April 7, 2015

பொங்கும் செம்மரம் ...

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட இருபது பேர் சுட்டுக்கொலை .அதில் சுமார் பனிரெண்டு பேர் தமிழர்களாம் .அதனால் சிலபல மனித உரிமை ஆர்வலர்களும்.சமூக போராளிகளும் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்களாம்.தவறு எவர் செய்தாலும் தவறுதான் அதில் கூடுதல் குறைவு என்ற வாதத்திற்கே இடமில்லை .அதனால் தமிழன் தவறு செய்தால் தவறு சரியாகாதுதானே .அப்படி இருக்கையில் ஒரு அரசின் எச்சரிக்கையையும் அவமதித்து அங்கு கண்காணிப்புக்கு இருந்த அதிரடிப்படை வீரர்களுக்கும் கட்டுப்பட மறுத்தவர்களை தாக்குவதை தவிர வேறு உபயம் இருந்திருக்க முடியாது .துரதிர்ஷ்டவசமாக இருபது பேர் மரணித்தது வேதனைக்குரியதுதான் .இங்கு திருட்டு பெரிய குற்றமல்லதான் .ஆனால் தேசத்துரோகம் பெரிய குற்றம்தானே ..அரசையும் இயற்கையையும் மதிக்காதவர்களுக்கு இந்த சம்பவம் ஒருபாடமாக அமையலாம் .நம்ம ஊர்ல இந்த பிக்பாக்கட் அடிக்கிறவன் ,தாலி அறுப்பவன்,வீடேறி திருடுபவன் இவர்களல்லாம் தங்கள் வயிற்றுக்காகவும் வாழ்க்கைக்காகவும்தான் திருடுகிறார்கள். அவர்களும் தமிழர்கள்தான் .ஆகவே எதிர்பாரமால் அகப்பட்டுவிட்ட திருடனை அவன் உடல் நோகாமல் காவல் துறையினரிடம்  ஒப்படைத்துவிடுவீர்காளா ...?மரண அடி கொடுத்தல்லவா காவல் துறையினரிடம் ஒப்படைப்போம் ...நம் மனித நேயம் அப்படி இருக்க எங்கோ நடந்த சம்பவத்திற்கு போராளி என்ற பெயரில் நம்மை விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறோம் ..காரணம் தமிழன் தாக்கப்பட்டானாம் .நாம் பொறாமையோடு எதிர்கொள்ளும் அடுத்த வீட்டுக்காரனும் தமிழன்தான் அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் ஏன் நம் நெஞ்சு இவ்வளவு பொங்குவதில்லை .காரணம் வீம்பு ,கர்வம் ,எரிச்சல் போன்ற இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள்தான் .எப்போதும் நாம் கண்ணுக்கு தெரியாதவனை மட்டும்தானே  கொண்டாடுவோம் .அதுபோல் கண்ணில் அகப்படாமல் தொலைவில் உள்ளவன் பெயரிலும் பரிவு கொள்கிறோம் .அந்தப் பரிவு ஒரு விளம்பரத்துக்காக மட்டும் இல்லாமல் இருப்பது வரை நல்லது ...
.
.
தோன்றியது  ...

No comments: