November 15, 2015

நட்பு....

நேற்று நண்பர் ஒருவரோடு சின்ன மனகசப்பு உண்டாகிவிட்டது.தவறு அவர்பேரில் என்பதால் நான் அதிகப்படியான ரோசத்தோடே இன்று மாலைவரை நடந்துகொண்டேன்.அப்படியே இரவும் வந்தது.நான் வேண்டா வெறுப்பாக வேடிக்கை பார்ப்பதில் கவனத்தை செலுத்த முயற்சித்துக் கொண்டிருக்கையில் என்னருகே வந்த நேற்றைய நண்பர் ,எனக்கு இப்போ பாதிதான் தேவைப்படுது அதுக்குமேல போனா வீட்டுக்கு போறது கடினமாகிவிடும் அதனால் நாம இரண்டுபேரும் பகிர்ந்து கொள்ளலாமே என்றார்.எனக்கு பழைய ரோசம் அப்படியேதான் இருந்தது எனினும் அவருக்கு என்னிடம் வெறுப்பு இல்லை என்பதை அறிந்துகொண்டதால் அல்லது அவர் மீண்டும் நெருங்கிவர முற்படுவதால் நானும் உங்களுக்கு அவ்வளவு தேவையில்லையென்றால் நானும் அதில் பங்கெடுத்துக்கிறேன் என சொல்லி நூற்றி முப்பதில் என் கோபத்தையும் ரோசத்தையும் கழுவினேன்.
.
இப்போது இதை எதுக்கு சொல்றேன்னா கோபத்தை நீட்டிக்க பலவாய்ப்புகள் உண்டானால் குறைக்க அல்லது இல்லாமலாக்க சில வாய்ப்புகளேனும் உண்டாகலாம் அதை நாம் பயன்படுத்துவதில்தான் நாளைய நம் நட்புகளின் இணக்கம் உறுதியாகிறது..
.
பின்குறிப்பு..
பாதிக்காக இவன் வியாதி வந்தவன்போல் மாறிப்போனதாக நீங்கள் நினைத்தால் கம்பனி பொறுப்பேற்காது....