December 9, 2011

உலகக் கோப்பையை வென்ற அணிகள் ஒரு பார்வை.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி ஆனால் இந்திய மக்களால் அதிகம் ரசிக்கப்படும் விளையாட்டு கிரிக்கெட்.ஐந்து வயது சிறுவன் முதல் எண்பது வயது முதியவர் வரை என அனைத்து தரப்பினரையும் தன்னுடைய ரசிகர்களாக வைத்திருக்கிறது கிரிக்கெட்
.



கிரிக்கெட்டை கண்டு பிடித்து பல ஆண்டுகள் வரை டெஸ்ட் போட்டிகள்தான் நடைபெற்றன.1970 களில்தான் ஒரு நாள் போட்டிகள் அறிமுகப் படுத்தப்பட்டன.1975 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது.இதன் பின்னர்தான் கிரிக்கெட்டிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இது வரை மொத்தம் பத்து முறை உலககோப்பை போட்டிகள் நடந்துள்ளன.அதில் வெற்றிப் பெற்ற அணிகளின் சிறு பட்டியல் இதோ.





1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின இதில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றது.போட்டி விவரம்.மே.தீ.291/ 60 ove 8 விக்.

ஆஸ்.274/58.4 overs all out.






1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மீண்டும் மேற்கிந்திய தீவு அணி வெற்றி வாகை சூடியது.இது இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் கிடைத்த வெற்றியாகும்.போட்டி விவரம்.

மே.தீ.286/60 overs . 9 Wickets


இங்கி: 194/51 overs all out







1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப்பெற்ற போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

போட்டி விவரம்.
இந்தியா:183/54.4 overs all out


மே.தீ:140/52 overs all out






1987 ல் நடைப்பெற்ற உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவும் , பாகிஸ்தானும் இணைந்து நடத்தின.இத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து அணியும் மோதின இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றது.

போட்டி விவரம்.
ஆஸ்: 253/50 overs 5 Wickets


இங்கி: 246/50 overs 8 Wickets




1992 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போட்டிகளை ஆஸ்திரேலியாவும் , நியூசிலாந்தும் இணைந்து நடத்தின.இத்தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றிப்பெற்றது.போட்டி விவரம்.பாகி: 249/50 overs 6 Wickets


இங்: 227/49.2 all out




1996 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா , பாகிஸ்தான் , இலங்கை ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தின.இத்தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது.
போட்டி விவரம்.ஆஸ்: 241/50 overs 7 Wickets


இலங்: 245/46.2 overs 3 Wickets




1999 ல் இங்கிலாந்தில் நடைப்பெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது.

போட்டி விவரம்.ஆஸ்: 133/20.1 overs 2 wickets


பாகி:132 All out 39 Overs




2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைப்பெற்ற உலகக்கோப்பை போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியை பெற்றது.

போட்டி விவரம்.
ஆஸ்: 359/ 50 overs 2 wickets


இந்தியா: 234 All out in 39.2 Overs





2007 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைப்பெற்ற உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
போட்டி விவரம்.
ஆஸ்.281/ 38.0 overs 4 wickets


இலங்.215 /36.0 overs 8 wickets .





2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியா , இலங்கை , வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.மும்பையில் நடைப்பெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது.

போட்டி விவரம்.
இந்தியா.277/48.2 overs 4 wickets;


இலங்.274/50 Overs 6 wickets,

December 7, 2011

இயற்கையின் பத்து பிரம்மாண்டங்கள்.

இயற்கை அன்னையின் பிரம்மாண்டங்களில் சில.



கிரேட் பேரியர் ரீப் . ஆஸ்திரேலியா



இது உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளின் சங்கமம் ஆகும். வடக்கு கிழக்கு கடற்கரை சுமார் 344.400 சதுர
கிலோமீட்டர் ஆகும்.ஒரு பகுதிக்கு 2,600 கிலோமீட்டர் .இந்த நீட்சி 2.900 தனிப்பட்ட திட்டுகள் மற்றும் 900 தீவுகளை
உள்ளடக்கிய உலகின் மிக பெரிய பவள பாறைகள் அமைப்பு ஆகும்.இங்கு
ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங், போன்ற பொழுதுபோக்குகள் பிரபலமானவை.




நயாகரா நீர்வீழ்ச்சி,அமெரிக்கா

கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா இடையிலான எல்லையில் இந் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது, நயாகரா
நீர்வீழ்ச்சி மூன்று தனி நீர்வீழ்ச்சிகளை கொண்டிருக்கிறது.

இது உயரமானது அல்ல, ஆனால் அதிக அகலமும் லட்சகணக்கான கேலன் நீரையும் சுமந்து கொண்டிருக்கிறது.




குனங் முலு தேசியப்பூங்கா,மலேசியா



இந்த பூங்கா உலகின் மிக விரிவான மற்றும்
கண்கவர் குகை அமைப்பு கொண்டிருக்கிறது.
இங்கு 600 அடி உட்புற
நீர்வீழ்ச்சிகளை காண முடியும். அது மட்டுமல்லாமல் இங்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான வெளவால்கள்
உயிர் வாழ்கின்றன.இதன் மொத்தப் பரப்பு 754 சதுர கி.மீட்டர்கள்.





விக்டோரியா நீர்வீழ்ச்சி, சாம்பியா ,ஜிம்பாப்வே


விக்டோரியா நீர்வீழ்ச்சியில் ஒரு நிமிடத்தில் வெளியேறும் தண்ணீரின் அளவு 120 மில்லியன் கேலன்கள் ஆகும். 1,500 மீட்டர் உயரமுடைய குன்றின் மீதிருந்து
விக்டோரியா நீர்வீழ்ச்சி கீழே விழுகிறது.




பரீகுடின் எரிமலை,மெக்ஸிகோ


பரீகுடின் எரிமலை 1943 ஆம் ஆண்டு வெடித்ததில் இரு கிராமங்கள் எரிமலைக் குழம்பால் மூடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.இன்றும் இந்த எரிமலை லாவா குழம்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.இதன் உயரம் 2,800 மீட்டர்கள்.





ஏஞ்சல் நீர்வீழ்ச்சி,வெனிசுலா


807 மீட்டர் உயரம் கொண்ட ஏஞ்சல் நீர் வீழ்ச்சி உலகின் உயரமான இயற்கை நீர்வீழ்ச்சிகளில் உயரமானது ஆகும்.





அரோரா பொரியலிஸ்,



அரோரா பொரியலிஸ் என்பது இயற்கையின் மாற்றத்தால் ஏற்படும் ஒரு வகை ஒளியின் வாண வேடிக்கை ஆகும். இது முழுக்க முழுக்க இயற்கையின் ஜாலமாக கருதப்படுகிறது.இது பெரும்பாலும் நார்வே,
ஸ்வீடன், பின்லாந்து, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அலாஸ்கா மற்றும் கனடா போன்ற
நாடுகளில் இந்த ஒளி நிகழ்வு அடிக்கடி தோன்றுவதாக அறியப்படுகிறது.பெரும்பாலும் செப்டம்பர் ,ஏப்ரல் ,அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் வானத்தில் இயற்கையின் வாணவேடிக்கைகள் நடைபெறுகிறது.





எவரெஸ்ட் சிகரம்,

எவரெஸ்ட் சிகரம் பூமியில் மிக உயரமான பகுதி ஆகும்.எவரஸ்ட்டின் உயரம். சுமார் 8.844 மீட்டர்
இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு முதல் ஐந்து மில்லி மீட்டர் வளர்ச்சி பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.







ரியோ டி ஜெனிரோ துறைமுகம்.பிரேசில்

ரியோ டி ஜெனிரோ துறைமுகம் சுமார் 30 கி.மீட்டர்கள் நீளத்திற்கு இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும்.





கிராண்ட் கேனியன்,அரிசோனா,அமெரிக்கா



கிராண்ட் கேனியன் பத்து லட்சம் வருடங்களுக்கு முன்பே கொலராடோ நதியின் நீரோட்டத்தால் உருவானதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.இது
445 கி.மீட்டருக்கு மேல் நீளமும் கிட்டத்தட்ட 26 கி.மீட்டர் அகலமும் கொண்டதாகும்.இது பார்ப்பதற்கு வறண்ட பாலைவனம் போல் காட்சி அளிக்கும் ஓர் இயற்கையின் அ ற்புதம்.