November 30, 2010

கவிஞன் ஆனந்த்

புன்னகை பூத்தவளே என் புன்னகை பறித்தவளே பழகத்தானே புன்னகை கொடுத்தான் ஏன் புன்னகையோடு பறந்து போகிறாய் ஓரப்பார்வையில் ஆளைக் கவிழ்த்து விட்டு மீதிப்பார்வையை ஏனடி மறைத்தாய் உன் மீதிப்பார்வையும் கொடுத்துவிடு மௌனப்பூட்டை உடைத்துவிடு உறவை கொஞ்சம் மலரவிடு முடிவைப்பற்றி கவலை விடு

November 29, 2010

அன்பு

அன்பைப் பற்றி சொல்வதென்றால் அன்பில்லையேல் இவ்வுலகம் இல்லை அப்படியென்று சொல்ல மாட்டேன்.காரணம் பெரும்பாலும் அன்பு என்பது பணத்தைப் போலவே பரிமாறப்படுகிறது. அதாவது பரிமாற்றங்கள் நடைபெறுகின்றது.இவ்வளவு கொடுத்தால் இவ்வளவு கிடைக்கும் என்ற விகிதக்கணக்கு பார்க்கப்படுகிறது.இது மனிதனின் இயல்பு யாராவது யார்மீதாவது அ ன்பு செலுத்தினால் அவர்களும் நம்மீது அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பது இயல்பு அப்படி நினைக்காமல் இருந்தால் ஆச்சரியம்தான் ஏனென்றால் மனிதன் அன்பு செலுத்துவதைவிட அன்பு செலுத்தப்படுவதைதான் அதிகம் விரும்புகிறான்.இப்படி அன்பு என்பது வியாபாரம் ஆகிவிட்டது.இந்த உண்மையை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளாவிடினும் எனக்கு சம்மதமே ஏனென்றால் நான் உங்களை அன்பு செய்கிறேன்.தவறகள் தவிற்கப்பட வேண்டியதல்ல திருத்தப்பட வேண்டியவை.இதை நான் சொல்லவில்லை ஏதோ ஒரு வெளிநாட்டு அறிஞர் சொன்தாக கேள்வி.
நன்றி
வணக்கம்

November 28, 2010

ஆர்வக்கோளாறு

வணக்கம்
ஆர்வக்கோளாறு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகவே நான் கருதுகிறேன்.சிலருக்கு ஆர்வக்கோளாறினால் நன்மை விளைவதும் உண்டு சிலருக்கு பாதகமாகவும் மாறிவிடுவதும் உண்டு.எதற்கு இதை இப்போது சொல்கிறேன் என்றால் என் ஆர்வக்கோளாறால் நன்மை விழைந்ததால்தான்.விழைந்தை அறுவடை வேறு செய்திருக்கிறேன்.அந்த நன்மை இணையம்தான்.இணையத்தின் மூலம் பல பயன்கள் உண்டென்று தெரிந்தாலும் அதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டது இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்தப் பின்னர்தான்.பல தகவல்கள்,விமர்சனங்கள்,கட்டுரைகள்,நண்பர்கள்,தகவல்பரிமாற்றங்கள்.இப்படி பட்டிமல் நீண்டு கொண்டே செல்லும்.இவ்வாறான பல அனுபவங்கள் கிடைத்தது என் ஆர்வக்கோளாறால்தான்.அதனால் அனைவரும் ஆர்வக்கோளாறோடு இருப்பது நல்லது என நான் பரிந்துரைக்கிறேன்.இதை யாராவது தவறிப்போய் படிக்க நேர்ந்திட்டால் ???