October 13, 2011

தாக்குதலுக்குத் தயாராகும் இந்திய அணி.

இந்தியா, இங்கிலாந்து இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் இன்று பலத்த எதிர்பார்ப்புக்கிடையே துவங்குகிறது.


இங்கிலாந்து மண்ணில் வாங்கிய அடி அவ்வளவு விரைவில் மறந்துவிடாது இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும்.உலக கோப்பையை வென்று சில நாட்களிலேயே மிக மோசமான தோல்வியை சந்தித்தது வேதனையான விசயம்தான்.தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தோல்வி என்பது தோல்விதானே.


இப்போது நடக்கப்போகும் தொடரில் இந்தியா ஐந்துக்கு ஐந்து என்று வெற்றி பெறாவிட்டாலும் மூன்றுக்கு இரண்டு என்ற வீதத்திலாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இந்திய ரசிகர்களின் அதிகபட்ச ஆசையாக இருக்க முடியும்.


இங்கிலாந்து சுற்று பயணத்தில் அனைத்து தொடரையும் இளந்தது ,அடுத்ததாக வந்த சேம்பியன் லீக் போட்டியில் சென்னை அணி லீக் சுற்றோடு வெளியேறியது போன்றவைகளுக்கு காரணமாக பெரும்பாலானோர் சொன்னது டோனியின் அதிர்ஷ்டம் முடிந்துவிட்டது என்றுதான். எங்கிருந்துதான் இப்படிப்பட்ட யோசனைகள் வருமோ நமது மக்களுக்கு.இங்கிலாந்து சுற்று பயணத்தின் போது விளையாடிய போட்டிகளில் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விளையாடவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே இருந்தும் ரசிகர்கள் டோனியை குறை சொல்கிறார்கள்.இதற்கெல்லாம் ஒரே காரணம் டோனி மீது ரசிகர்கள் மிக அதிக எதிபார்ப்பு வைத்திருப்பதுதான். எப்படியும் எல்லா தொடர்களையும் டோனி வென்றுவிடுவார் என்று நம்புகிறார்கள்.நம்பிக்கை பொய்க்கும் போது அவர் மேல் விமர்சனத்தை பாய்ச்சுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விசயம் இப்போதும் டோனியைதான் நம்பிக்கொண்டிருக்கிறோம்.ஏனேன்றால் அவர் தந்த வெற்றியின் களிப்புகள் அவ்வளவு எழிதில் மறந்து விட முடியாது.இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் தோல்வியை இந்திய அணி பரிசளிக்கும் என்று நம்புவோம்.

டிஸ்கவரி என்றொரு பல்சுவைப் பெட்டகம்.

நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது டிஸ்கவரி தமிழ்,
ஏறக்குறைய தமிழ் நாட்டின் பெரும்பாலான வீடுகளில் இப்போது அதிகம் ஒலிக்கப்படும் லோகோ இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் டிஸ்கவரி தமிழ் சேனலின் நிகழ்ச்சிகள் அனைத்துமே பெரியவர் முதல் சிறியவர் வரை அவரவர் ரசனைக்கேற்றவாறு ரசிக்கும்படி இருக்கின்றன.சிறுவர்களுக்கு, பெரியவர்களுக்கு என்று தனித் தனியே நிகழ்ச்சிகள் இல்லாவிடினும் இருசாராரும் இணைந்தே ஓர் நிகழ்ச்சியை ரசிப்பார்கள் அந்த பெருமை டிஸ்கவரி தமிழையே சேரும்.


புல்,பூண்டுகளின் அற்புத அழகையும் ,விலங்குகளின் மறு உலகையும்,நிலத்தில் இருக்கும் நீல வானத்தின் ஆள் மன ரகசியங்களையும், எரிமலைகளின் சிவந்த கோபத்தையும்,அறிவியலின் மற்றொரு கோணத்தையும்,மனிதனால் இயற்கை படும் துன்பங்கள் என அனைத்து நிஜங்களையும் நம் கண் முன்னால் பிரதிபலித்து நம்மை ஆச்சர்யபடவும்,திகைக்கவும் வைக்கிறது. உலகமே விந்தையானது என்பதை டிஸ்கவரி தமிழின் நிகழ்ச்சிகள் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.


மென் விசஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கும் நிகழ்ச்சியை வழங்கும் பியர் கெய்ல்சுக்கும் எத்தனை கோடி ரசிகர்கள் என்று எண்ணி சொல்லி விட முடியுமா என்ன, அவரின் துணிச்சலான சில செயல்கள் ஆச்சர்யத்தில் வாயை பிளக்கவும் வைக்கும்,அருவருப்பில் முகத்தை சுழிக்கவும் வைக்கும் தன் உயிரை பணயம் வைத்து நிகழ்ச்சியை காட்சிப் படுத்துகிறார் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இருக்கப் போவதில்லை.


டிஸ்ராய்டு இன் செகன்ட்ஸ் நிகழ்சியை பார்க்கும்போது தேகம் சிலிர்ப்பது எப்படி என்று உணர்வீர்கள்.


டைம் வார்ப் நிகழ்ச்சியில் அறிவியலின் மற்றொரு பக்கத்தையும் மனிதனின் நவீன கண்டுபிடிப்புகளையும் கண்டு மெய்மறந்து போவோம்.


த மெடிக்கல் அனாமலைஸ் நிகழ்ச்சியில் ஊனம் என்ற பெயரில் சில மனிதர்கள் எவ்வளவு பெரிய வேதனையை அனுபவித்து வருகிறார்கள் என்பதை எண்ணி கண்ணீர் உகுக்காமல் யாராலும் இருக்க முடியாது.அந்த மனிதர்கள் நிஜமாகவே போராளிகளே.


ஏதோ உறங்கி கொண்டிருக்கும் தோரணையில் இருக்கும் கடலின் ஆழத்தில் நடக்கும் அதியங்களையும்,அழகையும் வெளிக்கொணரும் த புளு பிளானட் நிகழ்ச்சியை வருணிக்க வார்த்தைகளே இல்லை.


உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளை இவர்கள் தொகுத்து வழங்கும் விதம் நாமே அந்நிகழ்ச்சியை நேரில் பார்த்த பிரமிப்பை ஏற்படுத்துகிறது.உதாரணமாக, மும்பை குண்டு வெடிப்பு சம்பவம்,பின்லேடன் கொலை செய்யப்பட்டது,அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவம் எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டாம் உலகப்போரின் அழிவுகளையும்,காரணங்களையும் வர்ணத்தில் ஒளிபரப்பியது யாரும் எதிர்பாராத ஒன்று.


லைப்,ஜாய் ஆப் த டிஸ்கவரி,டிஸ்கவர் மோர்,ஃபாக்ட்ரி மேட்,டர்ட்டி ஜாப்ஸ்,சர்வய்வர் மேன்,டுயல் சர்வய்வர்,மென்,வுமன் விசஸ் வைல்ட்,வொர்ஸ்ட் கேஸ்ட் செனாரியோ,கன்டர் ,

இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கலாம் அனைத்துமே இயற்கையின் எழிலையும் ,கோபத்தையும் நமக்கு உணர்த்த முயற்சி செய்கிறது.





டிஸ்கவரி நிறுவனம் 1985 ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்டது.இன்று கிட்டத்தட்ட 170 நாடுகளில் 40 மொழிகளில் தன் சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது.இதில் நம் தமிழ் மொழியும் அடங்கும்.இந்தியாவில் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் மட்டுமே தனியாக டிஸ்கவரி அலைவரிசை உள்ளது.தமிழில் தனி அலைவரிசை கடந்த 15.8.2011 முதல் துவங்கப்பட்டது.

டிஸ்கவரி தமிழை தமிழின் முதல் தர தொலைக்காட்சி என்றால் அது மிகையாகாது.ஏனென்றால் அவர்கள்தான் தமிழை அழகாக உச்சரித்து நிகழ்ச்சி வழங்குகிறார்கள்.

October 11, 2011

இப்படி இருந்த நாங்கள் எப்படி ஆயிட்டோம் மும்பை இந்தியன்ஸ்.

யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் சேம்பியன்ஸ் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்லுமென்று.ஏனென்றால் லீக் ஆட்டங்களில் எந்த ஒரு அணியுடனும் சிறப்பாக விளையாடியது என்று கூறமுடியாது.சென்னை அணியுடன் மோதிய முதல் ஆட்டத்தில் இறுதிவரை சென்னைதான் வெற்றி பெறும் என அனைவரும் நம்பினார்கள்.ஏன் மும்பை வீரர்கள் கூட அப்படித்தான் எண்ணியிருப்பார்கள்.ஆனால் வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவின் மட்டை வீச்சால்(39,18 பந்துகளில் மற்றும் ஒரு விக்கெட்) மும்பை அணி வென்றது. அரையிறுதியிலும் கூட தோற்று விட்டது என்று நினைத்த வேளையில் வெற்றி பெற்றார்கள்.இந்த ஆட்டத்திலும் மலிங்காவே கைகொடுத்தார்(4 ஓவர்கள் 20 ரன்கள் 4 விக்கெட்டுகள்).அவரது பந்துவீச்சு மிக அருமையாக இருந்து என்றே சொல்ல வேண்டும்.இப்படி எதிர்பாராத வெற்றிகள் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுளைந்தது மும்பை அணி.



இறுதிப் போட்டியில் மும்பை வீரர்கள் எதிர் கொண்ட அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். இந்த அணி லீக் சுற்றின் இறுதி ஆட்டத்திலும்,அரையிறுதி போட்டியிலும் எதிரணி நிர்ணயித்த இமாலய இலக்கை(214,204)சர்வ சாதரணமாக எட்டியது. அதனால் இறுதி போட்டியில் கோப்பை பெங்களூருக்கே என்று எண்ணும் சூழல் உருவாகியிருந்தது.

சென்னையில் இறுதிப்போட்டியும் துவங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது இது அணி தலைவரான ஹர்பஜனின் தவறான முடிவு என்றே பலரும் எண்ணியிருப்பார்கள்.ஏனென்றால் பெங்களூரு அணி இலக்கை துரத்தி எட்டுவதில் சிறப்பாக செயல்பட்டது அந்த அணியின் பேட்டிங் பலமும் அதைத்தான் உறுதிப்படுத்தியது.


மும்பை அணி தட்டுத்தடுமாறி 139 ரன்கள் குவித்தது(எடுத்தது).இருபது ஓவர் போட்டியில் 139 ரன்கள் என்பது ஒரு கௌரவமான இலக்குதான் ஆனால் பெங்களூர் அணியைப் பொறுத்தவரை இந்த இலக்கு சுலபமாக எட்டக்கூடியதாகவே இருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் நடந்ததோ வேறு.

பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வேகமாக ஆட்டமிளந்தாலும்.விராத் கோலி கை கொடுப்பார் என்று பார்த்தால் அவரும் சொற்ப ரன்னில் வெளியேற பின்னால் வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பெங்களூர் அணி தோல்விக்கான பாதையில் பயணிக்க தொடங்கியது.பாதையும் சரியாக தோல்வியிடம் இட்டுச்சென்றது.


தொடர் நாயகன் விருதை மலிங்கா தட்டிச் சென்றார்.
மும்பை அணி ஆடிய ஆறு ஆட்டங்களில் இறுதி ஆட்டத்தில்தான் எளிதாகவும், விறுவிறுப்பு இல்லாமலும் வெற்றி பெற்றது.எது எப்படியோ மும்பை இந்தியன்ஸ் சேம்பியன்களுக்கு சேம்பியனாகிவிட்டது.


மூன்று முறை சேம்பியன்ஸ் லீக்கில் கலந்து கொண்டு மூன்றாவது முறை கோப்பையை கைப்பற்றியது மும்பை. இந்திய அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக மும்பை அணி ஆரம்பம் முதலே வலம் வந்துக் கொண்டிருக்கிறது.அதற்கு முக்கிய காரணம் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டென்டுல்கர் மும்பை அணியின் தலைவராக இருப்பதுவாகும்.


சாம்பின்ஸ் லீக் தொடரில் உடல் நலக்குறைவால் சச்சின் விளையாடாவிடினும் அவரின் ஆசியால் மும்பை அணி வெற்றிப் பெற்றது.


வாழ்த்துக்கள் மும்பை இந்தியன்ஸ்.