October 20, 2014

கரி கரியாய் கரணமாம் ...

இரண்டுபேர் ஒரு பையனைப்பற்றி பேசிட்டு இருந்தாங்க ..அந்த பையன் இருக்கானே ரொம்ப நல்லவன் ஒரு கெட்டப்பழக்கம் கிடையாது .தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பான் ..எந்த சண்டை சச்சரவுக்கு ஒண்ணும் போறதில்லை ரொம்ப அமைதியான பையன் .சிக்கனம்னா என்னானு அவன்கிட்டதான் படிக்கணும் அவ்வளவு சிக்கனம் . அவனை நம்பி பொண்ணு கொடுக்கலாம் அப்படி இப்படினு ஆகா ஓகோன்னு பேசிட்டு இருந்தாங்க ..இத கேட்டுட்டு இருந்த நான் அண்ணே அந்த அரிசி வியாபாரி பையனைப் பற்றிதானே பேசுறீங்க ..
.
ஆமாப்பா ..
.
ஆமாண்ணே அந்தபையன் ரொம்ப நல்லவன் .பாருங்களேன் போனவாரம் நோயாளி  ஒருத்தருக்கு இரத்தம் தேவைப்பட்டுச்சு ..இவனுக்கு அதே வகை ரத்தம்னு இவனிடம் கேட்டதற்கு உடனடியாக தன்னையே நோயாளி ஆக்கிட்டாண்ணே ..காய்ச்சல் பீச்சல்னு ....
.
இதுல என்னடா தப்பு இருக்கு தன் உடம்பு பாதிக்கப்பட்டிருந்ததால இரத்தம் கொடுக்க தயங்கினான் அவ்வளவுதானே ....
.
ஆமாண்ணே அவன் நல்லவனாச்சே அதான்  தரமுடியாதுன்னு சொலறதுக்கு பதிலா தரக்கூடிய சூழ்நிலையில் இல்லையென சுத்தி சொன்னான் அவ்வளவுதான் .....
.
ஆமாடா அவன் இரத்தம் கொடுக்க முன்வரவில்லை என இவ்வளவு நாசூக்கா கேலி பண்றியே நீ எத்தனை பேருக்கு எத்தனை லிட்டர் இரத்தம் கொடுத்துருக்க சொல்லு பார்க்கலாம் .....
.
இந்த கேள்வி என் நெஞ்சில் இடியாய் இறங்கியது ...அந்த இடியின் பாதிப்போடு சொன்னேன்.....அண்ணே இன்னும் யாருக்கும் இரத்தம்  கொடுக்கலண்ணே .......
.
தம்பி கரியை நம்ம மூஞ்சில வச்சுட்டு அடுத்தவன் மூஞ்சி கரியை பாக்கக்கூடாது சரியா ....
.
சரிண்ணே ....
.
.
கொஞ்சம் உண்மை கொஞ்சம் கற்பனை தொகுப்பிலிருந்து .....