December 31, 2011

விவாகரத்துக்கு முக்கிய காரணம் பேஸ்புக்.

உலகம் முழுவதும் நடக்கும் மூன்றில் ஒரு விவகாரத்துக்கு சமூக இணையதளமான பேஸ்புக்தான் காரணம் என்று இங்கிலாந்து சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, விவாகரத்து சட்ட ஆலோசனை அளிக்கும் டைவர்ஸ் ஆன்லைன் நிறுவன நிர்வாக இயக்குனர் மார்க்கென்னன் கூறியுள்ளார்.


டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:கடந்த ஓராண்டில் பெறப்பட்ட விவாகரத்துகளில் 33 சதவீதவழக்குகளின் நீதிமன்ற வாதங்களில் பேஸ்புக் இடம்பெற்றது. எங்களிடம் வந்த விவாகரத்து தொடர்பான 5,000 புகார்களில் மூன்றில் ஒன்றில் பேஸ்புக் பற்றி மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.பேஸ்புக் பக்கங்களில் தங்கள் நண்பர்களுடன் பலர் மனம் திறந்து தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். அவற்றில் தங்கள் முன்னாள்காதல், கள்ளக் காதல், அலுவலக நட்பு ஆகியவை பற்றி தெரிவிக்கின்றனர்.


இவை வாழ்க்கை துணைக்கு தெரிய வரும்போது குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் விவாகரத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், பேஸ்புக் தொடர்புமூலம் கள்ளத் தொடர்பு ஏற்படுத்தவும், காதலை வெளிப்படுத்தவும் எளிதாக முடிகிறது. அதை வாழ்க்கை துணையிடம் இருந்து மறைக்க முயன்றாலும் நண்பர்கள் அல்லது பேஸ்புக் பக்கத்தில் தேடுவதன் மூலம் கணவர் அல்லது மனைவியால் கண்டுபிடித்து விட முடிகிறது. விவாகரத்து வழக்கில் பேஸ்புக் பதிவுகளை சாட்சியாக காட்டுவோர் அதிகரித்துள்ளதே இதற்கு சாட்சி. இவ்வாறு டெய்லி மெயில் செய்தி தெரிவிக்கிறது.


செய்திகள்.www.dinakaran.com




இதிலிருந்து என்ன தெரிகிறது சமூகத்தை பலப்படுத்தவும்,பலவீனப்படுத்தவும் பேஸ்புக்கால் முடிகிறது என்று காரணம் கொள்ளலாம்?

ஆட்சி மாற்றத்துக்கும் பேஸ்புக், வாழ்கை மாற்றத்துக்கும் பேஸ்புக் .

December 29, 2011

இந்திய அணியைப் பற்றி என்ன சொல்ல ஆனால் சொல்கிறோம்.

எப்பவாச்சும் இப்படின்னா பராவாயில்ல எப்பவுமே இப்படின்னா எப்படி!அந்த மாதிரி கதையாகிப் போச்சு இந்திய அணியின் நிலமை.எவ்வளவுதான் வக்காலத்து வாங்குறது அடுத்த தொடர் அதற்கடுத்த தொடரென்று ஒவ்வொரு முறையும் ஒரே முடிவுதான் பதிலாக இருக்கிறது .


நாங்க வெளிநாட்டு சுற்று பயணங்களுக்கு சரிபட்டு வரமாட்டோம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது இந்திய அணி.இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போதுதான் வீரர்களுக்கு காயம்,காலநிலை ஏற்புடையதாக இல்லை என்றார்கள்.இப்போது என்ன காரணம் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.அதற்கும் தகுந்த காரணம் யோசித்து வைத்திருப்பார்கள்.இந்திய ரசிகர்கள் மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த தொடர் இதுவென்றால் மிகையாகாது.ஏனென்றால் உலக கிரிக்கெட் அணிகளிலேயே வலிமையான அணி எதுவென்று நேற்று இங்கிலாந்து ரசிகரிடம் கேட்டால் கூட இந்திய அணிதான் என்று யோசிக்காமல் பதில் வரும்.அந்த அளவு வலிமையான அணியாக காட்சி தந்த இந்திய அணி மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான் ரசிகன்.


ஆனால் வலிமை என்ற அந்த பிம்பம் இவ்வளவு விரைவாகவும்,எழிதாகவும் உடைந்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கெதிரான முதல் போட்டி துவங்கு முன் இருந்த இந்திய ரசிகனின் மனநிலையும் இப்போது இருக்கும் மனநிலையையும் ஒப்பிட்டால் வேதனைதான் மிஞ்சும்.எப்படியும் டெஸ்ட் தொடரை மொத்தமாக வெல்வார்கள் என்று இறுமாந்திருந்தால் இந்திய அணியோ முதல் போட்டியில் படுகேவலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோற்றிருக்கிறது.ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றிருந்தால் கூட இந்த அளவிற்கு வெறுப்பு ஏற்பட்டிருக்காது.ஆனால் நாம் தோற்றதோ எண்பது சதவீதம் புது முக வீரர்களை கொண்ட அணியிடம் அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் கடந்த பெரும்பாலான போட்டிகளில் திறமையற்ற அணியாகவே செயல்பட்டிருக்கிறது.அப்படியிருந்த அணி எழுச்சி காண இந்திய அணி உதவியதா அல்லது இந்திய அணிதான் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா?இதற்கான பதிலும் இந்திய அணியிடமே இருக்கிறது.இந்திய அணி மேலும் மேலும் இது போன்ற தோல்விகளை சந்தித்துக்கோண்டிருந்தால் ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதான மோகம் மறைந்து வெறுப்பு ஏற்படத் துவங்கி விடும்.ஏறக்குறைய நான் வெறுப்படையும் நிலைக்கு வந்து விட்டேன்.அடுத்த போட்டி என்றைக்கு என ஊடகங்கள் டமாரம் அடிக்காதவரை கிரிக்கெட் ரசிகன் தப்பினான்.
முதலில் ஊடகங்கள் மீண்டும் ஏமாற்றினார் சச்சின் என்ற வாசகத்தை அழித்து விட வேண்டும்.சச்சின் நூறாவது சதம் அடிக்குறாரோ இல்லையோ ஆனா இந்த ஊடகங்களுக்கு விரைவிலேயே உயர் இரத்த அழுத்தம் வந்துவிடும் அப்படி இருக்கிறது ஊடகங்களின் அலப்பரை.

December 27, 2011

இந்தியாவின் பிரம்மாண்டமான சில அணைகள்.

அணை என்பது வெறும் நீர் தேக்கத்தோடு முடிந்து போவதில்லை.அதில் கோடிக் கணக்கானோரின் வாழ்வாதாரமே நிறைந்துள்ளது.விவசாயத்திற்கும், குடிநீருக்காகவும் பல பகுதி மக்கள் அணைகளையே நம்பி உள்ளனர்.விதிவிலக்காக சில அணைகள் மின் உற்பத்தி செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் நூற்றுக்கணக்கான அணைகள் இருக்கிறது அதில் பிரம்மாண்டமான சில அணைகளின் தகவல்கள் இதோ.


பாக்ரா அணை


இமாச்சல பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்த அணை சட்லெட்ஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டதாகும்.பாக்ரா அணையின் உயரம் .741 அடி (226 மீ)நீளம்.1,700 அடி (520 மீ)உடையதாகும்.



தெக்ரி அணை



இந்த அணை உத்தரகண்ட் மாநிலத்தில் பகீரதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும்.இதன் உயரம்.
உயரம் 260 மீ (850 அடி)

நீளம் 575 மீ (1,886 அடி)
நீர் கொள்ளளவு.(2,100,000 ஏக்கர்.
அணையின் கட்டுமான பணிகள் 1978 ஆம் ஆண்டு துவங்கி 2006 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.


ஹிராகுட் அணை



இந்த அணை ஒடியா மாநிலத்தில் அமைந்துள்ளது.இந்த நதி மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.இதன் உயரம் 61 மீ(200 அடி)நீளம்.4800 மீட்டர் ஆகும்.


நாகார்ஜுன் சாகர் அணை


ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த அணை கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.ஐம்பதுகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் செலவு சுமார்1300 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.அணையின் உயரம். 124 மீட்டர் (407 அடி)நீளம்.1450 மீட்டர் (4,757 அடி.


சர்தார் சரோவார் அணை




இந்த அணை குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது.நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.இதன் உயரம்.138 மீட்டர் (453 அடி)நீளம்.1210 மீட்டர்,3970 அடி ஆகும் .இந்த அணை 2008 ஆம் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.