March 13, 2016

கோடைமழை விமர்சனம்

கோடைமழை விமர்சனம்..
.
நல்ல படம் என்பதற்கான உதாரணம் காட்ட வேண்டுமானால் கோடைமழையை தயங்காமல் முன்மொழியலாம்.எந்தவொரு முகம் சுளிப்புக்கும் இடந்தராமல் இயக்கிய இயக்குநருக்கு கம்பீர மரியாதை.கதை என்றுப்பார்த்தால் யதார்த்தம் .அவ்வளவுதான்.நம்மைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை அதாவது நாம் அறிந்திராத சுற்றுப்புறத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்லலாம்.இந்த திரைப்படத்தில் வில்லனே இல்லையென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.சூழ்நிலையை மட்டுமே வில்லனாக்கியுள்ளார் இயக்குநர் .அதிரடியை தவிர்த்து மற்ற அனைத்து மசாலாக்களையும் புகுத்தியிருக்கிறார் இயக்குநர்.குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகளை நாம் இனி சின்னத்திரையில் அடிக்கடி காணலாம். கலக்கல் நகைச்சுவை துளிகள் பல உண்டு கோடைமழையில்.
அடுத்ததா ஒளிப்பதிவு மிக அருமை .பொட்டல்வெளியையும் ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் மாதிரி ரசிக்க வைத்த பெருமை ஒளிப்பதிவாளரையே சேரும்..
ஒரு சாலையின் வளைவு கூட அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது.ஒலிப்பதிவையும் மெச்சியாகவே வேண்டும்.சிறு சப்த்தங்களுக்கும் பிரத்தியோக கவனம் கொண்டு வடிவமைத்திருக்கின்றனர்.திரையில் கன்னத்தில் விழும் ஒவ்வொரு அடியும் என் கன்னத்தில் விழுந்தது போலவே உணர்வு காரணம் தத்ரூப ஒலிப்பதிவுதான்.
.
சமீப காலமாக இவ்வளவு அருமையான கிராமிய மணம்கொண்ட பாடல்களை கோடைமழையில்தான் கேட்கிறேன். வைரமுத்துவின் வரிகள்னா சும்மாவா அற்புதம்.வரிகளுக்கேற்ப பின்னணிகோர்ப்பும் அதே அற்புதம். அது இசையாக இருந்தாலும் சரி காட்சியமைப்பாக இருந்தாலும் சரி.
.
நடிகர்களைப்பத்தி சொல்ல வேண்டுமென்றால் எலோருமே பொருத்தமான தேர்வுதான்.குறிப்பாக நாயகி ப்ப்பா என்னா அழகு.கூடவே நடிப்பும் அழகுதான் .இன்னும் சொல்லலாம்தான் வேண்டாம் எனக்கு வெக்கம் வருது..
.
இந்த திரைப்படம் மூலம் இயக்குநர் சொல்லவருவது கண்மூடித்தனமான கோபம் கொண்டுச்செல்வது பிறருக்கான இழப்பாயினும் அதைவிட பேரிழப்பு நமக்கும் வந்துத்தங்குமென சொல்லிச் செல்கிறார்.ஒரு திறமையான மற்றும் அழகியல் சார்ந்த இயக்குநராக கதிரவன் தமிழ் திரையுலகிற்கு கிடைத்திருக்கிறார்.வாழ்த்துகள். ஆனால் அவர் சிறந்த கதைசொல்லியா என்றால் ஆம் என்பதற்கு ஒரு மாற்று குறைவே என்பதாகத்தான் என்னால் மதிப்பிடமுடிகிறது.

கண்டிப்பாக ஒரு நல்லத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தியை கோடைமழை தரும்..

No comments: