December 19, 2011

கை உடைந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா.

அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் அ.தி.மு.,க வில் இருந்து மொத்தம் 12 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார்.சசிகலா,


நடராஜன், தினகரன், சுதாகரன், திவாகர் ,பாஸ்கரன்,ராமசந்திரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன்,ராவணன், மோகன் உள்ளிட்ட 12 பேரும் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அவர் மேலும் இந்த 12 பேருடன் கட்சிக்காரர்கள் யாரும் இனி எவ்வித தொடர்பும் கொள்ள கூடாது என்று கடும் எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளார். 12 பேரும் சசியின் நெருங்கிய வட்டாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் மகிழ்ந்திருப்பார்கள்.அந்த அளவுக்கு அ.தி.மு.க வில் சசிகலா குடும்பத்தாரின் ஆதிக்கம் இருந்து வந்தது.பல ஆண்டுகளுக்கு முன்னரே இதை பிரபல பத்திரிகைகள்,வார இதழ்கள் போன்றவை வெளிப்படையாக சுட்டிகாட்டியப் பின்னரும் ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை.ஆனால் இப்போது யாரும் எதிர்பாரா வண்ணம் அனைவரும் அதிர்ச்சியடையம் விதத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.உண்மையில் ஜெயலிலிதா ஒரு கை அல்ல இரு கையும் உடைந்த நிலையில் இருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இது மகிழ்ச்சியான விசயமாக இருந்தாலும்,முதல்வரைப் பொறுத்தவரை இது இளப்புதான்.தொண்ணூறுகளில் ஒற்றை பெண்மணியாய் போராடிய காலத்தில் ஜெயலலிதாவுக்கு பக்கதுணையாகவும்,ஆதரவாகவும் இருந்தவர் சசிகலா என்பது எவராலும் மறுக்க முடியாது.இன்று முதல் ஒரு வாரத்துக்கு ஊடகங்களுக்கும்,இணைய பதிவர்களுக்கும் இதைப்பற்றி ஆராயவே பொழுது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.தற்போது தமிழகத்தில் நடந்த நடைப்பெற்றுக்க கொண்டிருக்கிற நிகழ்வுகளால் பொதுமக்களிடம் கெட்டப்பெயரை வாங்கி வைத்திருக்கும் முதல்வர் இனிமேலாவது நற்பெயரை சம்பாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.