December 16, 2011

தலைவனென்றால் போராட வேண்டும்?

தமிழகத்தின் பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது முல்லை பெரியாறு அணை.அணை உடைந்து விடும் என்ற பெயரில் கேரள அரசு செய்யும் அடவாடித்தனங்கள் எல்லை மீறிக் கொண்டிருக்கும் நிலையில் பதில் சொல்ல வேண்டிய தமிழக அரசோ வெற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றி நாங்களும் போராடுகிறோம் என்று அறிக்கை விடுகிறார்கள்.


அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமில்லாத தமிழ்நாட்டில் போராட்ட களத்தில் ஒரு சில கட்சிகளை தவிர மற்ற அரசியல் கட்சிகளும் தலைவர்களும் என்ன ஆனார்கள் என்ற தகவலுமில்லை.முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஓங்கி ஒலிக்கும் ஒரே குரலாக என் கண்களுக்கு தென்படுவது திரு.வைகோ அவர்களின் குரல் மட்டும் தான்.கேரளாவில் போராட்டக்காரர்கள் வைகோ ஒழிக என்று கோசம் எழுப்புகிறார்களேயொளிய ஜெயலலிதா ஒழிக தமிழினத் தலைவர் கருணாநிதி ஒழிக என்று யாரும் கோசம் எழுப்பவில்லை.நிலமை இப்படி இருக்க கடமை உணர்சியுடைய சில அரசியல்வாதிகள் தங்கள் வீட்டிலிருந்தபடியெ அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கென்ன அல்லல்படுவது தமிழர்கள் தானே தமிழினத் தலைவர்கள் இல்லையே அதனால் அறிக்கை மட்டும் போதும் என்று நினைத்திருப்பார்கள்.ஆட்சி அதிகாரங்களுக்கு ஆசைப்படும் தலைவர்கள் போராட்டக்களத்தில் முன் நின்று போராட வேண்டும் என்று நினைப்பதில்லை.லட்சக்கணக்கான மக்களுக்கு தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் அவர்கள் போராடினால் அவர்களுக்கு பின்னால் லட்சம் பேர் திரளுவார்கள்.


தனி மனிதனான நான் போராடினால் ஏதாவது ஒருச் சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருப்பேன்.என்னை மீட்க என் குடும்பத்தார் மட்டுமே போராட வேண்டும்.ஆனால் தலைவர்கள் மேல் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்தால் கூட அதை எதிர்த்து போராட தொண்டன் என்ற பெயரில் சாதாரண குடிமகன் இருக்கிறான்.தனி மனிதர்களான நம்மால் என்ன செய்ய முடியும் நண்பரிடமோ அல்லது பக்கத்து வீட்டுக்காரரிடமோ நாலு கெட்டவார்த்தைகளால் அர்சித்து விட்டு அடுத்த வேலைய பார்க்க போய்விடுவோம்.இதுதான் யதார்த்தம்.இந்த யதார்த்தையும் மீறி ஒரு சிலர் இருப்பர் அவர்கள்தான் தலைவராகியிருப்பார்கள் எதிர்காலத்தில் தலைவராகவும் இருப்பார்கள்.ஒரு சமூகமோ ஒரு இயக்கமோ ஒரு நாடோ எதுவாயினும் முன்னேற அல்லது எழுச்சி காண ஒரு தீரமிக்க தலைவன் தேவைப்படுகிறான்.ஆனால் தமிழக மக்களின் துரதிஷ்டம் தலைவர்கள் நிறைய கூடவே குறைகளும்.எது எப்படியோ தலைவர்களோ தொண்டர்களோ அனைவரும் ஒரு அணியில் இணைந்தால்தான் நம் வலிமை என்னவென்று உலகுக்கு பறைசாற்ற முடியும்.

December 11, 2011

வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்(12-12-2011)உண்மையிலேயே ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு திருநாள்தான்.ரசிகர்கள் மன்றங்கள் சார்பாக தங்களின் பணத்தில் அன்னதானம் வழங்குவதும்,ஏழைகள் பயன்பெறும் விதத்தில் சிறு உதவிகளான தையல் இயந்திரங்கள் வழங்குவது,வேட்டி,சேலை,கல்வித்தொகை வழங்குவது என ரஜினி ரசிகர்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கி வருகிறார்கள்.அது மட்டுமல்லாமல் கலைநிகழ்ச்சிகள்,விழையாட்டு போட்டிகள் என அன்றைய தினமே திமிலோகப்படும்.எனக்கு ரஜினி என்ற நடிகர் மீது ஈடுபாடு வர காரணமும் ஒரு ரசிகர் மன்றம்தான்.கன்னியாகுமரி மாவட்டத்தில் காட்டாத்துறை என்னும் ஊரின் அருகே இருக்கும் தும்பயன் தோட்டம் என்ற சிறு கிராமத்தில்தான் அந்த ரசிகர் மன்றம் இருந்தது.தும்பயன் தோட்டம் என்னுடைய பாட்டியின் ஊர் என்பதால் என்னுடைய குழந்தை பருவத்தை பெரும்பாலும் அங்குதான் களித்தேன்.அதனால் அங்கிருந்த ரஜினி ரசிகர் மன்றம் மூலமும் அவர்கள் நடத்தும் நிகழ்சிகள் மூலமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயர் என் மனதில் கவர்ச்சிகரமாக நுளைந்தது.என்னை பொறுத்த வரை ரஜினியின் ரசிகர்கள் மற்ற ஏனய நடிகர்களின் ரசிகர்களை விட வித்தியாசமானவர்கள்.இதற்கு விளக்கம் கூற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.ஏனென்றால் ரஜினியைப் போல அவர் ரசிகர்களும் தனி வழியைக் கடைபிடிப்பவர்கள்.அப்படிப்பட்ட அன்பு ரசிகர்களின் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.














thankyou...google.images.com