September 16, 2011

அனைத்தையும் அள்ளிக்கொண்ட அ.தி.மு.க அதிர்ச்சியில் கூட்டணிக் கட்சிகள்!அனைத்தையும் அள்ளிக்கொண்ட அ.தி.மு.க அதிர்ச்சியில் கூட்டணிக் கட்சிகள்!

உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது . தமிழகத்திலுள்ள 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க.,போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார் . சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ., சைதை துரைசாமி,கோவையில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மதுரையில் முன்னாள் எம்.பி., ராஜன் செல்லப்பா ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்று, பின் மாற்றப்பட்ட சிலருக்கும் மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மாநகராட்சி ஒதுக்கப்படாத தால்,அக்கட்சியினர் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.சென்னை, மதுரை, நெல்லை,தூத்துக்குடி, வேலூர், சேலம்,ஈரோடு, திருப்பூர் ஆகிய எட்டுமாநகராட்சிகள்தி.மு.க.,விடமும், திருச்சி,கோவை மாநகராட்சிகள் காங்கிரஸ் வசமும் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.,காங்கிரஸ், பா.ம.க.,ம.தி.மு.க., பா.ஜ., ஆகியகட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.



அ.தி.மு.க.,வில் 10 மாநகராட்சிகளிலும் அக்கட்சியே போட்டியிடும் என அதிரடியாக அறிவித்துள்ளது, கூட்டணிக்கட்சிகளுக்கான பேச்சு வார்த்தை
நடத்துவதற்கு இடப்பங்கீடு குழு ஒன்றையும் அ.தி.மு.க.,அறிவித்திருந்தது. அக்குழு பேச்சு வார்த்தையை கூட்டணிக் கட்சிகளிடம் துவங்கும் முன்,அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த சட்டசபைத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி எண்ணிக்கை பங்கீடு மட்டும் முடித்துக்கொண்டு, எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பதை முடிவு செய்யாமல், தனது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்,கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சு நடத்தி, சில தொகுதிகளை விட்டுக் கொடுத்து, 160 தொகுதிகளில் போட்டியிட்டது.சட்டசபைத் தேர்தல் பார்முலாஅடிப்படையில், 10 மேயர் பதவிக்கான வேட்பாளர்களின் முதல்பட்டியலை நேற்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள செ.ம.வேலுசாமி,ராஜன் செல்லப்பா, திருப்பூர் விசாலாட்சி, சசிகலா புஷ்பா ஆகியோருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, பின் அவர்களின் தொகுதிகள் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.இப்படி சட்டசபைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கப்பட்டும்,போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, மேயர் தேர்தலில்

போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு, குறைந்த ஓட்டுகளில் தோல்வியடைந்த சைதை துரைசாமி, சென்னை மாநகர மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.



பெண் வேட்பாளர்களில் சிலர்கட்சிக்கு புதியவர்களாகஇருந்தாலும், அவர்களின் குடும்பத்தினர் அ.தி.மு.க.,வினர் என்ற அடிப்படையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மாநகராட்சி ஒதுக்கப்படாததால்,அக்கட்சியினர் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.,குழுவினர் தே.மு.தி.க.,குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின், வேலூர்,திருநெல்வேலி, ஈரோடு ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இரண்டு மாநகராட்சிகள்தே.மு.தி.க.,வுக்குஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான், அந்த மூன்று மாநகராட்சிகளுக்கும் பிரபலம் இல்லாத டம்மி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என,அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




நன்றி.


தினமலர்

September 15, 2011

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஆசை அஜீத் பேட்டி

முன்னெப்போதும் இல்லாத நிதானமும் பக்குவமும் அஜீத்தின் பேச்சில் தெரிய ஆரம்பித்துள்ளது.ஏகன், அசல் என இரு சறுக்கல்களுக்குப் பிறகு வந்திருக்கும் அவரது மங்காத்தா வெற்றிப் படமாகியுள்ளது. இந்த வெற்றியை அவர் பெற்றுள்ள சூழ்நிலை மிக முக்கியமானது.தனது ரசிகர் மன்றங்களை எல்லாம் கலைத்து விட்டதாக அவர் அறிவித்த மூன்று மாதங்களில் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.இந்த முறை அஜீத் ரசிகர்களுடன் இணைந்து ரஜினி ரசிகர்களும் இந்தப் படத்துக்கு மகத்தான ஆதரவை அளித்தனர். விரும்பிப் பார்த்தனர். அதற்காக இது ரஜினிரசிகர்களால் வந்த வெற்றி என்று சொல்ல வரவில்லை! அஜீத்தின் யதார்த்தமான அணுகுமுறை, அவர் படங்களை ரஜினி, கமல் என சாதனையாளர்களின் ரசிகர்களையும் பார்க்க வைத்துள்ளது என்பதற்காகச் சொல்கிறோம். இன்னொன்று ரஜினி போன்ற சாதனையாளர்களை எந்த இடத்தில் வைத்துப் போற்ற வேண்டும் என்பதை அஜீத்தைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.இந்த வெற்றியை எப்படிப்பார்க்கிறார் அஜீத்?



குமுதம் இதழுக்கு அவர் அளித்த லேட்டஸ்ட் பேட்டியிலிருந்து சிலபகுதிகள்


மக்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். இது தனிப்பட்ட எனதுவெற்றியல்ல. வெங்கட்பிரபு,யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி,வைபவ் என நட்சத்திரங்கள்,டெக்னீஷியன்கள் அனைவரின் கூட்டு முயற்சிக்கும் கிடைத்த வெற்றி.இவர்கள் அனைவரும் என்னைத் தோளில் தூக்கிச் சுமந்து வெற்றி பெற வைத்துள்ளனர்.குறிப்பாக ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு நன்றி சொல்லவேண்டும். அடுத்தது தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மாஅவர்களுக்கு எனது நன்றிகள்,”என்கிறார்.ரசிகர் மன்றங்களைக் கலைத்தபிறகு வந்துள்ள இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில்,“ரசிகர்கள் மனதில் எனக்கென்று ஒரு இடம் உள்ளது என்பதை நிரூபித்துள்ள வெற்றி இது.இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு வார்த்தை, என்னை என் போக்கில் விட்டு விடுங்கள்.தரமான படங்களைத் தருகிறேன்,”என்றார்.சரி, அஜீத்தின் அடுத்த ஆசைஎன்னவாக இருக்கும்?
இதற்கான பதில், அவர் எவ்வளவு பெரிய ரஜினி ரசிகர் என்பதைக் காட்டுகிறது. எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன்.அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை.

நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என்லட்சியம். மங்காத்தாவின்மாபெரும் வெற்றியை ரஜினிசாருக்கு சமர்ப்பிக்கிறேன்,”என்றார்,அஜீத்.





நன்றி என்வழி வினோ அவர்கள்.


http://envazhi.com

September 14, 2011

எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு சகாப்தம்...

நான்கு தலை முறை நடிகர்களுக்கு பின்னணி பாடிய ஒரே பாடகர் யார் என்றால் அவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான்.வயதாக ஆக அவருடைய குரலில் இளமை மெருகேறிக் கொண்டே இருக்கிறதேயொளிய இறங்கவில்லை.அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளிவந்ந ஆடுகளம் திரைப்படத்தில் அவர் பாடிய ஐயையோ நெஞ்சு அலையதடி... என்ற பாடல்.இந்த பாடல் பாடியதற்காக எஸ்.பி.பி. க்கு சிறந்த பாடகருக்கான தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும் ஏனோ தரவில்லை.தேசிய விருது கொடுத்துதான் அவர் சிறந்த பாடகர் என பறைசாற்ற வேண்டிய அவசியம் எங்கள் எஸ்.பி.பி.க்கு இல்லை.அவர் வாங்கிய விருதுகளை பட்டியலிட்டால் இந்த பதிவை ஒரு வருடத்திற்கு பிறகுதான் முடிக்க முடியும் அவ்வளவு விருகளையும் ,பாராட்டுகளையும் வாங்கி குவித்திருக்கிறார் நம் எஸ்.பி.பி.

அவருடைய தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் அவருடைய தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது நாம் சிறிது வெட்கப்பட வேண்டியிருக்கும்,அவ்வளவு நளினமும்,துல்லியமும் அவர் பாடல்களிலும்,பேசுவதிலும் இருக்கும்.எண்பதுகளில் இசைக்கடவுள் இளையராஜாவும்,எஸ்.பி.பி .யும் இணைந்து உருவாக்கியப் பாடல்கள் பட்டி தொட்டிகளில் பட்டையை கிளப்பியது என்று சொன்னால் அது மிகையாகாது.இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்காக இவர் பாடிய பாடல்கள் ஏராளம் அதுமட்டுமல்லாமல் இன்றும் பாடிக்கொண்டிருக்கிறார்.இசைப்புயலின் முதல் படமான ரோஜாவில் எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் தான் ஏ.ஆர்.ரகுமானை உச்சத்திற்கு இட்டுச் சென்ற காரணங்களில் ஒன்று என்பது உலகறிந்தது.
எம்.எஸ்.வி.க்கும் பாடினார்,கே.வி.மகாதேவனுக்கும் பாடினார்,இசைக்கடவுள் இளையராஜாவுக்கும் பாடினார்,தேனிசை தென்றல் தேவாவுக்கும் பாடினார்,இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கும் பாடினார்,யுவன் சங்கர் ராஜாவுக்கும் பாடினார்,நேற்று வந்த ஜி.வி .பிராகாஷ் குமாருக்கும் பாடினார் ,நாளை வரும் யுவன் சங்கர் ராஜாவின் மகனுக்கும் பாடுவார்.அவரின் உழைப்பு அப்படி .கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பாடல்கள் பாடியிருக்கும் எஸ்.பி.பி. ஒரு சாதனை நாயகன்தான்.அது மட்டுமல்லாமல் ஏறக்குறைய இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார்.இது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்,திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்,
திரைப்படங்களில் நடித்துக்கொண்டும் இருக்கிறார் இப்படி பன்முகம் கொண்ட எஸ்.பி.பி. யின் வாழ்க்கை சிறு குறிப்பாக விக்கிப்பீடியாவின் உதவியுடன் தொகுக்கப்படுகிறது.




ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், (அப்போதய மெட்ராஸ் மாகாணம்)தற்போது ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் பிறந்தார். 1966 இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைப்படத்துறையில் கால் பதித்தார். 1966 முதல் இன்று வரை 38,000 பாடல்களை பாடியுள்ளார்.

1960களின் பிற்பகுதியில் தமிழ் திரையிசை உலகில் புயலெனப் புகுந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று 40 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து முன்னணிப் பாடகராகத் திகழ்ந்து வருகிறார்.எம்.ஜி.ஆர்.ருக்காக எஸ்.பி.பி. பாடிய ஆயிரம் நிலவே வா பட்டிதொட்டிகளிலெல்லாம் புகழ்பெற்று ஒலித்தது.

எந்தப் பாடகரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையான
36 ஆயிரம் பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருப்பவர் எஸ்.பி.பி. நாளொன்றுக்கு இரண்டரை பாடல்கள் வீதம் இவர் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பாடிவருகிறார் என்பது நிச்சயம் அனைவரையும் மூர்ச்சையடையச் செய்யும். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்



எஸ்.பி.பி. அவர்கள் முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லையென்றாலும் சங்கராபரணம்என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் அவர்.

எஸ்.பி.பி.பெற்ற தேசியவிருதுகள்
1996 ஆம் ஆண்டு
மின்சார கனவு திரைப்படத்தில் அவர் பாடிய
தங்க தாமரை என்ற பாடலுக்கும்,


1995 ஆம் ஆண்டு
சங்கீத சகர கனயோகி பஞ்சக்ஷற கவை திரைப்படத்தில் வரும்
உமண்டு க்ஹுமண்டு கன கர் என்ற
கன்னட மொழி பாடலுக்காகவும்,

1988 ஆம் ஆண்டு
ருத்ரவீன என்ற தெலுங்கு திரைப்படத்தில் வரும்
செப்பாழனி உண்டி என்ற பாடலுக்காகவும்,


1983 ஆம் ஆண்டு
சாகர சங்கமம் என்ற தெலுங்
திரைப்படத்தில் வரும் வேதம் அனுவனுவுன
என்ற பாடலுக்காகவும்,

1981 ஆம் ஆண்டு ஏக துஜே கே லியே என்ற இந்தி திரைப்படத்தில் வரும்
தேரே மேரே பீச் மேனி என்ற பாடலுக்காகவும்,
1979 ஆம் ஆண்டு
ஷங்கர்பாரணம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் வரும்
ஓம் கார நதானு என்ற பாடலுக்காகவும், ஆக மொத்தம் ஆறு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.



எஸ்.பி.பி. யின் தனித்தன்மையே இசையமைப்பாளரின் கற்பனையையும் கடந்த நகாசு வேலை அற்புதமாக வெளிப்படும். மெல்லிசைக்கான அத்தனை லாவகங்களையும் குரலில் வெளிப்படுத்தக்கூடியவர் அவர்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் பலகாலமாக இளைஞர்களின் கனவுக்குரலாக இருந்துவருகிறது.



கல்லூரிகளில் நடக்கும் பாட்டுப் போட்டி இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் பலரும் அவரைப் போலவே பாட முயற்சிப்பது காணக்கூடியதாக இருக்கும்.இளமைத் துள்ளலின் பிரதிபலிப்பாகவும் உற்சாகத்தின் உறைவிடமாகவும் விளங்கியது எஸ்.பி.பி.யின் குரல்.


இளையராஜா பிரபலமாவதற்கு முன்பு எஸ்.பி.பி.யின் இசைக்குழுவில் இருந்தார் என்பதால் ஒருவரை ஒருவர் ஒருமையில் கூட்பிட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவருக்குமிடையில் நட்பு. இளையராஜா எஸ்.பி.பி. கூட்டணியில் காலத்தால் அழியாத பல அற்புதப் பாடல்கள் வெளிவந்தன என்பது உண்மை. யாட்லிங் செய்வது, குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் வேண்டியது போல மாற்றிப் பாடுவது, பாடும்போதே சிரிப்பது, கிண்டல் தொனிக்கப் பாடுவது என்று வர்ணஜாலங்களையும் பாட்டில் வெளிப்படுத்தக்கூடியவர் எஸ்.பி.பி.

நான்கு தலை முறைகளாக தொடர்ந்து வரும் ஒரு சகாப்தம் எஸ்.பி.பி என்றால் அது மிகையில்லை.
அவர் இன்னும் பல்லாண்டு காலம் இசைத்துறையில் இருந்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டி வாழ்த்துவோம்.


நன்றி

September 12, 2011

பயமாக இருக்கிறது,முதல்வர் ஜெயலலிதா......

இந்த அரசின் 100 நாள் சாதனைகளுக்காக அனைத்து க் கட்சியினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இதுமகிழ்ச்சியை விட அச்சத்தைத்தான் தருகிறது. இந்த 100 நாட்கள் பணிகளை மிஞ்சுகின்ற அளவுக்கு எங்கள் அரசின் பணிகள் இருக்க வேண்டுமே என்ற உணர்வுதான் எழுகிறது, என முதல்வர் ஜெயலலிதா கூறினார். அனைத்துத் தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு கடந்த 3 மாதங்களுக்குமுன்பு அமைய பெற்ற அதிமுக தலைமையிலான அரசு தன் பணியில் 100 நாட்களை இன்றுடன் நிறைவு செய்கிறது. இதை யொட்டி சட்டமன்ற கட்சி தலைவர்களும்,உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தார்கள். இங்கே பேசியவர்கள் பாராட்டு தெரிவித்த போதுஅது வெறும் சம்பிரதாய பாராட்டு போல எனக்கு தோன்றவில்லை.ஒவ்வொருவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.



இந்த பாராட்டுக்களை கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதை விட ஒருவித லேசான அச்ச உணர்வுதான் தோன்றியது.100 நாட்கள் முடிந்த பின்னணியில் பேசிய ஒவ்வொருவரும் குறை ஏதும் சொல்லாமல் முழு மனதோடு பாராட்டியிருக்கிறார்கள்.


இது தொடர்ந்து நீடித்திருக்க வேண்டுமே என்கிற அச்ச உணர்வும் இன்னும் வருகிற, பலப்பல100 நாட்களுக்கும் ஓராண்டு,இரண்டாண்டு என ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறும் வகையிலும் இந்த 100 நாட்கள் பணிகளை மிஞ்சுகின்ற அளவுக்கு எங்கள் அரசின் பணிகள் இருக்க வேண்டுமே என்ற உணர்வுதான் எழுகிறது.


தொடர்ந்துஉறுப்பினர்கள் பாராட்டக் கூடிய அளவுக்கு நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டுமே,அது ஒரு மிகப்பெரிய சவாலாக அமையுமே என்கிற உணர்வுதான் எனக்குள் எழுகிறது.ஆனாலும் உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களுடனும்,ஆதரவுடனும் இதை சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.நாங்கள் எதை செய்தாலும் உள்ளத் சுத்தியோடு செய்வோம்.மக்களை ஏமாற்றுகிற எண்ணம் எங்களிடம் கிஞ்சிற்றும் இல்லை.



கடந்த திமுக ஆட்சி காலத்தில் கேஸ் அடுப்பு வழங்கினார்கள்.ஒரு சிலருக்கு வழங்கி விட்டு அதற்கான சிலிண்டர் தரவில்லை. விவசாயிகளுக்கு மின் இணைப்பு தந்தார்கள்.ஆனால் மின்சாரம் தரவில்லை.அப்படி நாங்கள்மக்களை ஏமாற்றுகிற எதையும் செய்யமாட்டோம்.அத்தகைய எண்ணம் எங்களிடம் இல்லை.உள்ள சுத்தியோடும்,கர்ம சிரத்தையோடும் செய்வது தான் எங்கள் ஆட்சியின் நிலை. இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இப்பொழுது ஒரு உண்மையை நான் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

ஆள் அதிகாரபலத்தை விட அவர்கள் பணத்தைத்தான் நம்பினார்கள்.கடந்த 3மாதங்களுக்குமுன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர்கள் புழக்கத்தில் விட்ட பணம் ரூ.5,000 கோடி ஆகும்.தேர்தல் பிரச்சாரம் நடந்த போது தலைமை தேர்தல் ஆணையம் மிக கடுமையான நடவடிக்கை எடுத்ததன் காரணமாக திமுகவினரிடமிருந்து ரூ.50 கோடி பணம் கைப்பற்றப்பட்டது,அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான ஒருவர் நடைப் பயிற்சி சென்று கொண்டிருந்த போது எனக்கு வேண்டிய ஒருவரும் அங்கே இருந்திருக்கிறார். அப்போது தேர்தல் கமிஷன்50 கோடி ரூபாயை கைப் பற்றியிருக்கிறதே என்று அந்த நபரிடம் ஒருவர் கேட்க, அதற்கு கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமான அவர் 50 கோடிரூபாய் என்பது ஒரு பானை தண்ணீரை கொண்டு செல்லும் போது சிதறி விழுமே அந்த துளிதான் எங்களுக்கு அது ஒன்றும் பொருட்டு அல்ல.


எங்கள் அண்ணன் (அஞ்சா நெஞ்சனாக இருந்து இன்று காணாமல் போனாரே அந்த அண்ணன்) ரூ. 5000 கோடியை தேர்தலுக்காக அள்ளி இறைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். இந்த 5000 கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டு ஆசைகாட்டியும் மக்கள் மசியவில்லை. அவர்களுடைய பணபலத்திற்கு இடம் கொடுக்காமல் உறுதியாக இருந்து நல்ல முடிவை எடுத்துள்ளனர்.அதனால்தான் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் ஒரு ஆட்சியாக திட்டங்களைத் தந்திருப்பதாக விளம்பரம் செய்துள்ளோம்.அந்த மாற்றத்தை தந்த மக்களுக்கு அதிமுக சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர்களும்,எதிர்க் கட்சித் துணைத் தலைவர்களும் இந்த அரசுக்கு செய்ய வேண்டும் என்கிற மனம் உள்ளது. ஆனால் நிதி பற்றாக்குறைதான் அதற்கு தடையாக உள்ளது என்று கூறினார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் தாயின் நிலையில் உள்ள என் நிலைமையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்.ஒரு தாய்க்கு 10 பிள்ளைகள் உள்ளனர்.அவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கிறார்கள்.ஆனால் அந்ததாயாரிடம் அந்த வீட்டில் இருப்பது ஒரே தோசைதான். அது ஒரு குழந்தையின் பசியைப் போக்கக் கூட போதாது.அதனால் ஒரு குழந்தைக்கு ஒரு தோசையை கொடுத்து விட்டு ஒன்பது குழந்தைகளையும் பட்டினி போடலாமா என்று கருதிய தாய் அதனை துண்டு துண்டாக்கி 10 குழந்தைகளுக்கும் பகிர்ந்து தருவாள்.அவள்தான் நல்ல தாய்.
இருப்பதை பகிர்ந்து தரவேண்டும் என்கிற தாயின் நிலைமையில் தான் நான் இருக்கிறேன்.தமிழக மக்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்கிற ஆசை எனக்கும், இந்த அரசுக்கும் உள்ளது. பழைய திமுக ஆட்சியினர் மக்களை கடனாளியாக்கி விட்டு சென்றுள்ளனர்.மத்திய அரசு எந்த உதவியும் செய்யாமல் பாரா முகமாக உள்ளது.அத்தனையையும் மீறி நாங்கள் சாதிப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.


இந்த நேரத்தில் தமிழக மக்களை பார்த்து நான் சொல்ல விரும்புவது, “வருந்தாதே,ஏழை மனமே வருந்தாதே வருங்காலம் நல்ல காலம் அந்த நம்பிக்கையுடன்இருங்கள்’.விலையில்லாத அரிசி,ஏழைகளுக்குமிக்சி,கிரைண்டர்,பேன்,ஆடுமாடுகள் வழங்குவதை பாராட்டி இங்கேபேசினார்கள்.இலவசத்துக்காக கையேந்த வேண்டியதில்லை என்னை பொறுத்தவரை எனக்குள்ள ஆசை என்பது எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்,இங்கு இல்லாமை இல்லாத நிலை வரவேண்டும் என்பதுதான்.இனிமேல் தமிழக மக்களுக்கு இலவசம் தரவேண்டிய அவசியமில்லை. இனி எப்போதும் யாரிடமும் கை நீட்டி எதையும் பெறுகின்ற நிலை இருக்கக் கூடாது என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை என சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

September 11, 2011

இடுகாட்டில் கொலையான பெண் நிருபர்கள். ஜுனியர் விகடன் கட்டுரை...

நேர்மையான பத்திரிகையாளர்களை அடக்குவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வழி முறையை ஆட்சியாளர்கள் கையில் எடுக்கிறார்கள். இலங்கை,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிபியா,பிரேசில் போன்ற நாடுகளிலும் அடிக்கடி பத்திரிகையாளர்கள் காணாமல் போவதும், கொல்லப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.இது போன்ற சம்பவங்களுக்குத் தீர்வு காணப்படாத நிலையில் ,அமெரிக்காவின் காலடியில் இருக்கும் மிகப் பெரிய நாடான மெக்ஸிகோவில்,இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பது உலகெங்கும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



மெக்ஸிகோ நாட்டின் தலை நகரான மெக்ஸிகோ சிட்டி இடுகாட்டுக்குப் பின்புறம் ஒரு பூங்காவில் அனா மர்ஸலா ஏர்ஸ், ரோக்கியோ கன்ஸ்லேஸ் என்ற இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கழுத்து நெரிக்கப்பட்டு ,இறந்த நிலையில் கண்டு எடுக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளங்களும் இருக்கின்றன.



இரண்டு பேருக்குமே 48 வயது. போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை கடுமையான விமர்சனம் செய்யும்,கான்ட்ரலினியா என்ற வார இதழில் நிருபர்களாகப் பணியாற்றியவர்கள்.




கொல்லப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் எங்கள் பத்திரிகையில் விளம்பர பிரிவில்தால் வேலை செய்தார். அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகை என்பதால் அரசு விளம்பரங்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. இருந்த போதும் எங்கள் பத்திரிகை தொடர்ந்து வெளி வருகிறது என்றால்...அதற்கு அவரது திறமை மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம்தான் முக்கிய காரணம். விளம்பர வருமானம் நின்று விட்டால் பத்திரிகையை முடக்கி விடலாம் என்ற எண்ணத்தில் இந்த கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.



அரசாங்கத்தை மட்டுமின்றி,அதிகாரமும் செல்வமும் நிறைந்த ஊழல்வாதிகளைப் பற்றியும் நாங்கள் விமர்சிப்பதால் எங்கள் பத்திரிகை சந்திக்கும் வழக்குகளுக்கு அளவே கிடையாது.அதனால் இந்தக் கொலைக்கு யார் காரணம் என்பதை எங்களால் யூகிக்க முடியவில்லை... என்று அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் வருத்தத்துடன் சொல்கிறார்.



ஊர் எதுவானாலும், நாடு எதுவானாலும் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.



நன்றி


ஜூனியர் விகடன்
14.9.2011