November 15, 2011

பெட்ரோல் விலை குறைந்து விட்டதா?ஆச்சர்யமாக இருக்கிறதே.

கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.85 குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான வரியும் சேர்த்து சென்னையில் ரூ.2.35 குறைந்துள்ளது. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்தது. அதன் பிறகு, இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்திருக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு இணையாக ரூபாய் மதிப்பு சரிவால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்ததாகவும், டிசம்பர் மாதத்துக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி விலை உயர்ந்ததாகவும் கூறி, கடைசியாக இம்மாதம் 3ம் தேதி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.1.82 உயர்த்தின. விலை உயர்வுக்கு எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி ஐ.மு.கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எச்சரித்தார். இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கை திரிணாமுல் எம்.பி.க்கள் சந்தித்து பேசினர். எனினும், விலை உயர்வை வாபஸ் பெற இயலாது என்று அவர்களிடம் பிரதமர் கைவிரித்தார். இதையடுத்து, இனி பெட்ரோல்விலையை உயர்த்தினால் அரசில் இருந்து விலகுவோம் என்று மம்தா கூறினார்.
அப்போது ஒரு பேரல் 121.67 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 115.85 டாலராக குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல் விலையை குறைக்க இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.
எனினும், பெட்ரோல் விலை குறைய வாய்ப்பே இல்லை என்றும், எண்ணெய் நிறுவனங்கள் அதிக நஷ்டம் அடைவதால் அது சாத்தியமாகாது என்றும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் கூறினார். அதே கருத்தை பிரதமர் மன்மோகன்சிங்கும் தெரிவித்திருந்தார். ‘பெட்ரோல் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்றார் அவர்.
இந்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக நேற்று முன்தினம் இரவு முதல் தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. இதுபற்றி டெல்லியில் நேற்று காலை பெட்ரோலிய அமைச்சக உயரதிகாரி ஒருவர்கூறுகையில், ‘சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன. இப்போது கச்சா எண்ணெய் விலை சிறிது சரிந்துள்ள நிலையில் அதன் பலனை நுகர்வோருக்கு அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கலாம்’ என்றார்.
இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் மாத ஆய்வு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. அதில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல் விலையை குறைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.85 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மாலை அறிவித்தன. அதன்படி, விலையுடன் வரியும் குறைவதால் சில்லரை விற்பனையில் விலை அதிகபட்சமாக ரூ.2.35 வரை குறையும் என்று தெரிவித்தன. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.35 குறைந்து ரூ.72.73ல் இருந்து ரூ.70.38 ஆகியுள்ளது. 2009க்கு பிறகு கடந்த 33 மாதங்களில் (சுமார் 3 ஆண்டுகள்) முதல் முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைய விலை புதிய விலை குறைப்பு
சென்னை ரூ.72.73 ரூ.70.38 ரூ.2.35
டெல்லி ரூ.68.64 ரூ.66.42 ரூ.2.22
கொல்கத்தா ரூ.73.15 ரூ.70.84 ரூ.2.31
மும்பை ரூ.73.81 ரூ.71.47 ரூ.2.34
மாதம் உயர்வு
2010
ஏப்ரல் ரூ.0.52
ஜூன் ரூ.3.68
செப்டம்பர் ரூ.0.37
அக்டோபர் ரூ.0.76
டிசம்பர் ரூ.3.26
2011
மே ரூ.5.00
செப்டம்பர் ரூ.3.00
நவம்பர் 3 ரூ.1.82
2006ல் விலை ரூ.52.71
2011ல் நேற்று ரூ.70.38

செய்திகள்.www.dinakaran.com

2011 ஆண்டின் மிகப்பெரிய ஆச்சர்யமாக இந்த செய்தியை சொல்லலாம்.தற்போது கூட பெட்ரோல் விலை அதிகரித்ததற்கு கூட மக்களிடையே எதிர்ப்பு கிளம்பினாலும் கிளம்பிய வேகத்திலேயே அடங்கியும் விட்டது.மாதா மாதம் இதைத்தானே பண்றீங்க என்ற எண்ணத்தினால் கூட இருக்கலாம்.அப்படி நோந்து போயிருந்த மக்களுக்கு இந்த செய்தி ஆச்சர்யமானதாகத்தான் இருக்கும்.பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வீதிக்கு வந்து போராடினால் கண்டு கொள்ளாத அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது அவர்களாகவே பெட்ரோலின் விலையை குறைத்திருக்கிறார்கள்.

எனக்கென்னவோ இதுல சந்தேகமாதான் இருக்கிறது .குறைக்கிற மாதிரி குறைத்துவிட்டு பின்னாடி விலையை மேலும் அதிகரிப்பார்களோ.

எது எப்படியோ நல்லது நடந்தா சரி.

நீர் மூழ்கிக் கப்பல் ஒரு பார்வை.

சம்மரின் எனப்படும் நீர் மூழ்கிக் கப்பல் தண்ணீரில் அமிழ்ந்து செல்கிறது.பின் நீர் மட்டத்திற்கு வருகிறது.இந்த இரு இயக்கங்களும் ஆர்க்மிடிஸ் கண்டுபிடித்த கொள்கையின் விதிமுறையின் படியே நடைபெறுகின்றன.இந்த இயக்கங்கள் செம்மையாக நடைபெறும் படி சம்மரின் அமைக்கப்பட்டுள்ளது.

நீர் மூழ்கிக்கப்பல் தண்ணீரில் அமிழ்வதற்கு தேவையான நடவடிக்கை மிகவும் எளிதானது.நீர் மூழ்கிக்கப்பலின் எடை அதை மிதக்க வைக்கும் தண்ணீரின் சக்தியை விட அதிகரிக்கும் படி செய்கிறார்கள்.நீர் மூழ்கிக்கப்பலை மிதக்க வைக்கும் காற்று அடங்கிய டாங்குகளில் கடல் தண்ணீரை நிரப்புகிறார்கள்.காற்றின் இடத்தை கடல் நீர் எடுத்துக் கொள்கிறது.நூற்றுக் கணக்கான டன் எடையுள்ள தண்ணீர் டாங்குகளில் நிறைகிறது.அதன் விளைவாக நீர் மூழ்கிக் கப்பலின் எடை அதிகரிக்கிறது.அதன் இருப்பில் உள்ளதாகக் கருதப்படும் மிதக்கும் திறன் அகற்றப் படுகிறது.நீர் மூழ்கிக் கப்பல் மிதக்கும் போதும் முழுமையாக அமிழும் போதும் இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடைக்கு இடையே உள்ள வித்தியாசம்.


நீர் மூழ்கிக் கப்பல் ,அதன் டாங்குகளில் உள்ள தண்ணீர் இரண்டின் எடையும் சேர்த்து இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடையை விட அதிகமாக இருந்தால் கப்பல் மூழ்கிவிடும்.அதிக பட்சமாக நீ.கப்பல் 600 அடி ஆழம் வரை செல்லலாம்.அதை விட ஆழத்திற்குச் சென்றால் நீ.கப்பலின் உடற்பகுதியை தண்ணீர் வலுவாக அழுத்தும் அபாயம் ஏற்படும்.
நீ.கப்பலை ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் நிறுத்தி வைப்பதற்கு மின்சார மோட்டார்கள் மூலம் கப்பலிலிருந்து தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.அதாவது நீ.கப்பலின் எடை,இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடைக்குச் சமமாகும் வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.அப்போது நீ.கப்பல் மேல் நோக்கியும் நகராமல் கீழ் நோக்கியும் நகராமல் சம நிலையில் மிதக்கும்.நீ.கப்பல் மேல் மட்டத்திற்கு வருவதற்கு டாங்குகளில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள்.அப்போது நீ.கப்பலின் எடை,இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரை விட இலேசானதாகிவிடுகிறது .இதனால் நீ.கப்பலும் மேல் மட்டம் வந்து விடுகிறது.


இதுதான் நீர்மூழ்கிக்கப்பல் இயங்கும் விதம்.

அக்னி 2 பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி.

அணு ஆயுதங்களை தாங்கி, 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 2 பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


அக்னி 2 ஏவுகணைகளின் துல்லிய தன்மை மற்றும் தாக்கும் தூரத்தை மேம்படுத்தி அக்னி 2 பிரைம் ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது. அக்னி 2 ஏவுகணை, 2,000 கிமீ தூரம் சென்று இலக்கை தாக்கும். அக்னி-மூன்று 3,500 கிமீ சென்று தாக்கும். இரண்டுக்கும் இடைப்பட்டு 3000 கிமீ தூரம் தாக்கி அழிக்கும் வகையில் அக்னி 2 பிரைம் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இது 20 மீட்டர் நீளம், 17 டன் எடை கொண்டது.
ஒடிஷா மாநிலம் வீலர் தீவில் உள்ள ஒருங்கிணைந்தஏவுகணை சோதனை தளத்தில், இன்று காலை 9 மணிக்கு அக்னி 2 பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


நிர்ணயித்த இலக்கை துல்லியமாக தாக்கியதாக ராணுவ அதிகாரிகள் கூறினர். கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அக்னி 2 பிரைம் சோதனை தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் .www.dinakaran.com

வேறு பெயரில் உருவாகிறது.ரஜினியின் சுல்தான் தி வாரியர்.

புதிய பெயர், புதிய கதையுடன் மீண்டும் ஆரம்பமாகும் சுல்தான்!
ரஜினியின் சிவாஜி – தி பாஸ் படத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம் சுல்தான் தி வாரியர். சௌந்தர்யா ரஜினி இயக்க, அவரது ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்க ரஜினியின் அனிமேஷன் படமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டது.
இந்திய நடிகர் ஒருவருக்காக அனிமேஷனில் படம் தயாராவது இதுவே முதல்முறை என்பதால் பெரும் ஆர்வம் காட்டினர் ரசிகர்கள்.


ரஜினியும் வியட்நாம், கம்போடியா என வித்தியாசமான லொகேஷன்களில் இந்தப் படத்துக்காக நடித்துக் கொடுத்தார்.
ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தப் படம் குறித்த காலத்துக்குள் முடியவில்லை. அதற்குள் தலைவர் எந்திரனில் படுபிஸியாகிவிட்டார்.
எந்திரன் படம் வெளியான சூட்டோடு ராணாவை அறிவித்தார் ரஜினி. இந்தப் படம் சுல்தானின் மறுவடிவம் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அதை சௌந்தர்யா மற்றும் ராணாவை இயக்கும் கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் திட்டவட்டமாக மறுத்தனர். சுல்தான் வேறு, ராணா வேறு.ராணா வெளியான பிறகு சுல்தான் வரும் என்று இவர்கள் அறிவித்த பிறகே வதந்திகள் அடங்கின.
ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை, ஓய்வு என நாட்கள் கடந்த நிலையில், சுல்தான் வருமா வராதா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் சுல்தான் வருவது உறுதி என்று தெளிவாக அறிவித்திருந்தார் சௌந்தர்யா. இப்போது தன் ட்விட்டர் பக்கத்தில் அதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.


இது குறித்து அவர் நேற்று ட்விட்டரில் (@sound_d_rajini)பதிவிட்டிருந்த செய்தியில், “எல்லோரும் எனது அடுத்த புராஜெக்டுகள் பற்றியும் அப்பா பற்றியும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அப்பா மிகவும் நலமாக இருக்கிறார்.
சுல்தான் எனது கனவுப் படம்.அதை உருவாக்குவதில் சில தடங்கல்கள் வந்தன, தேவையற்ற தவறான திருப்பங்கள் நேர்ந்தன. இப்போது அந்தப் படத்தை புதிய தலைப்பு மற்றும் கதையுடன் தொடங்குகிறேன்,”என்று கூறியுள்ளார்.


எந்த கதையோ என்ன தலைப்போ தலைவர் படம் வந்தால் மகிழ்ச்சிதான்.



தகவல்.facebook.com/anbullarajinikanth/

நன்றி.

November 14, 2011

அணு உலை பாதுகாப்பானதே கோல்கத்தாவில் அப்துல் கலாம் பேட்டி.

கூடங்குளம் அணுமின் உலை உண்மையிலேயே நவீனமானது. அதன் பாதுகாப்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது’’ என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியுள்ளார்.



கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலான்மை கல்வி நிறுவன(ஐ.ஐ.எம்) பொன் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று சென்றிருந்தார். அவரிடம், அணுமின் சக்தி திட்டத்துக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கலாம் கூறியதாவது:
பூமியில் இருந்து கிடைக்கும் எல்லாவிதமான எரிபொருள்களும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் வெளியாகும் மாசு, 30 பில்லியன் டன் கார்பன்டை ஆக்சைடுக்கு சமமானது.
இதனால் பூமிக்கு பாதிப்பு ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு சுத்தமான எரிசக்திதான். சூரிய சக்தி, அணு சக்தி, நீர் சக்தி, உயிர் எரிபொருள் போன்றவைதான் சுத்தமான எரிசக்தி.
இந்தியாவுக்கு மின்சக்தி அதிகம் தேவைப்படுகிறது. 2 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள சுத்தமான மின்சக்தியை அளிக்க கூடங்குளம் அணுமின் நிலையம் தயாராக உள்ளது. அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். கூடங்குளம் அணு மின்நிலையத்தை நான் நேரில் சென்று பார்த்தேன். அது உண்மையிலேயே நவீனமயமான அணு உலை. அதன் பாதுகாப்பில் எனக்கு முழுநம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.

கூடங்குளத்தில் பத்ரிகையாளர்கள் நேரடி விசிட்.

கூடங்குளம் அணுமின் நிலை யத்தின் பாதுகாப்பு குறித்து மக் களுக்கு எடுத்துச் சொல்லும் விதத் தில் நெல்லையில் இருந்து பத்திரி கையாளர்களை அழைத்து, அணு உலை எவ்வாறு செயல்படுகிறது , பாதுகாப்பு அம்சங்கள் என் னென்ன? என்பது குறித்து அதிகாரிகள் விளக்கினர்.



அணு உலையின் உச்சிக்கே அழைத்துச் சென்று விளக்கம்அளித்தனர் .
கூடங்குளத்தில் தற்போது இரண்டு அணு உலைகள் கட்டப் பட்டுள்ளன. அவற்றில் ஒரு அணு உலை இயக்கத் தயார் நிலையில் உள்ளது. அடுத்த அணு உலையின் பணிகள் இன்னும் இரண்டு அல் லது மூன்று மதங்களில் முடியும்.
முதல் அணு உலையின் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தயாரிக்க முடியும். முதலாவதாக அணு உலை, மின்சாரம் தடைப் பட்ட இடைக்கால நேரத்தில் அணு உலையை குளிர்விக்க 4 ஜெனரேட்டர் வசதி உள்ளது.
முற்றிலும் மின்தடை ஏற்பட்டால் தானியங்கி வசதி மூலம் அணு உலையின் அடிப்பகுதியில் அமைக் கப்பட்டுள்ள துளைகளில் இருந்து காற்று உள்ளே இழுக்கப்பட்டு உடனடியாக நீராவியாக மாறி அணு உலையை குளிர்வித்து விடும். இரண்டாவது ஏற்பாடாக அணு உலையை குளிர்விக்க 12 லட்சம் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டாங்கிகள் அணு உலைக்குள்ளே தயார் நிலையில் அமைக்கப்பட் டுள்ளது .
இது தவிர அணு உலையை இயக்க அணு உலைக்கு தேவை யான 75 டன் யுரேனியம் தற்சமயம் கையிருப்பில் உள்ளது.



அணு உலைக்கு உள்ளேயும் எந்த பாதிப்பும் வராது. அணு உலைக்கு வெளியேயும் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு கட்டப் பட்டுள்ளது.
அணு உலை இயங்கினால் அணு உலைக்குள் தொழில்நுட்ப ஊழியர்களைத் தவிர யாரும் செல்ல அனுமதி கிடையாது முழுக்க முழுக்க அணு உலையை இயக்க கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு அறை உள்ளது. அதில்தான் அணு உலையை இயக்க வசதிகள் செய் யப்பட்டுள்ளன.
இந்த அணு உலைக்குள் ஒரு முறை யுரேனியத்தை நிரப்பினால் 11 மாதங்கள் வரை எந்த பராமரிப் பும் செய்ய தேவையில்லை . இது தவிர 8 ஆண்டுகளுக்கு அணுக் கழி வுகளை சேமித்து வைக்கக் கூடிய பாதுகாப்பு கலன்களும் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. இதை யெல்லாம் விட அணுக்கழிவுகளை மறு சுழற்சிமூலம் மீண்டும் , மீண் டும் பயன்படுத்தி அணுக் கழிவுகள் தேங்காமல் இருக்கக்கூடிய ஏற்பாடும் உள்ளது .
அணு உலை இயக்கபட்டால் அணுஉலை மூலம் கிடைக்க கூடிய மின்சாரம் நெல்லை அபிசேக பட்டியில் தயாராக உள்ள 400 கிலோ மெகாவாட் மின் திறன் கொண்ட பவர் கிரிட்டின் மூலம் தமிழகத்திற்கும், மற்ற மாநிலங் களுக்கும் விநியோகம் செய்யும் அளவிற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என்று விஞ் ஞானிகள் விளக்கினர்.
இந்த அணு உலை சுனாமி, புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகள் கூட தாக்காத அளவிற்கு கட்டப்பட்டுள்ளது . இதனால் மீன்வளமும் பாதிக்காது. அணு உலைக்கு தேவையான தண்ணீர் பேச்சிபாறை அணையிலிருந்து பயன்படுத்தப்படும் என்பது பொய்யான தகவலே. இப்படி ஒரு தகவல் வெளியே கசிய விடப்படுகிறது. உண்மை அதுவல்ல. அணு உலைக்கு தேவையான தண்ணீர் முழுக்க முழுக்க கடல்நீரையே மறு சுழற்சி மூலம் உப்பு நீரை நன்னீராக மாற்றி அணுஉலையை குளிர்விக்க, குடிநீர், மற்ற வசதிகளுக்கும் பயன் படுத்தப்பட உள்ளது. இந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தற் போது வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இது ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப் பட்ட பணியாகும்.
எனவே பேச்சிப்பாறை அணையின் நீர் அணு உலைக்கு பயன்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. பாதுகாப்பைப் பொறுத்த மட்டில் மத்திய தொழிற்சாலைகள் பாது காப்பு படையை (சி.ஐ.எஸ்.எப்.) தாண்டி அணு உலைக்குள் அவ் வளவு எளிதில் செல்லமுடியாது , 24மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய மத்தியப் படையினரால் கூடங் குளம் அணு உலை கண்காணிக்கப் பட்டு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ளது எனவே சர்வதேச அளவில் அடுத்த தலைமுறைக்காக தொலை நோக்கு பார்வையோடு பாதுகாப்பாக கட்டப்பட்ட முதல் அணுமின் நிலையம் கூடங்குளம் நியுக்ளியர் பவர் புராஜக்ட் தான் என்ற பெரு மையை கூடங்குளம் அணு மின் நிலையம் பெறுகிறது .
அணு உலைக்குள் உள்ள சிறப்பு அம்சங்கள்
கூடங்குளம் அணு உலையில் சிறப்பு அம்சங்களாக அணு உலைக்குள் அவசர கால குளிர்விப் பான் , நீராவி கலன் , இயல்பு நிலை குளிர்விப்பான் , போரானை உள் செலுத்தும் அறைகள் , தானியங்கி ஹைட்ரஜன் மறு இணைப் பான்கள், கடல் நீரை குடிநீராக்கும் மாற்று இயந்திரங்கள் , தடை யில்லா ஜனரேட்டர்கள் வசதி, கம்ப்யூட்டர் கட்டுபாட்டு அறைகள் போன்றவை உள்ளன என்று விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரி கள் விளக்கினர்.

செய்திகள்.தினக்கதிர்.