February 1, 2013

இனியொரு ஆயுதம் வேண்டாம்.

என்ன உலகமோ,என்ன மக்களோ ஒண்ணுமே புரியல எழுநூறு கோடி மக்கள் தொகையில் அதே
அளவு ஜாதிகளும் ,மதங்களும்,மொழிகளும்,கலாச்சாரமும்,ஏற்றத்தாழ்வுகளும்
வியாபித்து அதில் கட்டுண்டு கிடக்கின்றனர்.இதற்கு காரணமாக நாம் பலவற்றை
அணுகலாம் ஆனால் எதனிடத்திலும் திருப்திகரமான பதில் பெற்றுவிட முடியாது
வினாவே விழும்பில் நிற்கும்.அந்த வினாவில்தான் நாம் ஒளிந்துகொண்டு
வியாக்யானம் பேசிக்கொண்டிருக்கிறோம்.பதில் தராத எல்லா கேள்விகளும் நமக்கு
சாதகமாகிறது அல்லது அதற்கு புது அர்த்தங்கள் கற்பித்து
நம்முடையதாக்குகிறோம்.அந்த புதுப்புது அர்த்தங்கள்தான் இன்றளவும் மனிதன்
என்ற மிருகத்திடம் குடி கொண்டிருக்கிறது.அதை அவரவற்கு விருப்பமான
நிறங்களில் சாயம் பூசி இன்னும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறோம்.சாயம்
வெழுக்கும்போதெல்லாம் நஞ்சு தோய்த்த சாயத்தை இன்னும் கடுமையாக பூசி
மொழுகுகிறோம்.வினாவில் மறையவே விரும்புகிறோமேயொளிய பதிலை தேட நாம்
முனைவதில்லை.
பதில் கிடைத்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.காரணம் வினாவில்
இருந்தே பழகிவிட்டோம்.அந்த வட்டத்தில் இருந்து வெளிவர நாம்
முயற்சித்ததேயில்லை.




சக உயிர்களான மிருகங்களை ஆயுதங்களால் அடக்கியாள முடிந்த நம்மால் நம்மை
எந்த ஆயுதம் கொண்டும் அடக்க முடியவில்லை.அதற்கான தேடலில் கிடைத்ததுதான்
ஜாதி,மதம் என்ற இரு பெரும் ஆயுதங்கள் .அதைக்கொண்டு எளிதாக பலச்சாதனைகளை
புரிந்து காட்டினோம்.இன்றும் காட்டிக்கொண்டிருக்கிறோம்.அந்த ஆயுதங்களைப்
பற்றி கேள்வி கேட்டால் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்று என்று
மழுப்பினோம்.அந்த கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்றால் எவ்வளவோ பிரச்சனைகள்
யுத்தங்களாக மாறியிருக்கின்றன.இருந்தாலும் நாம் திருந்தமாட்டோம்
ஏனென்றால் அழிவு வலியதாக இருந்தாலும் கண்டுபிடிப்பு நமதாயிற்றே.எப்படி
நம் ஆயுதத்தை நாமே குறை கூறமுடியும்.ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு
ஆயுதத்தை தன்னுடன் வைத்துக்கொள்ள நிர்பந்திக்கப்டுகிறான்.பெரும்பாலும்
அவன் அனுமதி இங்கு அவசியப்படுவதில்லை.அவன் அறியாமாலே ஆயுதம் அவனுள்
சொருகப்பட்டு விடுகிறது.சொருகப்பட்டதை அவ்வளவு எளிதில் எடுத்து எறிந்து
விட முடியாது.அது அவன் மூளையின் அடிவரை பாய்ந்திருக்கிறது.மூளையை பதம்
பார்க்காமல் ஆயுதத்தை பிரித்தெடுக்க தேவைப்படுவது மற்றொரு ஆயுதமல்ல
கேள்விக்கான பதில்.

இப்படிக்கு,
இ.புதியவன்.