற்கையான படைப்புகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

September 28, 2011

ஞாபக சக்தி குறைபாட்டை தவிற்க சில தகவல்கள்.

ஞாபக சக்தி குறைவு என்பது இப்போது பெரியவர்களுக்கு மட்டுமல்ல பள்ளிக்கூடம் செல்லும் சிறவர்களுக்கும் இதன் பாதிப்பு இருக்கிறது.பெரும்பாலும் உணவு முறை மற்றும்,மனக்கவலைகள் காரணமாகத்தான் இந்த குறைபாடு தோன்ற காரணம். உணவு
வகைகளில் சில மாற்றங்களை மேற்கொண்டு உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டால் கூடுமானவரைக்கும் ஞாபக சக்தி குறைபாட்டை தவிற்கலாம்.


அதற்கான சில வழிமுறைகள் இதோ.



1.ஞாபக சக்தி அதிகரிக்க நாள்தோறும் காலையில் ஐந்து நிமிடம் தியானம் செய்வது நல்லது.


2.வாரம் ஒரு முறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறு சுறுப்பாகத் திகழ்வார்கள். நகரங்களில் இருப்போற்கு வல்லாரை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு.அவர்கள் வல்லாரை கேப்ஸ் யூல்களைப் பயன்படுத்தலாம்.

3.சிறுவர்களுக்கும் ,பெரியவர்களுக்கும் நாள்தோறும் காலையில் தண்ணீரில் ஊறபோட்ட பாதாம் பருப்பை அரைத்து உட்கொள்ள தரலாம். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.


4. இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.


5. ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.


6. சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம் பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.


7. கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது.இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.


சத்தான உணவு வகைகள் உண்பதன் மூலம் ஞாபக சக்தி குறைபாட்டிற்கு நிவாரணம் கிடைத்தாலும், நாமும் கூடுமானவரை தேவையில்லாத கவலைகளையும்,பிரச்சனைகளையும் மூளைக்கு அனுப்பாமல் இருந்தாலே ஞாபக சக்தி குறைபாட்டை கொஞ்சம் தவிற்கலாம்.

September 27, 2011

300 கி.மீ வேகத்தில் இந்தியாவில் அதிவேக ரயில் சேவை.

அதிவேக ரயில் சேவை உலகில் வளர்ந்த நாடுகளிலும்,வளரும் நாடுகளில் பலவற்றிலும் முன்பே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்த வரை அது கேள்விக் குறியுடனே இருந்து வந்தது.தற்போது இந்திய மக்களுக்கும் அதிவேக ரயில் சேவை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ஐதராபாத், சென்னை , பெங்களூரு , எர்ணாகுளம் மார்க்கத்தில் 300 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கும் திட்டம் குறித்த மசோதா, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.


பொருளாதார வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக துணை நகரங்களை அமைக்கவும், ரயில்களின் வேகங்களை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத் ,விஜயவாடா , சென்னை, டில்லி , ஆக்ரா லக்னோ , வாரணாசி, பாட்னா,டில்லி , சண்டிகர், அமிர்தசரஸ், புனே , மும்பை , ஆமதாபாத், ஹவுரா, ஹால்டியா, சென்னை, பெங்களூரு, எர்ணாகுளம் ஆகிய தடங்களில் 300 கி.மீ.,வேகத்தில் ரயில்களை இயக்குவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த போது பட்ஜெட்டில் அறிவித்தார்.
இந்த திட்டம், பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டு முயற்சியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை கண்காணிப்பதற்காக, "தேசிய அதிவேக ரயில் ஆணையம்' அமைக்கப்பட உள்ளது.
ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த ஆணையம் இருக்கும்.


ஒரு தலைவர், எட்டு உறுப்பினர்கள் இதில் இடம் பெறுவர். திட்டக் கமிஷன், நிதித் துறை, இன்ஜினியரிங் துறை ஆகியவற்றை சேர்ந்தவர்களும் , இந்த திட்டத்திற்கு நிதியளிக்கக் கூடிய நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு பேர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் இடம் பெற உள்ளனர். பொதுத் துறை தேர்வு வாரியத்தின் மூலம் இந்த ஒன்பது பேரும் தேர்வு செய்யப்படுவர்.
இந்த வரைவு மசோதா, சட்ட அமைச்சகம், நகர்ப்புற அமைச்சகம், நிதி அமைச்சகம், திட்டக் கமிஷன் ஆகியவற்றின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. அதன் பிறகு, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த அதிவேக ரயில் பாதை ஒரு கி.மீ., தூரத்துக்கு அமைக்க, 100 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஆறு தடங்கள் அதிவேக ரயில் பாதைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் மூன்று பாதைகள், வெளிநாட்டு ஆலோசனை நிறுவனங்களின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


அதிவேக ரயில் சேவை அதிவேகமாக இந்திய மக்களுக்கு கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

இணையத்தின் சக்ரவர்த்தி கூகுல்.பாகம் நான்கு.

கூகுல் பல்வேறு வகையான வசதிகளை தன் சொந்த முயற்சியில் மேற்கொண்டாலும், இணையத்தில் பிரபலமாக இருக்கும் நிறவனங்களை எந்த விலை கொடுத்தாவது கூகுலோடு இணைத்துக் கொள்வதை வாடிக்கையாகவே வைத்திருந்தது.

பிப்ரவரி 2003 ல் weblog இன் முன்னோடியும்"பிளாக்கர்"(blogger) ன் உரிமையாளரான "பைரா லாப்ஸ்"(Pyra Labs)ஐ சொந்தமாக்கிக் கொண்டது. உலக இணையத் தளத்தின் 84.7 சதவீத தேடுதல்களை 2004 ம் முற்பகுதியில் கூகிள் நிறுவனமானது யாகூ(YAHOO!), ஏ.ஓ.எல்.(AOL), சி.என்.என்(CNN)ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து ஒப்பந்தம் செய்திருந்தது, பின்பு 2004 ம் பிப்ரவரி ல் யாகூ விலகிக்கொண்டு தனது சொந்த தேடு பொறியை தொடங்கிற்று. யாகூ விலகிக் கொண்டது கூகிள் நிறுவனம் சந்தித்த ஒரு பெரிய சவாலாக இருந்த போதிலும் G-mail,orkut, மற்றும் புதிய பல யுக்திகிள் மூலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.அத்துடன் கூகிள் நிறுவனம் தனது நீண்டகால ஆராய்ச்சிக்கான "நாஸா"(NASA) கூட்டு ஒப்பந்தம் 2005 செப்டம்பரில் கையெழுத்தானது இந்த கூட்டு ஆய்விற்கான கட்டிடத்தின் பரப்பளவு 11 இலட்சம் சதுரஅடிகள் ஆகும்.


இணையத்திற்கான கூட்டு "ஏஓஎல்"(aol) லுடன் டிசம்பர் ல் உருவாக்கிக் கொண்டது. மேலும்,"சன்மைக்ரோ" உடன் தொழில் நுட்ப்பத்தை பகிர்ந்து கொள்வதோடு, கூகுல் நிறுவனம் தனது ஊழியர்களை "ஓப்பன் ஆபிஸ்"(OpenOffice.org)நிறுவன வேலைகளிலும் வாடகைக்கு அமர்த்தி உள்ளது. இதனிடையே 2004 க்கும் 2006 ஆம் வருட இறுதிக்கும் உள்ள கால கட்டத்தில் பல மென்பொருள் முன் மாதிரி நிறுவனங்களையும்(Trendalyzer,Upstartle,AdscapeMedia)ரேடியோ விளம்பர நிறுவனம்"டிமார்க்"(dMarc)யும் தம்வசமாக்கிக் கொண்டதுடன் $900 விளம்பர உடன்பாட்டை "மைஸ்பேஸ்"(MySpace) உடன் செய்து கொண்டது . கூடவே, 2006 ன் இறுதியில் யூ டியூப்"(You Tube) என்ற மிகவும் பெயர் பெற்ற இணையத்தளத்தை $1.65 பில்லியனிற்கு கூகுலால் வாங்கப்பட்டது.
,இத்துடன் விக்கி தொழில் நுட்பத்தை வடிவமைத்த JotSpot சொந்தமாக்கப்பட்டது.இத்துடன் நிற்காமல் 2007 ஏப்ரலில் $3.1பில்லியன்கொடுத்து "டபுல் கிளிக்"(Double Click)ஐ வாங்கிக் கொண்டதோடு 2007 ஜூலை 9 ல்"பெஸ்டினி"யையும் கொள்முதல் செய்து கொண்டது.


இத்தனைக்கும்மத்தியில் தனது பரம எதிரியான மைக்ரோசாப்ட்'(MicroSoft) ன் திறமையான பணியாளர்களை தம் வசம் ஈர்த்ததுடன் அந் நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றத்திற்கு வெளியே இரகசியமாக 2005 டிசம்பர் 22 ல் தீர்த்தும் கொண்டது.
கூகுல் நிறுவனம் 2006 ல் "mobi"எனப்படும் கைத் தொலைபேசி இணைய முகவரி தோற்றத்திற்கு காரணகர்த்தாவாகவும், முதலீடு அளித்த நிறுவனமாகவும் முன் நிலைபடுத்தியதோடு 'கூகுல் மொபி இன் உரிமையாளராகவும் கூகுல் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


2004 ல் இலாபம் ஈட்டாத"கூகுல்.Google.org ஐ நிறுவியதோடு ஆரம்ப நிதியாக $1 பில்லியன் வைப்பு செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய பணிகளாக, சூழல் வெப்பமாகுதலை தடுத்தல்,உலக சுகாதாரம்,உலக வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப் பட்டுள்ளது.அத்துடன் இந்த அமைப்பின் முதல் திட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகனங்களை வடிவமைக்கும் திட்டம் டாக்டர்.லாரி தலைமையில் தொடங்கப் பட்டுள்ளது.

இன்னும் எத்தனையோ எண்ணிலடங்காத புத்தாக்கங்களை வெளியிட்டிருக்கிறது. இன்றும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.




இன்னும் தேடுவோம்.........

September 26, 2011

மக்கள் மத்தியில் தே.மு.தி.க வின் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறதா?

தேசிய முற்போக்கு திராவிட கழகம்,2005 ல் விஜயகாந்த் அவர்களால் துவங்கப்பட்டு இன்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரோடு வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
விஜயகாந்த் அவர்கள் 2005 ல் கட்சி துவங்கியதே 2006 ல் வந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.ஆனால் தேர்தலில் அவர் மட்டுமே வென்று சட்டசபைக்குச் சென்றார்.இருந்தாலும் தே.மு.தி.க அனைத்துப் பகுதிகளிலும் கணிசமான வாக்குகள் பெற்றிருந்ததோடு அதிக வாக்குகள் பெற்ற கட்சிகள் வரிசையில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத் தக்கது.அதன் பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தல்கள்,இடைத்தேர்தல்கள் என அனைத்து தேர்தல்களிலும் தன் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தினார்.அந்தத் தேர்தல்களில் வெற்றி பெறாவிட்டாலும் இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவார் என்ற எண்ணம் மக்களிடையே நிலவியது.இப்படி சிறுக ,சிறுக முன்னேறிக் கொண்டிருந்த தே.மு.தி.க 2011 சட்டமன்ற தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் இந்த தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிடுவாரா இல்லை வேறு கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்பட்டது.ஆனால் விஜயகாந்த் அவர்களோ, எனது கட்சி மட்டும் என்ன தமிழக அரசியல் கட்சிகளை விட சளைத்ததா என முடிவெடுத்து கூட்டணி அரசியலில் தனது கட்சியையும் மூழ்கவிட்டார்.


மக்களுடனும்,கடவுளுடனும்தான் கூட்டணி என்றுக் கூறிக்கொண்டவர் அ.தி.மு.க வின் கடவுளுடன் கூட்டணி வைத்துக்கொண்டார்.தனித்து நிற்பேன்,தனித்து நிற்பேன் என்று கூறி அனைத்துக் கட்சிகளை விட தனித்துவமாய் தெரிந்த அவரின் கட்சி கூட்டணி என்னும் சாக்கடையில் கலந்துவிட்டது.இருந்தாலும் இந்தக் கூட்டணி முயற்சி தே.மு.தி.க வுக்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.கிடைத்த 41 தொகுதியில் போட்டியிட்டு அதில் 29 இடங்களை கைப்பற்றியது.தி.மு.க வின் போதாத காலம் அது கேவலமாக தோற்க, 29 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டசபையில் பிரதான எதிர் கட்சியாக அமர்ந்தது தே.மு.தி.க.

ஆளும்கட்சியினரோடு கூட்டணியில் இருப்பதால் எதிர்கட்சியான தே.மு.தி.க வால் எதையும் வெளிப்படையாக பேச முடியவில்லை அல்லது பேச விடப்படவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்.இருந்தாலும் தே.மு.தி.க தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாகவே கருதப்பட்டது. அந்த அளவுக்கு தே.மு.தி.கவுக்கு சாதகமான பல நிகழ்வுகள் நடந்தேறின,அது நேற்று வரை இன்று அந்த சூழல் உடைந்து விட்டதாகவே கூறலாம்.ஏனென்றால் வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க வுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடியாததால் தனித்து போட்டியிடுவதாக தே.மு.தி.க அறிவித்ததுதான்.தே.மு.தி.க வால் தனித்து நின்று உள்ளாட்சி தேர்தலில் 25 வார்டுகளில் கூட வெற்றி பெற முடியாது.ஏனென்றால் தே.மு.தி.க வின் சமீபத்திய செயல்பாடுகள் மக்களிடையே ஓர் திருப்திகரமான நிலையை ஏற்படுத்தவில்லை. மாறாக அனைத்துக் கட்சிகளைப் போல தே.மு.தி.க வும் பத்தோடு பதினொன்று என்ற எண்ணத்தில் மக்கள் வந்துவிட்டதாகவே என் எண்ணம்.அதற்கேற்றார் போல் தே.மு.தி.க வின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணியைத் தொடர்ந்திருக்க வேண்டும் அதுதான் தே.மு.தி.க வின் எதிர்கால வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.அதை தவிர்த்துவிட்டு மீண்டும் தனித்து நிற்போம் என்று முதலிலிருந்து ஆரம்பிக்கிறது தே.மு.தி.க.


தற்போதய சூழலில் தே.மு.தி.க வும்,பா.ம.க வை போல் கிளம்பியிரக்கிறது என்ற பேச்சும் வந்து கொண்டிருக்கிறது.ஏனென்றால் பா.ம.க வுக்கு தமிழகத்தை ஆளும் தகுதி இருக்கும் பெரிய கட்சி என்றே பா.ம.கவின் தலைவர்களும் தொண்டர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது போல தே.மு.தி.க வும் கனவு கண்டு கொண்டிருக்கிறது போல.அந்த கனவில் துவங்கப்பட்ட கட்சிதான் தே.மு.தி.க . ஆனால் அந்த கனவை சில காலம் மறந்திருந்தனர்.மறந்த காலம் இறந்த காலம் ஆகிவிட்டதால் கடந்த காலத்தில் சொன்னதை நிகழ்காலத்தில் முயற்சிக்கிறார்கள் போலும்.கறுப்பு எம்.ஜி.ஆர் என்று அடைமொழி போட்டுக் கொண்டால் மட்டும் போதாது அதேபோல் விஜயகாந்தின் செயல்பாடுகளிலும் இருக்க வேண்டும்.எம்.ஜி.ஆர் அவர்களிடம் இருந்த துளி நல்ல விசயங்கள் கூட விஜயகாந்திடம் இல்லை என்பதுதான் உண்மை.
அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரண்டும் தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்திகள் .தற்போது தி.மு.க வின் நிலை இறங்கு முகத்தில் இருந்தாலும் வெகு விரைவிலேயே அது மீண்டுவிடும் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் தே.மு.தி.க வின் நிலைதான் சற்று பரிதாபத்திற்குரியது ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லாமல் அங்கும் இங்குமாக தாவிக்கொண்டிருப்பது தமிழகத்தின் மாற்று அரசியல் கட்சி என வருணிக்கப்பட்ட தே.மு.தி.க வுக்கு அழகல்ல .


என்னைப் பொறத்தவரை தே.மு.தி.க அ.தி.மு.க வின் கூட்டணியில் இருந்து விலகியது மிகப் பெரிய தவறு என்றே கூறுவேன்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் தெரியும் தே.மு.தி.க உட்பட அனைத்துக் கட்சிகளின் உண்மை நிலவரம்.பொறுத்திருந்து பார்ப்போம்.ங்கியதே 2006 ல் வந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.ஆனால் தேர்தலில் அவர் மட்டுமே வென்று சட்டசபைக்குச் சென்றார்.இருந்தாலும் தே.மு.தி.க அனைத்துப் பகுதிகளிலும் கணிசமான வாக்குகள் பெற்றிருந்ததோடு அதிக வாக்குகள் பெற்ற கட்சிகள் வரிசையில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத் தக்கது.அதன் பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தல்கள்,இடைத்தேர்தல்கள் என அனைத்து தேர்தல்களிலும் தன் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தினார்.அந்தத் தேர்தல்களில் வெற்றி பெறாவிட்டாலும் இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவார் என்ற எண்ணம் மக்களிடையே நிலவியது.இப்படி சிறுக ,சிறுக முன்னேறிக் கொண்டிருந்த தே.மு.தி.க 2011 சட்டமன்ற தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் இந்த தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிடுவாரா இல்லை வேறு கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்பட்டது.ஆனால் விஜயகாந்த் அவர்களோ, எனது கட்சி மட்டும் என்ன தமிழக அரசியல் கட்சிகளை விட சளைத்ததா என முடிவெடுத்து கூட்டணி அரசியலில் தனது கட்சியையும் மூழ்கவிட்டார்.


மக்களுடனும்,கடவுளுடனும்தான் கூட்டணி என்றுக் கூறிக்கொண்டவர் அ.தி.மு.க வின் கடவுளுடன் கூட்டணி வைத்துக்கொண்டார்.தனித்து நிற்பேன்,தனித்து நிற்பேன் என்று கூறி அனைத்துக் கட்சிகளை விட தனித்துவமாய் தெரிந்த அவரின் கட்சி கூட்டணி என்னும் சாக்கடையில் கலந்துவிட்டது.இருந்தாலும் இந்தக் கூட்டணி முயற்சி தே.மு.தி.க வுக்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.கிடைத்த 41 தொகுதியில் போட்டியிட்டு அதில் 29 இடங்களை கைப்பற்றியது.தி.மு.க வின் போதாத காலம் அது கேவலமாக தோற்க, 29 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டசபையில் பிரதான எதிர் கட்சியாக அமர்ந்தது தே.மு.தி.க.

ஆளும்கட்சியினரோடு கூட்டணியில் இருப்பதால் எதிர்கட்சியான தே.மு.தி.க வால் எதையும் வெளிப்படையாக பேச முடியவில்லை அல்லது பேச விடப்படவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்.இருந்தாலும் தே.மு.தி.க தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாகவே கருதப்பட்டது. அந்த அளவுக்கு தே.மு.தி.கவுக்கு சாதகமான பல நிகழ்வுகள் நடந்தேறின,அது நேற்று வரை இன்று அந்த சூழல் உடைந்து விட்டதாகவே கூறலாம்.ஏனென்றால் வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க வுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடியாததால் தனித்து போட்டியிடுவதாக தே.மு.தி.க அறிவித்ததுதான்.தே.மு.தி.க வால் தனித்து நின்று உள்ளாட்சி தேர்தலில் 25 வார்டுகளில் கூட வெற்றி பெற முடியாது.ஏனென்றால் தே.மு.தி.க வின் சமீபத்திய செயல்பாடுகள் மக்களிடையே ஓர் திருப்திகரமான நிலையை ஏற்படுத்தவில்லை. மாறாக அனைத்துக் கட்சிகளைப் போல தே.மு.தி.க வும் பத்தோடு பதினொன்று என்ற எண்ணத்தில் மக்கள் வந்துவிட்டதாகவே என் எண்ணம்.அதற்கேற்றார் போல் தே.மு.தி.க வின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணியைத் தொடர்ந்திருக்க வேண்டும் அதுதான் தே.மு.தி.க வின் எதிர்கால வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.அதை தவிர்த்துவிட்டு மீண்டும் தனித்து நிற்போம் என்று முதலிலிருந்து ஆரம்பிக்கிறது தே.மு.தி.க.


தற்போதய சூழலில் தே.மு.தி.க வும்,பா.ம.க வை போல் கிளம்பியிரக்கிறது என்ற பேச்சும் வந்து கொண்டிருக்கிறது.ஏனென்றால் பா.ம.க வுக்கு தமிழகத்தை ஆளும் தகுதி இருக்கும் பெரிய கட்சி என்றே பா.ம.கவின் தலைவர்களும் தொண்டர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது போல தே.மு.தி.க வும் கனவு கண்டு கொண்டிருக்கிறது போல.அந்த கனவில் துவங்கப்பட்ட கட்சிதான் தே.மு.தி.க . ஆனால் அந்த கனவை சில காலம் மறந்திருந்தனர்.மறந்த காலம் இறந்த காலம் ஆகிவிட்டதால் கடந்த காலத்தில் சொன்னதை நிகழ்காலத்தில் முயற்சிக்கிறார்கள் போலும்.கறுப்பு எம்.ஜி.ஆர் என்று அடைமொழி போட்டுக் கொண்டால் மட்டும் போதாது அதேபோல் விஜயகாந்தின் செயல்பாடுகளிலும் இருக்க வேண்டும்.எம்.ஜி.ஆர் அவர்களிடம் இருந்த துளி நல்ல விசயங்கள் கூட விஜயகாந்திடம் இல்லை என்பதுதான் உண்மை.
அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரண்டும் தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்திகள் .தற்போது தி.மு.க வின் நிலை இறங்கு முகத்தில் இருந்தாலும் வெகு விரைவிலேயே அது மீண்டுவிடும் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் தே.மு.தி.க வின் நிலைதான் சற்று பரிதாபத்திற்குரியது ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லாமல் அங்கும் இங்குமாக தாவிக்கொண்டிருப்பது தமிழகத்தின் மாற்று அரசியல் கட்சி என வருணிக்கப்பட்ட தே.மு.தி.க வுக்கு அழகல்ல .


என்னைப் பொறத்தவரை தே.மு.தி.க அ.தி.மு.க வின் கூட்டணியில் இருந்து விலகியது மிகப் பெரிய தவறு என்றே கூறுவேன்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் தெரியும் தே.மு.தி.க உட்பட அனைத்துக் கட்சிகளின் உண்மை நிலவரம்.பொறுத்திருந்து பார்ப்போம்.

இணையத்தின் சக்ரவர்த்தி கூகுல்.பாகம் மூன்று

கூகுல் தேடு பொறி 1998 செப்டம்பர் 7 ல் அமெரிக்காவின் கலிபோஃர்னியா மாநிலத்தில் நிறுவப்பட்டது. இணைய தேடுதலிலும் இணைய விளம்பரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் கூகுல்,2004ம் ஆகஸ்ட்டு மாதம் 19 ம் நாளில் இருந்து பொது மக்கள் நிறுவனமாக தன்னை பதிவு செய்து கொண்டது. இதுவே"நாஸ்டாக்"(NASDAQ) ல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் பெரியது ஆகும்.



லாரி பேர்ஃஜ் ,சேர்ஜி பிரின் இருவரால் சேர்ந்து உருவாக்கப்பட்டகூகில் நாஸ்டாக் பங்குச் சந்தையில் வந்த 2004 ம் ஆக்ஸ்ட்டு 19 ம் தேதி அன்று $1.67 பிலியன்களுக்கு பங்குகள் விற்பனை ஆகியதுடன் $23 பில்லியனுக்கு மேலாக Google நிறுவனம் மதிப்பாகியிருந்தது.படிப்படியாக தொடரான புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றய நிறுவனங்களை கொள்முதல் செய்வது, பங்குதாரர்கள்,ஆரம்பத்தில் இருந்த விளம்பர யுக்திகளை இன்னும் விரிவுபடுத்தியது, இணைய மின்-அஞ்சல், இணைய வழி வரைபடம்,அலுவலக உற்பத்தி ஆகியவற்றுடன் இணைய வழி வீடியோவையும் இணைத்துக் கொண்டதன் மூலமாக பன்மடங்கு(4மடங்கிலும் மேலாக) மதிப்பில் கூகிள் தன்னை தற்போது உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன்,2003ம் அக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் கூகுலை எடுத்துச் செல்ல ஆலோசிக்கும்வேளை "மைக்கிரோ சாப்ட்"(MicroSoft) நுளைந்து பங்காளியாக அல்லது தத்து எடுப்பதற்கு எடுத்த முயற்சி கை கூடாமல் போயிற்று. ஜனவரி 2004 ல் உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளான "மோர்கன் ஸ்டான்லி"(Morganstanley) ,"கோல்டுமேன்சாச்ஸ்" (GoldmanSachs) ஆகிய வங்கிகளின் துணைகொண்டு பங்குச் சந்தையில் இணைவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது.


பங்குச் சந்தையில் முதல் நாள் $4 பில்லியன்களாவது திரட்டப்படும் எனவும் கணக்கிட்டனர். இதனிடையே கூகுல் 2004 மே மாதம் இரு பெரிய முதலீட்டளர் வங்கியில் ஒன்றான கோல்டுமேனை வெட்டி விட்டு வேறொரு பிரபலமான வங்கியை இணைத்துக் கொண்டு 2004 ஆகஸ்ட் 19ம் நாள் முதல் முதலாக பங்குச் சந்தைக்கு 19,605,052 பங்குகளுடன் வந்த போது ஒவ்வொரு பங்கும் $85 க்கு விற்க்கப்பட்டது.முதல் நாள் மொத்தமாக கை மாறிய பங்குகள் 22,351,900 என்பதுடன் அன்றய இறுதி நேர விலை $100.34 ஆக மூடப்பட்டது, இது அவர்கள் கணித்து வைத்திருந்த அளவு தொகையை விடவும் மிக குறைவாகவும் இருந்தது. எனினும்,அன்று கூகுலின் இரட்டையர்கள்தம் வசம் 271 மிலியன் பங்குகளை வைத்திருந்ததன் மூலமாக $23 பிலியன்கள் மேல் நிறுவனத்தை மதிப்பு ஏற்றியதோடு $1.67 பில்லியன்களை பணமாக திரட்டியும் கொண்டனர்.அதோடு கூகுலில் பணியாற்றும் பலரையும் அன்று திடீர் டாலர் மில்லியனர்கள்ஆக்கியதும் அல்லாமல் வியாபார எதிரியாக இருக்கக் கூடிய"யாகூ" ( yahoo! 8.4 மில்லியன் Google பங்குகளை நஸ்ட ஈடாக பெற்றுக் கொள்ள ஒரு பேரத்தில் கூகிளின் பங்குச்சந்தை வருகையின் 10 நாள் முன் உடன் பட்டன.) இதன் அபார தொடர் வளர்ச்சியில் 2005 ஆம் ஜூன் மாதம் கூகுல் நிறுவனம் $52 பில்லியன்கள் (பங்குகள்தவிர $7பில்லியன்கள் பணமாக)மேல் மதிப்பானதுடன் இதுவே உலகின் மிகப் பெரிய மதிப்புடைய ஊடகவியல் நிறுவனம் ஆயிற்று.தொடற்சியாக பங்குகள் ஏற்ற இறக்கம் கண்டு 2007 ம் ஆண்டு அக்டோபரில் ஒரு பங்கு $700 ஆக இருந்த கூகிளின் பங்குகள் அமெரிக்கா, லண்டன் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது.இது ஒரு அபாரமான வளர்ச்சி என்றே எல்லோராலும் கருதப்பட்டது.






இன்னும் தேடுவோம்.............

வருகிறது புதிய வசதி,பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலிலிருந்து நம்மை நீக்கியவரை உடனே கண்டறியலாம்.

பேஸ்புக்கில் மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப் படுத்துகிறார்கள்.இனிமேல் யாராவது பேஸ்புக் நண்பர்கள் பட்டியலிலிருந்து உங்களை நீக்கி விட்டால் அவர்கள் யார் யார் என்பதை உடனே கண்டறிந்து விடலாம்.
முன்பு ஒருவரது பக்கத்திற்குச் சென்று உள்ளே நுழைய முற்படும் போது அவரின் பக்கத்தை உங்களால் பார்க்க முடியாமல் இருக்கும் போது தான் அவர் உங்களை நீக்கிவிட்டார் என்பது தெரியவரும்.
ஆனால் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Timeline என்ற வசதி தேதி வாரியான அட்டவணைப்படி இந்த மாற்றங்களைப் பயனாளர்களுக்குக் காட்டுகின்றது.
இதன் மூலம் ஒருமுறை நம்மை நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கிய நண்பர்களுக்கு மீண்டும் அவர்களுக்கு
நட்பு கோரிக்கை நாம் தெரியாமல் அனுப்புவதை தவிற்கலாம்.
இந்த புதிய வசதி அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.