July 7, 2012

தமிழ்நாட்டின் சில பிரச்சனைகள் சில கேள்விகள்.

தமிழ்நாட்டில் தற்போது டாப் டென் பிரச்சனைகளாக மக்கள் மத்தியில் உலா வரும் சில.




1.மின்வெட்டு
இது சில பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அதிமுக ஆட்சியில் இன்னும் அதிகமாகியதோ என்று தோன்றுகிறது,தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மின்சாரம் என்பது வரும் ஆனா வராது.

2.பேருந்துக் கட்டணம்.
பேருந்து கட்டணங்களை உயர்த்தி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருந்தாலும் ஒவ்வொரு முறை பேருந்தில் பயணிக்கும் போதும் அம்மையாரின் பெருமையைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை.

3.இடைத்தேர்தல்.
சம்மந்தப் பட்ட தொகுதி மக்களுக்கு இனிப்பான செய்தி.எதிர் கட்சியினருக்கு தோற்று விடுவோம் என்று தெரிந்தே களம் காண வேண்டிய துர்பாக்கியநிலை.பிற தொகுதி மக்களுக்கு நம் தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் வரும் என மாண்புமிகு எம்.எல்.ஏ வை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதே ஒரு பிரச்சனை.



4.தண்ணீர், தண்ணீர்.

கி.மு விலேயே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பிரச்சனை இருந்து வந்தாலும் அதன் வீரியம் இன்றும் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.அண்டை மாநில ஆறுகளிலிருந்து தண்ணீர் தர மறுப்பதால்,இந்த யமுனா,கங்கை பாயும் வடமாநிலங்களிடம் கொஞ்சம் தண்ணீர் கேட்டுபார்க்கலாமோ?

5.இலவசங்கள்.
ஆடு,மாடு,வீடு,அம்மி,பணம்,டிவி,நிலம் இன்னும் எவ்வளவோ பொருட்கள் அம்மா ஆட்சியிலும் ஐயா ஆட்சிலும் கொடுத்தார்கள்.இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பொது மக்களின் தற்போதைய கேள்வி அடுத்த தேர்தலில் கார் கொடுப்பார்களா?பைக் கொடுப்பார்களா?




6.ஐயாவா?அம்மாவா?
இது ரொம்ப ரொம்ப கஷ்டமான குளப்பமான கேள்வி,கூடவே பிரச்சனையும்.ஐயா நல்லவரா? அம்மா நல்லவரா?கிட்டத்தட்ட 25 வருட கேள்வி இது.

7.கூடங்குளம் அணு உலை.

பூதாகரமாக உருவாகி அதன் சுவடே தெரியாமல் அளிந்த பிரச்சனை.ஆனா மின்சாரம்
கேரளா,கர்நாடகம்,ஆந்திரா போயிட்டு மீதியிருந்தா நமக்கு தருவாங்க,ஏன்னா
நமக்கு பரந்த மனசாச்சே!!?

8.ஸ்பெக்ட்ரம்.
உண்மையிலேயே 175000 கோடி சுருட்டியிருக்க முடியாது,ஆனா அதுல பாதி
திருடியிருக்கலாம்.அது சரி அவ்வளவு பணத்தை எங்கு
மறைப்பார்கள்,மறைத்தார்கள்.



9.நித்தியமும் ஆனந்தம்.
நித்தியானந்தா மேல் பலருக்கு கோபம் இருந்தாலும் எனக்கு கொஞ்சம்
பொறாமையாதான் இருக்கு.என்னா வாழ்க்க வாழ்ரார் சார் அவரு வயிறு
எரியுது.இப்போதெல்லாம் நித்தியானந்தா என்றால் கிளுகிளுப்பும்
பிரச்சனையும்தான்.


10.சின்னதிரை.
ரியாலிட்டி ஷோ நடத்துறேன்கிற பேர்ல இவங்க பண்ற அலம்புக்கு ஒரு அளவே
இல்லாம போயிடிச்சி.அமெரிக்காகாரன் பண்றத இந்தியாகாரன் சுடுறான் அவனப்
பாத்து தமிழ்நாட்டுக்காரன் சுட்டு ஏறத்தாள ஆறேளு கோடி பேருக்கு அறிவை
வளர்த்துக் கொண்டிருக்கிறான்.பணத்திற்காக எதையும் செய்யும் உலகமப்பா
இது.