July 5, 2016

மரம் வளர்ப்போம்...எங்காவது..

நாங்கள் இரண்டு பேர் மரம் வளர்ப்பதைப் பற்றியும் சில திருமண வீடுகளில் வாழ்த்த வருவோர்களுக்கு மரக்கன்றுகள் அன்பளிப்பாக தருவதுபற்றியும் சின்ன விவாதத்தில் உழன்று கொண்டிருந்தோம்.அப்போது பேச்சுவாக்கில் நம்மளால நிறைய மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்க முடியவில்லையென்றாலும் நம் தெருவில் ஒரு மரமாவது நட்டு பாதுகாக்க வேண்டும் என நண்பர் ஆதங்கப்பட்டுக்கொண்டார்.நானும் பதிலுக்கு நாடோடி மாதிரி சுற்றிக்கொண்டிருக்கும் வாழ்கையில் இதல்லாம் எங்கண்ணே சாத்தியம் என்று குறைபட்டுக்கொண்டேன்.இப்படி எங்கள் உரையாடல் நொடிகளை கடந்துகொண்டிருக்க திடீரென அருகாமை கட்டிலில் படுத்துக்கிடந்த பெரியவர் (சுமார்50 வயதிருக்கும்.)என்னல பேசுதிய எனக்க வீட்டுக்ககிட்ட ரோட்டுல அவ்வளவு இடம் கிடக்கே சைடுல கொஞ்சம் மரம் வைப்போம்னு வச்சா ஊருகாரப்பயலுவ அடிக்க வாறானுவ.இதுல மரம் வளர்ப்பாம் பாதுகாப்பாம் போங்கலே..என்றுவிட்டு மீண்டும் படுத்துவிட்டார்.நான் கோபமாக அவர் ஊர்காரர்களுக்கு ஓர் கெட்டவார்த்தையை தந்துவிட்டு எப்படிணே அது நம்ம பாதுகாப்புக்கு மரம் வைக்க எவன்ட்டண்ணே அனுமதிவாங்கணும் என
ஆஊவென கத்திவிட்டு எத்தனை மரம்ணே வச்சீங்கன்னேன்.ஆறு மரம் வச்சேம்பா என்றார். பரவாயில்லையே சூப்பர்ணே என்ன மரம்ணே வச்சீங்க..ஆறும் வாழைமரம்தான் தம்பி என்றார்...எனக்கு கிர்ர்ர்ருனு மண்டையில் ஏதோ ஏறியிச்சு ஒண்ணும் சொல்லாம சிகரட் பாக்கட்டை எடுத்துட்டு வெளியே வந்துட்டேன்..என்கூட பக்கத்துல இருந்தவர் சிரிப்புசத்தம் மட்டும் முதுகுப்பக்கம் கேட்டுட்டே இருந்துச்சு...
.
பிராணவாயுக்காக மரம் வைக்கிறதைப்பற்றி பேசிட்டு இருந்தா..பக்கி ரோட்டுல விவசாயம் பண்ண முயற்சி செய்துவிட்டு முடியல்லன்னதும் கோபமா வேறபேசுது....
.
எல்லாம் என் கூட்டுக்கட்டு..

No comments: