January 6, 2012

டைட்டானிக் கப்பல் ஒரு பார்வை.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் அதுபோல் நூறு ஆண்டுகளுக்கு முன் தாயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான கப்பலான டைட்டானிக்கை குறிப்பிடலாம்.கப்பல் அட்லாண்டிக்கடலில் பயணம் செய்த போது எதிர்பாராத விதமாக பெரிய பனிப்பாறையின் மீது மோதியதால் விபத்துக்குள்ளானது.அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான டைட்டானிக் உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை புரிந்தது.இப்போது அட்லாண்டிக் கடலில் 100 ஆண்டுக்கு முன் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் கிடைத்த 5,000 அரிய பொருட்கள் அந்த கப்பலின் 100 வது ஆண்டு நினைவை முன்னிட்டு ஏப்ரலில் ஏலம் விடப்படுகின்றன. கப்பலில் பொருத்தி இருந்த கலை நயமிக்க பாகங்கள், பயணிகளின் பர்ஸ், கூலிங் கிளாஸ்கள், உடைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் உள்பட பலபொருட்கள் ஏலத்துக்கு தயாராக உள்ளன.இவை 2007 ஆம் ஆண்டு ரூபாய் 1000 கோடிக்கு மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் டைட்டானிக் கப்பல் பற்றிய சில தகவல்கள்.




டைட்டானிக் உலகின் மிகப்பெரிய முதல் பயணிகள் சொகுசு கப்பலாகும்.

டைட்டானிக்கின் முழுப்பெயர்.ஆர்.எம்.எஸ். டைட்டானிக்,

உரிமையாளர்: வைட் ஸ்டார் லைன்,

கட்டப்பட்ட துறைமுகம்: பெல்பாஸ்ட் அயர்லாந்து.
கட்டியோர்: ஹார்லண்ட்மற்றும் வூல்ஃப்,


டைட்டானிக்கின் கட்டுமானப் பணி மார்ச் 31 , 1909 ஆம் ஆண்டில் துவங்கி மே 31 , 1911 ஆம் முடிவடைந்தது.
ஏப்ரல் 10 , 1912 ஆம் ஆண்டு தன் முதல் பயணத்தை துவங்கிய டைட்டானிக் பயணம் துவங்கிய ஐந்தே நாட்களில் விபத்துக்குள்ளானது.
(ஏப்ரல் 15 , 1912)





கப்பலின் மொத்த எடை: 52,310 டன்(5,23,10,000 கிலோ)
நீளம்: 882 அடி
அகலம்: 92 அடி,ஆகும். விபத்து நேர்ந்த போது கப்பலில் பணிபுரிந்த பணியாளர்கள் உட்பட மொத்தம் 2,223 பேர் இருந்தனர் இதில் 706 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர் .ஏனய 1517 நபர்கள் இறந்து விட்டனர்.



ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் கப்பலை மையமாக வைத்து டைட்டானிக் திரைப்டடத்தை உருவாக்கி 1997 நவம்பர் 1 ல் வெளியிட்டார்.அந்த காலக்கட்டத்தில் அதிக பணச்செலவில் உருவாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான்.ஏறக்குறைய 200 மில்லியன் டாலர்.



தகவல்கள்.விக்கிப்பீடியா

January 4, 2012

சென்னைக்கு வருகிறது பிளாஸ்டிக் சாலைகள்.

சென்னையில் 1498 உட்புற சாலைகள், பேருந்துகள் செல்லும் சாலைகள் 118 என 1616 சாலைகள் 370 கி.மீ. தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலைகளாக ஆக்கப்படவுள்ளது. இதற்கான மொத்த செலவு ரூ.109.72 கோடி.



குப்பைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் கேரி பேக், டீ கப், தெர்மாகோல், ஆவின் கவர், சோப்பு தூள் அடைக்கப்பட்டபிளாஸ்டிக் கவர்கள் ஆகிய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படும். இவை அனைத்தும் இயந்திரத்தின் மூலம் 2 முதல் 3 மி.மீ. அளவிற்கு துகள்களாக மாற்றப்படும். இந்த துகள்கள் மிக்சின் மிஷினில் போட்டு கருங்கல் ஜல்லியுடன் கலக்கி சூடாக்கப்படும்.
இத்துடன் தார் கலவை கலந்து சாலை அமைக்கப்படும். இப்படி அமைக்கப்படும் சாலை தரமானதாகவும், பராமரிப்புசெலவு குறைவானதாகவும், நீண்ட காலம் நீடித்தும் இருக்கும். குப்பைகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலை அமைப்பதற்கானசெயல் விளக்க கருத்தரங்கமும், பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும் தி.நகரிலுள்ள சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கில் நேற்று நடந்தது.



தி.நகர் லட்சுமணன் சாலையில் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் பணியை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
குப்பைகளை அகற்றுவது, சாலைகள் சீரமைப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு துறை வாரியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் சாலை அமைத்தால் தரமாக இருக்கும். பொருளாதார ரீதியாக செலவும் மிச்சமாகும். குப்பைகள் இனி கண்ணுக்கே தெரியாத அளவிற்கும், தரமான சாலைகள் அமைக்கவும் மாநகராட்சி முன்னோடியான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. மிகவிரைவில் குப்பையில்லாத, மழைநீர் தேங்காத சென்னையாக உருவாக்கப்படும். இவ்வாறுமேயர் பேசினார்.

செய்திகள்.www.dinakaran.com


இது நிச்சயமாக சென்னைவாசிகளுக்கு நல்ல செய்திதான் குப்பைகளால் மூழ்கி கிடக்கும் சென்னை இனிமேலாவது குப்பையிலிருந்து வெளிவருகிறதா என்று பார்க்கலாம்.மேலும் ஒரு சிறு தகவல் சென்னை புறநகரில் ஒரு தனியார் தொழிர்சாலையில் பிளாஸ்டிக் பைகளை மறு சுழர்ச்சி செய்து குரூட் ஆயில்(கச்சா எண்ணெய்)தாயாரிக்கிறார்கள்.அதில் இருந்து மண்ணெண்ணெய் ,பெட்ரோல் ,டீசல் போன்ற எரிபொருட்களை தனி தனியே பிரித்தெடுக்கிறார்கள்.இதன் நேரடி நிகள்ச்சி சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

January 3, 2012

முல்லைப் பெரியாறு அணையின் கதை.

முல்லை பெரியாறு அணை குறித்து பொது மக்களிடையே விளிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கம் சார்பில் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.முல்லைப் பெரியாறு அணை எதற்காக,எப்போது,எந்த சூழ்நிலையில்,யாரால் கட்டப்பட்டது போன்ற விளக்கங்களும்,எண்பதுகளில் அணை எப்படி நவீனமுறைகளில் பலப்படுத்தப்பட்டது என்ற ஆதாரங்களும் இந்த ஆவணப்படத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.இந்த ஒலி ஒளிக் காட்சிகளைப் பார்ப்பது மூலம் முல்லைப் பெரியாறு அணையின் வரலாறையும்,பிரச்சனைகளயும் அறிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.




பகுதி.1



பகுதி.2




பகுதி.3



பகுதி.4


2011 ல் வெளியான தமிழ் திரைப்படங்களின் பட்டியல்.

2011 ஆம் ஆண்டு மொத்தம் 190 திரைப்படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன.இதல் 128 திரைப்படங்கள் நேரடி தமிழ்ப் படங்களாகவும் மற்றவை மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட திரைப்படங்களாகவும் வெளி வந்தன.தமிழில் வெளியான 128 திரைப்படங்களில் கிட்டத்தட்ட 50 திரைப்படங்களின் பெயர்களை படிக்கும் போது இந்த பெயர்களில் ஒரு படம் திரைக்கு வந்ததா என ஆச்சர்யப்பட்டுத்தான் போனேன்.இப்போது நல்ல படம் எது நொள்ளப் படம் எது என்று கருத்து கூற வரவில்லை.போன வருடம் தமிழில் வெளியனான திரைப்படங்களின் பெயர்களை ஞாபகப்படுத்திப் பார்க்கலாம் என்றுதான்.


1)தமிழ் தேசம்,
2)சிறுத்தை,
3)ஆடுகளம்,
4)சொல்லித்தரவா,
5)இளைஞன்,
6) காவலன்,
7)பதினாறு,
8)பழகியதே பிரிவதற்கா,
9)வாடா போடா நண்பர்கள்,
10)யுத்தம் செய்,
11)தூங்கா நகரம்,
12)கருவறைப் பூக்கள்,
13)வர்மம்,
14)பயணம்,
15)இது காதல் உதிரும் பருவம்,
16)நந்தி,
17)தம்பிக்கோட்டை,
18)காதலர் குடியிருப்பு,
19)ஆடுபுலி,
20)மார்கழி 16,
21)தப்பு,
22)சீடன்,
23)ஆரானின் காவல்,
24)சிங்கம் புலி,
25)பவானி,
26)அய்யன்,
27)ஐவர்,
28)அவர்களும் இவர்களும்,
29)மின்சாரம்,
30)முத்துக்கு முத்தாக,
31)லத்திகா,
32)குமரா,
33)சட்டப்படி குற்றம்,
34)குள்ளநரி கூட்டம்,
35)சிங்கையில் குருஷேத்திரம்,
36)படைசூழ,
37)அப்பாவி,
38)இதயத்தில் ஒருவன்,
39)தென்காசி பக்கத்துல,
40)நஞ்சுபுரம்,
41)பொன்னர் சங்கர்,
42)தேவதாசியின் கதை,
43)விகடகவி,
44)கோ,
45)காதல் மெய்ப்பட,
46)வானம்,
47)பூவா தலையா,
48)பாசக்கார நண்பர்கள்,
49)எங்கேயும் காதல்,
50)நர்த்தகி,
51)சங்கரன் கோவில்,
52)அழகர்சாமியின் குதிரை,
53)கண்டேன்,
54)மைதானம்,
55)சுட்டும் விழி சுடரே,
56)சபாஷ் சரியான போட்டி,
57)எத்தன்,
58)ஒரு சந்திப்பில்,
59)ஆண்மை தவறேல்,
60)சாந்தி அப்புறம் நித்யா,


61)ஒத்தையடி வீரன்,
62)ஆரண்ய காண்டம்,
63)அவன் இவன்,
64)பிள்ளையார் தெரு கடைசி வீடு,
65)இருளில் நான்,
66)நூற்றெண்பது,
67)அநாகரீகம்,
68)உதயன்,
69)திருட்டு புருஷன்,
70)சின்னஞ்சிறுசுகள்,
71)தேநீர் விடுதி
72)வேங்கை,
73)தெய்வத்திருமகள்,
74)காஞ்சனா,
75)மார்கண்டேயன்,
76)வெப்பம்,
77)கருங்காலி,
78)போடிநாயக்கனூர்கணேசன்,
79)போட்டா போட்டி,
80)ராமநாதபுரம்,
81)டூ,
82)சுசி அப்படித்தான்,
83)ரௌத்திரம்,
84)உயர் திரு 420,
85)சகாக்கள்,
86)கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை,
87)வெங்காயம்,
88)முதல் இடம்,
89)மிட்டாய்,
90)உன்னை கண் தேடுதே,
91)புலிவேஷம்,
92)யுவன் யுவதி,
93)காசேதான் கடவுளடா,
94)மதிகெட்டான் சாலை,
95)எங்கேயும் எப்போதும்,
96)வந்தான் வென்றான்,
97)ஆயிரம் விளக்கு,
98)வாகை சூட வா,
99)வேலூர் மாவட்டம்,
100)வர்ணம்,
101)ரா ரா,
102)சதுரங்கம்,
103)முரண்,
104)காதல் அல்ல அதையும் தாண்டி,
105)உயிரின் எடை 21 அயிரி,
106)கீழத்தெரு கிச்சா,
107)7ஆம் அறிவு,
108)வேலாயுதம்,
109)காதல் கொண்ட மனசு,
110)ஆயுதப் போராட்டம்,
111)திகட்டாத காதல்,
112)தம்பி வெட்டோத்தி சுந்தரம்,
113)நான் சிவனாகிறேன்,
114)கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்,
115)வித்தகன்,
116)மருதவேலு,
117)மயக்கம் என்ன,
118)பாலை,
119)ஒத்திகை,
120)போராளி,
121)குருசாமி,
122)வெண்மணி,
123)ஒஸ்தி,
124)மம்பட்டியான்,
125)உச்சிதனை முகர்ந்தால்,
126)மௌனகுரு,
127)ராஜபாட்டை,
128)மங்காத்தா

இவை கடந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களின் பட்டியல் ஆகும்.



தகவல்.www.dinakaran.com

January 2, 2012

ஆனந்த விகடனின் ராஜபாட்டை திரைவிமர்சனம்.

ரீல் வில்லன் கனவுடன் இருக்கும் விக்ரம் ரியலில் ஹீரோ ஆவதுதான் ராஜபாட்டை.நில அபகரிப்பு வில்லன்களை சினிமா ஸ்டன்ட் ஆர்டிஸ்ட் விக்ரம் சுளுக்கு எடுப்பதே கதை.
முதல் மூன்று படங்களில் வெரைட்டியாக வெளுத்துக்கட்டிய இயக்குநர் சுசீந்திரன் திரிஷ்டி பட்டு இருக்குமோ என நினைத்து இந்த படம் எடுத்திருப்பார் போல.


படம் முழுக்க மாஸ் மசாலா நெடி. படத்தில் ஹீரோ எங்கு சீரியசாக நடிக்கிறார்,எங்கு காமடியாக செய்கிறார் என்று கண்டு பிடிப்பவர்களுக்கு பம்பர் பரிசே தரலாம்.அந்த அளவுக்கு பல காட்சிகள் இது காமடியா சீரியசா என்ற குழப்பத்திலேயே கடந்து போகிறது.உதாரணத்துக்கு விதவிதமான சி.பி.ஐ அதிகாரிகள் வில்லனை வைத்து விசாரிக்கும் யுக்தி.காமடி ஸ்கோப் கொண்ட இந்த சீனில் விக்ரம் தசாவதார வெறிகொண்டு அடுத்தடுத்து போடும் வேசங்களால் அது இது எது என கிறுகிறுக்கிறது நமக்கு.தெய்வத்திருமகள் நடித்து டயர்டு ஆகிட்டாரோ? விக்ரமுக்கு இந்தப் படம் ஜாலி பிக்னிக்.படிக்கட்டு தாடி வைத்து,தலைமுடியைக் கலைத்து விட்டதோடு சரி.ஆனால் மனிதர் உடலை அலட்சியமாக முறுக்கி ஆர்ம்ஸ் ஏற்றி அடியாட்களை பந்தாடும் காட்சிகளில் திரையில் மட்டுமல்லாமல் தியேட்டரிலும் அதிர்கிறது.ஆனால் அதற்காக மட்டுமே பார்ப்பதற்கு இது அர்னால்ட் படம் இல்லையே பிரதர்!


ஹீரோயின் தீக்சா சேத். நெடுநெடு உயரத்தில் கிடுகிடு அழகில் கிறங்கடிக்கிறார்.படத்தில் அவருக்கு அரிய அரிய அரிய கேரக்டர் என்பதால் சிறிய சிறிய சிறிய டயலாக் கூட இல்லை.முதல்ல அம்மாவைப் பாரு அப்புறம் மகளைப் பாரு என்று ஃபிகர் கரெக்ட் பண்ண ஐடியா கொடுக்கும் கே.விஷ்வநாத் ஏரியாவில் மட்டுமே சுசீந்திரன் டச்.அக்காவாக வரும் சனா(அறிமுகம்)பாந்தமான குடும்ப தலைவி மாதிரி இருக்கிறார்.ஆனால் ஆன்ட்டி உதடு துடிக்க கோபப்படும் காட்சிகளில்கூட பளிச் அழகு.டெரர் ஃபீலிங்குக்குப் பதில் ஃபிகர் ஃபீலிங்கே கொடுக்கிறது.அடுத்த வேளை ஷுட்டிங் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியாத விக்ரம் அண்ட் கோ,எதிர்கால முதல்வரோடு மோதி ஜெயிப்பது லாஜிக் இல்லாத மேஜிக். ஒரு வீடியோ கேசட்டை வைத்துக்கொண்டு ஹீரோ அரசியல்வாதிகளின் அம்பாரம் சாய்ப்பது,டிவியில் வரும் மக்கள் பேட்டி,கோர்ட்டுக்கு வெளியே மக்கள் எழுச்சி போன்ற 90களின் மசாலா இம்சைகளை இன்னும் எத்தனை நாளைக்குதான் தாளிப்பீங்க பாஸ்?படத்தில் அடுத்தடுத்து வரும் ஆக்ஸன் காட்சிகளை போஜ்பூரி சிறுவன் கூட யூகித்து விடுவான்.யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஒவ்வொரு பாடலும் மினி இடைவேளை.மதியின் ஒளிப்பதிவில் வரும் மழை இரவுச் சண்டை அபாரம்.தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்கான நில அபகரிப்புதான் கதையின் கரு என மாஸ் படத்துக்கான அயிட்டங்கள் அத்தனையும் இருந்தும் மிஸ் செய்த மாயம் என்ன? அட படம் முடிந்து விட்டது எனக் குதுகலமாக எழுந்தால், ஸ்ரேயா,ரீமா சென் ஆடும் குத்துப்பட்டை போடுகிறார்கள்.!

என்னா ஒரு கொல வெறி?!



நன்றி..
விகடன் விமர்சனக் குழு..
ஆனந்த விகடன்.

குட்டி குட்டித் தகவல்கள்.

பி.எம்.டபிள்யூ.


உலகின் முன்னணி விலை உயர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ சென்னை கிளையில் தனது இருபதாவது ஆயிரம் காரை தயாரித்திரிக்கிறது.2007 ஆம் சென்னை தொழிர்ச்சாலையில் உற்பத்தியை தொடங்கிய போது ரூ 110 கோடியை முதலீடு செய்திருந்தது.ஆரம்பத்தில் ஆண்டுக்கு மூன்றாயிரம் கார்கள் என்று இருந்த அதன் உற்பத்தி திறன் இப்போது பதினொன்றாயிரம் கார்கள் என்ற விகிதத்தில் உயர்ந்திருக்கிறது.தற்போதைய காலக்கட்டத்தில் சுமார் 5400 கார்களை ஆண்டொன்றுக்கு தயாரிக்கிறது சென்னை பி.எம்.டபிள்யூ நிறுவனம்.உலகெங்கும் மொத்தம் உள்ள 24 கிளைகளில் சென்னையும் ஒன்று.சென்னை தொழிர்சாலையில் சுமார் 400 ஊழியர்கள் பணி யாளர்கள் பணி புரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பி.எம்.டபிள்யூ நிறுவனம் கார் தயாரிப்போடு மோட்டார் சைக்கிள்களையும் தயாரிக்கிறது விரைவில் தமிழ்நாட்டிலும் தன் இருசக்கர வாகன விற்பனை சந்தையை ஏற்படுத்தும் என எதிர்பாக்கப்படுகிறது.


பணம்.


இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தன் கையில் வைத்திருக்கும் இருக்கும் டாலர்கள் 300பில்லியன் .தோராயமாக ரூ 15,60,000 கோடி.


சரியும் பண மதிப்பு.


கடந்த 12 மாதங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு டாலருக்கு நிகரனா ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்துள்ளது.2011 ஜனவரியில் 44.67 ஆக இருந்த டாலரின் இந்திய மதிப்பு டிசம்பர் 2011 ல் 53 என சரிந்தது.இதற்கு காரணமாக இந்தியாவலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறுவதை குறிப்பிடுகிறார்கள்.




திருவிழா ஆரம்பம்.


தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி புதுத் திரைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.குறைந்த பட்சம் ஐந்து திரைப்படங்களாவது வெளியாகும்.ஆனால் இந்த வருடம் இரண்டு திரைப்படங்கள்தான் வெளியாகும் என தெரிகிறது.ஷங்கரின் நண்பன் திரைப்படமும்,லிங்குசாமியின் வேட்டை திரைப்படமும் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.இதில் நண்பன் திரைப்படம் சென்னையில் 25 திரையரங்குகளிலும், வேட்டைத் திரைப்படம் 20 திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது.

பாரதி


மகா கவி பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் மற்றும் அவரைப் பற்றி எழுதப்பட்ட படைப்புகள் ஆகியவற்றையையும் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்டுகிறது.இதற்காக பாரதியின் 130 ஆவது பிறந்த நாளான 2011 டிசம்பர் 11 ஆம் தேதி மகாபாரதியார்.இன்ஃபோ என்ற இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.இத்தளத்தில் உள்ள தகவல்களையும் விவரங்களையும்,புகைப்படங்களையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இணையதளத்தின் நிறுவனர்.தஞ்சாவூர் பாரதி தமிழ் சங்கத்தின் தலைவர் .வி.எஸ் .ராமலிங்கம்.



விருது.


2011 மே மாதத்தில் யுண்டாய் நிறுவனம் புதிய ரக வெர்னா காரை அறிமுகப்படுத்தியது.மார்ச் முதல் டிசம்பர் வரை மொத்தம் 34,000 கார்கள் நாடு முழுவதும் விற்று தீர்ந்திருக்கிறது.அது மட்டுமல்லாமல் என்.டி.டிவியின் கார் ஆப் த இயர் விருதையும் பெற்றிருக்கிறது.மேலும் 2011 ஆண்டிற்கான சிறந்த சிறிய ரக கார், சிறந்த வடிவமைப்பு,சி.என்.பி வியூவர்ஸ் சாய்ஸ் ஆகிய மூன்று தலைப்புகளிலும் தனி தனியே விருதுகளை தட்டிச்சென்றிருக்கிறது வெர்னா.




அசிங்கப்பட்டான் அமெரிக்கா காரன்.



புத்தாண்டன்று வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்ற மூன்று அமெரிக்கர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளார்கள்.படுகாயம்டைந்த அவர்களில் ஒருவர் தப்பித்து ஓடிவிட மற்ற இருவரையும் பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.இச்சம்பவம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது.



தகவல்கள்.இந்திய டுடே,ஆனந்த விகடன்,தினமலர்.

January 1, 2012

ரஜினி எனும் அபூர்வ பிறவி , கலைஞானம் .

திரையுலகில் அரிதான மனிதர்களில் ஒருவர் கலைஞானம். ரஜினியை முதன்முதலில் ஹீரோவாக ஆக்கிய பெருமை. அந்தப் படத்திலேயே அவர் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
திரையுலகப் பயணத்தில் கலைஞானம் பார்க்காத ஏற்றத் தாழ்வுகள் இல்லை. ஆனாலும் ரஜினி, பாக்யராஜ் என தேர்ந்தெடுத்த ஜாம்பவான்களின் நெருக்கத்துக்குரியவராக தொடர்கிறார் கலைஞானம். யாரும் எப்போதும் எளிதில் அவரை அணுக முடியும். பலமுறை அவருடைய திரையுலக அனுபவங்களை அவரே சொல்லக் கேட்ட அனுபவம் நமக்குண்டு. 37 ஆண்டுகள் ரஜினிக்கு நெருக்கமானவராகத் திகழும் பெருமைக்குரியவர்

.
ஆனாலும் ரஜினி பிறந்த நாளுக்காக விகடனில் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள், ஒரு ப்ளாஷ்பேக் பயணம் மாதிரி இருந்தது.
அதை இங்கே தருகிறோம்.
‘சார் இவரோட பேர் கலைஞானம். இவர்தான் என்னை முழுசா நம்பி முதன்முதலா ‘பைரவி’ படத்துல ஹீரோ சான்ஸ் கொடுத்தார்…’ இப்படித்தான் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் வி.வி.ஐ.பி-க்களிடம் கலைஞானத்தை அறிமுகபடுத்துவார், சூப்பர் ஸ்டார் ரஜினி. இரண்டு நபரைக் கண்டால் மட்டும் சட்டென்று எழுந்து நிற்பார். வாசல்வரை வந்து வழியனுப்புவது ரஜினியின் வழக்கம். ஒருவர் கே.பாலசந்தர்… இன்னொருவர் கலைஞானம்.
குடும்ப விஷயங்கள் முதல் ‘கோச்சடையான்’ படம்வரை அனைத்தையும் கலைஞானத்துடன் கலந்து ஆலோசிப்பார், ரஜினி. ‘பைரவி’முதல் ‘கோச்சடையான்’வரை ரஜினிபற்றி நமக்கு தெரியாத இன்னொரு பக்கத்தை நம்மு
டன் பகர்கிறார், கலைஞானம்.



‘முதன்முதலா ‘பைரவி’ படத்தை தயாரிச்சேன், அதுக்கு படத்துக்கு பைனான்ஸ் உதவி செஞ்சவர், தேவர். ஒருநாள் ‘ஏண்டா நீ தயாரிக்குற படத்துக்கு ஹீரோ யாருடா..?’ என்று தேவர் கேட்டார்.
‘ரஜினிகாந்த்…’ என்றேன்.
‘ வில்லனா நடிக்கிற ஆளை ஹீரோவா போடுறியே. தப்பான முடிவா தெரியுது…’
‘ ரஜினியை ‘ஆறு புஷ்பங்கள்’ படத்துல பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்.. நீங்க வேணா பாருங்க, அவர் நிச்சயமா பெரிய நடிகரா ஜெயிப்பார்’னு அவர்கிட்டே சொன்னடோட நிற்கலை.. என்னோட முடிவுல இருந்தும் நான் மாறலை. 1978 ஜனவரி மாசம் ‘பைரவி’ படத்துக்கு பூஜை போட்டேன். தேவர் தலைமை தாங்க, சிவாஜி குத்துவிளக்கு ஏற்றினார். ஒருவழியா ‘பைரவி’ படம் ரிலீஸாச்சு.



முதல்நாள் மேட்னி ஷோ ராஜகுமாரி தியேட்டர்ல ‘பைரவி’யை நானும் தேவரும் பார்த்தோம். வெள்ளித்திரையில ரஜினி காட்டுன விதவிதமான ஸ்டைலுக்கு, ஜனங்ககிட்டே இருந்து பயங்கர கைத்தட்டல். முக்கியமா ரஜினியும், பாம்பும் சேர்ந்து நடிக்கிற சீனுக்கு ஏகோபித்த வரவேற்பு.
அதன்பின், ரஜினியும் பாம்பும் சேர்ந்து நடிச்சா சென்டிமென்ட்டா படம் சக்ஸஸ். அப்புறமா வெளிவந்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ ‘அண்ணாமலை’ ‘படையப்பா’ இப்படி ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கு.
‘பைரவி’ படத்தை பார்த்த தேவர் ஆச்சர்யத்துல அசந்து போனார். ‘கலைஞானம்… நான் ரஜினி நடிப்பை பத்தி தப்பா எடை போட்டுட்டேன்… உடனே ரஜினிய கிளம்பி வீட்டுக்கு வரச்சொல்…’ என்றார். அடுத்த சில நிமிஷத்தில் ரஜினி, தேவர் வீட்டில் ஆஜர்.
எவ்வளவோ வற்புறுத்தியும் சோபாவில் உட்காராமல் தேவர் முன்பு நின்று கொண்டே இருந்தார், ரஜினி! ‘கலைஞானம் ‘பைரவி’ படத்துக்கு ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தே..?’ என்னைப் பார்த்து தேவர் கேட்டார். ‘ஐம்பதாயிரம் ரூபாய்…’ என்றேன்.
தேவர் தனது உதவியாளரை அழைத்து காதில் கிசுகிசுத்தார். அடுத்த சில நோடிகளில் சூட்கேஸில் கட்டுக்கட்டாய் கரன்சியை நிரப்பி தூக்க முடியாமல் எடுத்து வந்தார், உதவி. ‘ அடுத்து நான் தயாரிக்க போற ரெண்டு படத்துலயும் நீதான் ஹீரோ… இந்தாப்பா ரஜினி, அதுக்கான சம்பளம் இது! பத்தலைன்னா இன்னும் வாங்கிக்கோ… சொந்தமா வீடு இருக்கா? நான் வேணா வாங்கி தரட்டுமா…’ தேவர் சொல்லச் சொல்ல திகைச்சு போயிட்டார், ரஜினி. அந்தக் காலத்துல நிறைய ஹீரோக்களுக்கு தேவர் வீடு வாங்கி கொடுத்து இருப்பது தனிக்கதை.


தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘தாய்மீது சத்தியம்’ ‘அன்னை ஒர் ஆலயம்’ படங்கள் வெளிவந்துச்சு. தேவரின் செல்லமான ஹீரோவாயிட்டார், ரஜினி. அந்த நேரத்துல தேவர் பிலிம்ஸ்ல கமல் நடிக்கிற ‘தாயில்லா குழந்தை’ படம் தயாராச்சு. ‘என்னை ஏன் நடிக்க கூப்பிடல…’ என்று ரஜினி தேவர்கிட்டே செல்லமா கோபிச்சுக்கிட்டார். அதன்பிறகு தானே வலியபோய் உரிமையா கேட்டு கமலோட ‘தாயில்லாமல் நானில்லை’ படத்துல கெஸ்ட் ரோல்ல நடிச்சார், ரஜினி. அந்தளவுக்கு தேவர் பிலிம்ஸோட நெருக்கமா இருந்தார். அதன்பின் ரஜினி உச்சத்துல ஒளிர்கிற சூப்பர் ஸ்டார் ஆயிட்டார்.


அன்று முதல் இன்று வரை ரஜினி நடித்த நிறைய திரைப்படங்களின், கதை, திரைக்கதை, டிஸ்கஷனில் கலந்து வந்திருக்கேன். ஒரு தடவை நடிகை மனோரமா ரஜினியை பத்தி தாறுமாறா திட்டி மேடையில பேசினாங்க. அதைக்கேட்டு எனக்கு கோபம் வந்துடுச்சு. மனோரமாவைத் திட்டி டிவி மீடியாவுல பேட்டிக் கொடுக்க தயாரானேன்.
அப்போ பி.வாசுவோட வீட்டுல, அவர் படத்தோட விவாதத்துல இருந்தேன். அதனால மீடியாவை வாசு வீட்டுக்கு வரச்சொன்னேன். இந்த விஷயம் ஏ.வி.எம் ஸ்டுடியோ ஷூட்டிங்குல இருந்து ரஜினிக்கு தெரிஞ்சு போச்சு. உடனே வாசு வீட்டுக்கு போன் போட்டார் ரஜினி. வாசு போனை என்னிடம் தந்தார். ‘மனோரமா மேடம் எவ்ளோ பெரிய ஆர்டிஸ்ட். அவங்க என்னை எப்படி வேணா திட்டி பேசட்டும்.. அதுக்கு அவங்களுக்கு ரைட்ஸ் இருக்கு. கலைஞானம் சார், தயவுசெய்து நீங்க எனக்காக ஆச்சியை எதிர்த்து மீடியாவுல எதுவுமே பேசாதீங்க ப்ளீஸ்…’னு மன்றாடினார். அதுதான் ரஜினி.


ரஜினியை அடிக்கடி நேரில் சந்தித்து பேசுவேன். பொதுவா தன்னைச் சந்தித்து பேசுகிறவர்களிடம், ரஜினி ‘அப்புறம்..?’ என்று ஆரம்பித்தால் கிளம்புங்கனு அர்த்தம். பலமுறை பார்த்து இருக்கிறேன். அதனால் நான் பார்த்து பேசிக்கொண்டு இருக்கும்போது, அவர் என்னைப் பார்த்து ‘அப்புறம்…? கேட்கும் முன்பே நான் அவரைப் பார்த்து ‘அப்புறம்…’ போட்டுவிட்டு கிளம்பி வந்துவிடுவேன்.


ஒருநாள் ஏவி.எம்ல ‘வீரா’ படப்பிடிப்புல ரஜினிய சந்திச்சேன். அப்போ தனிமையில இருந்தார். என்னை பார்த்ததும் சேர்ல இருந்து எழுந்து நின்று உதவியாளர் ஜெயராமை ஒரு பார்வை பார்த்தார். அடுத்த நிமிஷமே கையில் சேர் எடுத்து வந்தார். நான் உட்கார்ந்தவுடன் தன்னுடைய நெற்றில் பொட்டில் ஆட்காட்டி விரலை வைத்து என்னையே பார்த்தார். ‘கலைஞானம் சார்… என்னைச்சுற்றி இப்போ வி.ஐ.பி தயாரிப்பளருங்க வேலி போட்டு இருக்காங்க… அதைத்தாண்டி வெளியில என்னால வரமுடியலை… அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரியான நேரத்துல உங்களை கூப்பிடுவேன்…’ என்று ஃப்ராமிஸ் செய்தார்.


காலம் வேகமா போயிக்கிட்டே இருந்துச்சு. அப்பல்லாம் பெரியவர் வி.கே.ராமசாமி ரஜினிய பாக்குறப்போ ‘ஏம்ப்பா ரஜினி எனக்கு ஒரேஒரு படம் நடிச்சுக் கொடுப்பா… என்னாட எல்லா கடனையும் அடைச்சுட்டு நான் நிம்மதியா கண்ண மூடுவேன்…’ என்று அடிக்கடி சொல்வார்.
திடீர்னு ஒருநாள் ரஜினி வீட்டுல இருந்து போன். ‘சார் உடனே கிளம்பி வீட்டுக்கு வர்றீங்களா..?’ ரஜினி கூப்பிட்டார். வீட்டுக்குள் போனதும் அங்கே பக்கவாதத்தால் பாதிச்ச வி.கே.ராமசாமி… ஆக்ஸிடென்ல கையுடைஞ்ச பண்டரிபாய்… ‘காளி’ பட தீ விபத்தால ஏகப்பட்ட பணத்தை இழந்த தயாரிப்பாளர் ஹேம்நாக்… ‘எஜமான்’ல புரொடக்ஷன் மேனேஜரா வேலை பார்த்த நாகராஜராவ்… ‘அபூர்வ ராகங்கள்’ தயாரிப்பாளர் இறந்துட்டார், அதனால அவரோட வாரிசுகள்… இவங்க எல்லாம் ஒண்ணா இருந்தாங்க.


முக்கியமான ஒருத்தரை சொல்லியே ஆகணும் அவர்தான் எம்.ஜி.ஆரோட பாடிகார்டா இருந்த, பத்மநாபன். சரியான எம்.ஜி.ஆர் வெறியர். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கும் காலத்தில் எப்போதும் அவர் கூடவே இருப்பார். சி.எம் ஆனபிறகு பத்மநாபனை சத்யா ஸ்டுடியோ மேனேஜராக்கிவிட்டு போனார்.
எம்.ஜி.ஆர். அமெரிக்க சிகிச்சைக்கு அப்புறம் 1987-ல தன்னோட கடைசி காலத்துல பத்மனாபனை தன்னோட ராமவரம் தோட்டத்துக்கு வரச்சொன்னார், எம்.ஜி.ஆர். பத்மாவோட குடும்ப நிலைமைய புரிஞ்சு, ‘உனக்கு 30-லட்சம் ரூம்ல மூட்டைக்கட்டி வச்சிருக்கேன் போய் எடுத்துக்கோ…’னு சொன்னார், எம்ஜி.ஆர். ‘தலைவரே நீங்க உயிரோட இருந்தா அதுவே போதும்’னு எம்.ஜி.ஆர் காலை பிடிச்சு கரகரனு கதறி அழுதார். எம்.ஜி.ஆர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், வற்புறுத்தியும் கடைசிவரை பணத்தை வாங்க மறுத்துட்டார், பத்மநாபன்.
ஆறு பெண் குழந்தைகளை பெத்து வச்சுக்கிட்டு கஷ்ட ஜீவனம் நடித்திக்கிட்டு இருந்த பத்மநாபன், திடீர்னு ஒருநாள் இறந்துட்டார். அப்பாவை இழந்த அவரோட குடும்பம் நிலைகுலைஞ்சு போயிடுச்சு.


‘ராணுவவீரன்’ ‘ஊர்க்காவலன்’ ஷூட்டிங் நடந்தப்போ ரஜினிகூடவே இருந்து ஹெல்ப் பண்ணினார், பத்மநாபன். அதனால ரஜினி மனசுல பத்மநாபன் இடம்பிடிச்சார்.
பத்மநாபன் மறைவுக்கு அப்புறம், அவரோட குடும்பம் கஷ்டப்படுற நிலைமையை கேள்விப்பட்டு அவரோட ஆறுபெண்களை போயஸ்கார்டன் வீட்டுக்கு வரவழைச்சு இருந்தார், ரஜினி. என்னை தனியே அழைத்தார் ‘ கலைஞானம் சார், இங்கே இருக்குற ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா தயாரிப்பாளராக்கி நான் நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. ஆனா இப்போ இருக்குற நிலையில சாத்தியமில்லே. அதனால நான் நடிக்கப்போற ‘அருணாச்சலம்’ படத்துல கிடைக்குற லாபத்துல இவங்க எல்லாருக்கும் ஒரு தொகைய பங்கு தர நினைக்கறேன். அதனால உங்களோட இவங்களையும் தயாரிப்பாளரா ஒண்ணா சேர்த்துக்குங்க…’ என்று சொன்னார்.


நானே பார்த்து பார்த்து ஸ்டோரி, டயலாக் எழுதுற வசனகர்த்தா. அப்படிப்பட்ட நான் அவரது அர்த்தம் பொதிந்த வார்த்தை கூர்மையை பார்த்து நெகிழ்ந்து போனேன். ‘அருணாச்சலம்’ படம் ஏப்ரல் மாசம் ரிலீஸ்னு அறிவிப்பு வந்துச்சு. அதுக்கு ரெண்டுநாள் முன்னாடி எங்க எல்லாரையும் முன்னாடி கூப்பிட்ட மாதிரியே ஒரே நேரத்துல போயஸ் கார்டன் வீட்டுக்கு கார் எடுத்துட்டு வரச்சொன்னார்.
வீட்டுக்குள் இருந்த அறையில வரிசையா ட்ரங்க் பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தார். பெட்டிமேல் ஒவ்வொருத்தர் பெயரையும் பளிச்னு எழுதியிருந்தார். வி.கே.ராமசாமி, பண்டரிபாய், என்னை இப்படி எல்லோரையும் ஒவ்வொருத்தரா அழைச்சார் ‘ நான் உங்ககிட்ட குறிப்பிட்டுச் சொன்ன தொகையவிட டபுள் மடங்கு பணம் இதுல இருக்கு… ஹேப்பியா…’னு அவரோட பாணியில கேட்டார், ரஜினி.
நாங்க எல்லாரும் கண்கலங்கி ரஜினியோட பெரிய மனசைப் பார்த்து ஆடிப்போயிட்டோம்.


இந்த வருஷம் கடந்த மார்ச் மாசம் ஆரம்பத்துல இருந்தே அவருக்கு உடம்பு சரியில்லை. ‘எப்பவும் சுறுசுறுப்பா ஃபாஸ்ட்டா இருக்கிறவர் திடீர்னு டல்லா இருக்காரே…’ன்னு ஃபீல் பண்ணியிருக்கார், லதா. ‘மனசுக்குள்ளே ஏதோ கவலைய சுமந்துக்கிட்டு இருக்கார். மனம்விட்டு பேசக்கூடிய பழைய சினிமா ஆட்களை ஒண்ணா வீட்டுக்கு அழைச்சா கலகலன்னு குழந்தையா மாறி சிரிச்சுடுவார்னு நினைச்சிருக்காங்க.
ரஜினிக்கு நெருக்கமான பிடிச்சவங்க லிஸ்ட்டை பார்த்து… பார்த்து லதா தயார் செய்து இருக்காங்க. அந்த பட்டியல ஒருநாள் ரஜினிகிட்டே காட்டி இருக்காங்க. அந்த லிஸ்ட்ல ரஜினி டிக் பண்ணின ஆட்களை மட்டும் செலக்ட் செய்து இருக்காங்க.




மார்ச் மாசம் 18 அன்னிக்கு திடீர்னு லதாகிட்டே இருந்து போன் வந்துச்சு ‘அப்பா.. அவர் உங்களை சந்திக்கணும்னு ஆசைப்படுறார். அதனால நாளைக்கு மறக்காம வீட்டுக்கு வாங்க’னு சொன்னார். நானும் மறுநாள் மறக்காம போயஸ் கார்டன் போனேன்.
ரஜினி மனசுக்கு பிடிச்ச… அவரோட நெருங்கி பழகின பழைய ஆட்களான பஞ்சு அருணாச்சலம், டி.எம்.சௌந்தர்ராஜன், வாலி, மகேந்திரன் எல்லாம் குழுமி இருந்தாங்க. எல்லாரிடமும் பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி பச்சைக்குழந்தை மாதிரி சிரிச்சுக்கிட்டே இருந்தார், ரஜினி.
ஐஸ்வர்யா, சௌந்தர்யாகிட்டே எங்க எல்லாரையும் ஒவ்வொருத்தரா அறிமுகம் செஞ்சாங்க, லதா. மதியம் தடபுடலா நடந்த விருந்துல எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டோம். ஒவ்வொருத்தர் இலையையும் பக்கத்துல இருந்து பார்த்து பார்த்து பதார்த்தத்தை பரிமாறுனாங்க, லதா.



கடந்த மே மாசம் 5-ம்தேதி ராத்திரி திடீர்னு ரஜினிகிட்டே இருந்து போன், ‘ சார் நான் ரஜினி பேசுறேன்… எப்படி இருக்கீங்க. நாளைக்கு காலைல ‘ராணா’ படத்தோட பூஜை. நிறைய பேருக்கு சொல்லலை. கொஞ்சம் ஆளுங்களுக்கு மாத்திரம் சொல்லி இருக்கேன். அதுல நீங்க ஒருத்தர். அதனால மறக்காம வந்துடுங்க’னு சொன்னார்.
மறுநாள் ‘ராணா’ பூஜை நடந்த ஏ.வி.எம் ஸ்டுடியோ போனேன். வழக்கமா ரஜினிகிட்ட எப்பவும் ஒரு துறுதுறு துள்ளல் இயற்கையா இருக்கும். அது ‘ராணா’ பூஜையில மிஸ்ஸிங். ரொம்ப டயர்டா இருந்தார். முகத்துல எந்தவித எக்ஸ்பிரஷனும் காட்டாம போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.


திடீரென்று பூஜையில் இருந்த யாரிடமும் எதுவும் சொல்லாமல், கொள்ளாமல் தன்னோட மேக்கப் ரூமுக்கு ஒடிப்போயிட்டார்.
ரஜினிக்கு என்னாச்சு? என்று யோசித்தபடி நானும் அவர் பின்னாடியே போனேன். அறையில் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். பாத்ரூம் போயிட்டு வெளியில வந்தவர், ரொம்ப டயர்டா இருந்தார். நான் ஒடிப்போய் குசலம் விசாரிச்சேன் ‘ஒண்ணுமில்லே சரியாயிடும்’னு சிரிச்சார். அவர் மனசை மாற்றும் விதமா, நான் கையில் கொண்டு போயிருந்த மலர் கிரீடத்தை தலையில் பொருத்தினேன். ‘இதெல்லாம் எதுக்கு வேணாமே’னு தயங்கினார். பின்னர் சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அதன்பிறகு நடந்தது நாட்டுக்கே தெரியும். நான் ‘பைரவி’யில் பார்த்த ரஜினியை மறுபடியும் ‘கோச்சடையன்’ படத்துல பார்க்க ஆசையா காத்திருக்கேன்.


ரஜினி ஒரு அபூர்வமான பிறவி. தன்னோட எதிரிக்குகூட எந்த துன்பமும் வரக்கூடது, அவங்க நல்லாயிருக்கனும்னு பிரார்த்தனை செய்கிற பெரிய மனசுக்காரர். ஒருதடவை காவிரி பிரச்னை தமிழ்நாட்டுல தலைவிரிச்சு ஆடுச்சு. அந்த சமயத்துல ரஜினியபத்தி ஆளாளுக்கு விமர்சனம் செஞ்சாங்க. அப்போ ‘ தமிழ்நாட்டுல இருக்குறவங்க என்னை கன்னடன்னு கோபமா திட்டுறீங்க… கர்நாடகம் போனா என்னை மராட்டியன்னு மோசமா ஏசுறாங்க… மகராஷ்ட்ரா போனா நீ ஒரு சவுத் இந்தியன்னு சபிக்குறாங்க… நான் எங்கேதான் போவேன்’ என்று கதிகலங்கி கண்கலங்கி ரஜினி பேசுனது காட்சி அப்படியே என் கண்ணுல நிக்குது.” என்று கலங்கினார், கலைஞானம்.






நன்றி: விகடன்


நன்றி:www.envazhi.com