August 23, 2011

சாண்டில்யன் அவர்களின் படைப்புகள்.

சாண்டில்யன் அவர்களின் படைப்புகள்.



1.கடல் புறா(மூன்றுபாகம்)

2.யவன ராணி (4 பாகம்)''


3.ராஜ முத்திரை (2 பாகம்)''

4.பல்லவ திலகம்''


5.விலை ராணி''


6.மன்னன் மகள்''
7.ராஜ திலகம்''

8.ஜலதீபம் (3 பாகம்)

9.கன்னி மாடம்''

10.சேரன் செல்வி

11.கவர்ந்த கண்கள்

12.மலை வாசல்''


13.ஜீவ பூமி''

14.மஞ்சள் ஆறு''

15.மூங்கில் கோட்டை''

16.சித்தரஞ்சனி''

17.மோகினி வனம்''

18.இந்திர குமாரி''

19.இளைய ராணி''

20.நீள்விழி''

21.நாக தீபம்''

22.வசந்த காலம்''

23.பாண்டியன் பவனி''

24.நாகதேவி''

25.நீல வல்லி''

26.ராஜ யோகம்''

27.மோகனச் சிலை''

28.மலையரசி''

29.கடல் ராணி''

30.ஜலமோகினி''

31.மங்கலதேவி''

32.அவனி சுந்தரி''

33.உதய பானு''

34.ராஜ்யஸ்ரீ''

35.ராஜ பேரிகை''

36.நிலமங்கை''

37.புரட்சிப் பெண்''

38.சந்திரமதி''

39.நங்கூரம்''

40.ராணா ஹமீர்''

41.ராணியின் கனவு''

42.செண்பகத் தோட்டம்''

43.மனமோகம்''

44.மதுமலர்''

45.அலை அரசி''

46.மண் மலர்''

47.மாதவியின் மனம்''

48.திருப்பாவை''

49.கம்பன் கண்ட பெண்கள்''

இன்னும் சில புதினங்கள் இருக்கக் கூடும் அவைகளைப் பற்றி சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.மேலே குறிப்பிடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் வானதி பதிப்பகத்தில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.


நன்றி

வரலாற்று நாவலாசிரியர் சாண்டில்யன் அவர்களைப்பற்றி ஒரு சிறு குறிப்பு

வரலாற்று நாவலாசிரியர்கள் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருபவர்கள் இருவர்.ஒருவர் கல்கி ர.கிருஷ்ணமூர்த்தி மற்றொருவர் சாண்டில்யன்.


நாம் இப்போது பார்க்க போவது சாண்டில்யன் அவர்களைப் பற்றி.

நான் படித்த முதல் வரலாற்று நாவல் சாண்டில்யன் அவர்கள் படைத்த யவனராணி. இந்த நாவலை நான்கு பாகங்களாக வெளியிட்டிருந்தார்கள்.ஒவ்வொரு பாகமும் கிட்டத்தட்ட நாநூறு பக்கங்களுக்கு மேல் கொண்டவை.

ஒவ்வொரு பாகத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது அவ்வளவு நளினத்தோடு எழுதியிருப்பார்.வரலாற்றுச் சான்றுகள் பாதி கற்பனை பாதி என்றிருந்தாலும்,அந்த கதாப் பாத்திரங்களோடு நாமும் இணைந்துவிடுவோம் இது சாண்டியல்யன் அவர்களின் தனிச் சிறப்பு.

அதுபோல கடல்புறா,ஜலதீபம்,மூங்கில் கோட்டை,மாதவியின் மனம் இன்னும் நிறைய நாவல்களை இப்படிச் சொல்லிக் கொண்டேச் செல்லலாம். அனைத்து நாவல்களும் நம்மைக் கவரக்கூடியதே.

சாண்டில்யன் அவர்களுடைய நாவல்கள் பெரும்பாலும் நல்ல தமிழ் மசாலா திரைப்படம் போலதான்.

காதல்,நகைச்சுவை,பாசம்,நட்பு,சண்டை இப்படி எல்லாம் கலந்து ஒரு அறுசுவை உணவாக படைக்கப்பட்டவை.அந்த உணவை உட்கொண்டு நானும் இன்புற்றேன் என்பதில் ஐயமில்லை.


அவருடைய இளமைக்காலம்,பணிபுரிந்த இடங்கள்,படைத்தப் புதினங்கள் ஆகியவை தமிழ் விக்கிபீடியா உதவியுடன் தொகுக்கப்படுகிறது.





பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில்பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது ராஜாஜி சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய விடுதலை இயக்கம் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசு இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார்.
1929இல் ரங்கநாயகியை என்பவரை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. கலியாணசுந்தரனார்(திரு. வி. க)நடத்திய வார இதழ் ''நவசக்தியில்'' பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள்.

அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை ''சாந்தசீலன்'' ஆகும்.

அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, ''கண்ணம்மாவின் காதலி'', ''அதிர்ஷ்டம்'' என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது.

சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.


ஹிந்துஸ்தான் டைம்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜயா ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி, நடிகர் சித்தூர்.வி. நாகையா இருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இவர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்க வழிவகுத்தது. ''சுவர்க்க சீமா'' (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை ''சினிமா வளர்ந்த கதை'' (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார். ''பெர்த் ஆஃப் நியூஸ்பேப்பர்'' என்ற ஆவணப்படமும் தயாரித்து வெளியிட்டார்.


ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். ''பலாத்காரம்'' என்னும் அரசியல் புதினத்தை எழுதித் தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். . ''பாலைவனத்துப் புஷ்பம்'', ''சாந்நதீபம்'' இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள்.பின் குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன.

இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக ''கமலம்'' என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. (கமில் சுவெலபில், )சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் இவ்வுலகத்தை விட்டு பிரிந்தார்.

அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவருடைய படைப்புகள் பல நூற்றாண்டுகள் அவருடைய நினைவலைகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும்.


(சாண்டில்யன் அவர்களி படைப்புகள் அடுத்த இடுகையில் )

August 22, 2011

நீதித்துறையின் மரண தண்டனை?

இப்போது பரபரப்பாக அனைவராலும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விசயம் தூக்குதண்டனை பற்றியதுதான்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம்.

இது ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டது போல்தான்.இறுதி வாய்ப்பான ஜானாதிபதியிடம் கொடுக்கப்படும் கருணைமனு நிராகரிக்கப் பட்டதன் விளைவு இது.


இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளில் மட்டுமே மரணதண்டனை செயல்முறையில் உள்ளது. 125 நாடுகளுக்கு மேல் மரணதண்டனை சட்டத்தை ஒளித்துவிட்டார்கள்.அது போல இந்தியாவிலும் மரணதண்டனை சட்டத்தை நீக்க வேண்டுமேன பல மனித உரிமை ஆர்வலர்கள் போராடிவருகிறார்கள்.

அவர்களில் முக்கியமானவர் ஆந்திரமாநிலத்தின் வரவர ராவ். அவர் ஜுனியர் விகடனில் தூக்குத்தண்டனைக் குறித்து தனது பார்வைகளை முன் வைத்திருந்தார்.அதில் சில பகுதிகள் இங்கே,,,



ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மூன்று தமிழர்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கிற மரணதண்டனை,இன அடிப்படையில் ஆனதென்றால் ,மத்தியில் அஃப்சல் குருவுக்கு வழங்கப்பட்டிருக்கிற மரணதண்டனை மத அடிப்படையிலானது.

இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் எல்லாம் செல்வந்தர்களுக்கு சாதகமானதாகவே இருக்கின்றன.

பணம் படைத்தவனுக்குத்தான் நீதி.கை ஏந்துபவனோ நிர்க்கதியில்தான்.சமூகத்தின் கீழ்தட்டில் இருப்பவனைக் காக்க வேண்டிம சட்டமே, அவனை அழித்து ஒழிக்கும் முயற்சியில் இறங்குகிறது.

இன்றைக்கு மரணதண்டனைக் கைதிகளைப் பாருங்கள், அவர்கள் நசுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.மாறாக ஒரு பணக்காரரை உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா? அல்லது இதுவரை எந்த பணக்காரனாவது தூக்கு மேடையில் ஏறி இருப்பானா?


நமது சட்டங்கள் பொதுவாக பண்ணையார் தத்துவத்தையே நியாயப்படுத்துகின்றன.ஒரு சிவில் வழக்கில் தனிநபர் ஒருவர் மற்றொரு தனிநபருடன் வாதாடலாம். ஆனால் கிரிமினல் வழக்குகளிலோ தனிநபர் ஒருவருக்கு எதிராக,அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடுவார்.அதாவது ஒவ்வொரு குற்ற வழக்கும் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டு அரசு தனக்கு எதிரானவரை எதிர்க்க வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கிறது.

வழக்கின் ஒவ்வொரு நகர்வையும் காவல் துறையினர்தான் தீர்மானிக்கிறார்கள். வாக்குமூலங்கள் பெறுவதிலேயே எவ்வளவு வன்முறைகளைப் பிரயோகிக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததுதானே?


அரிதிலும் அரிதான குற்றங்களில்தான் மரணதண்டனை வழங்கப்படுகிறது என்கிறார்கள். காவல் துறையினரால் என்கவுன்ட்டர் என்ற பெயரில் பலர் சாகடிக்கப்படுகிறார்களே... அதுவும்கூட அரிதிலும் அரிதானதுதானா? ஆக சட்டத்துக்கு புறம்பாக காவல்துறையினர் கொலை செயதால் அது என்கவுன்ட்டர்கள்.அதையே நியாயப்படி செய்ய வேண்டும் என்றால் அதற்குப் பெயர் மரணதண்டனை.இதுதானா உங்கள் நீதி?


பண்டைய கிரேக்க எகிப்திய நாடுகளில் இருந்த அடிமைகள் அந்த நாட்டின் குடிமகன்களாக அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களின் உரிமையாளர்கள் மட்டுமே குடிமகன்களாக அங்கீகரிக்கப்பட்டார்கள்.உரிமையாளர்களுக்கு மட்டும்தான் சட்டம்,நியாயம்,தீர்ப்பு ,நீதி எல்லாம். அடிமைகளுக்கு எப்போதும் மரணம் ஒன்றுதான்,தண்டனையாகவும்,தீர்ப்பாகவும்,நியாயமாகவும்,நீதியாகவும் அவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது.


இன்றைக்கு நிராகரிக்கப்பட்டு இருக்கிற கருணை மனுக்களைக் குறித்து நாம் எண்ணிப் பார்க்கையில் ஒரு வகையில் நாம் எல்லோரும் இந்நாட்டின் அடிமைகள்தானோ?

சாமான்யன் செய்த குற்றத்துக்கு மரணதண்டனை வழங்குவதன் மூலம் சட்டம் இன்னொரு குற்றம் செய்வது , எப்போதும் சமமாகாது, நீதியும் ஆகாது!" என்று வேதனையோடும் கோபத்தோடும் வெடித்தார் வரவர ராவ்.

அரசாங்கம் கொலை செய்யக்கூடாதென்று சொல்கிறது. எப்படி தெரியுமா? கொலை செய்வதன் மூலமாக, என்று தன் ஏழை படும்பாடு நாவலில் எழுதியிருக்கிறார் விக்டர் ஹியூகோ.



இப்படி பல சமூக ஆர்வலர்கள் மரணதண்டனையை எதிர்த்துக் குரல் கொடுத்தாலும் அரசாங்கம் இன்னு இடித்தப்புளி மாதிரி இருப்பது ஏனோ?...









நன்றி,
ஜுனியர்விகடன்
24.8.2011

August 21, 2011

இசைக்கடவுள் இளையராஜாவின் சாதனைகள் மற்றும் விருதுகள்.

இசைக்கடவுளின் சாதனைகள்.




இளையராஜா, இதுவரை நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.


தொள்ளாயிரம் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை கோர்த்துள்ளார்.



லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார். (அந்த சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).




தமிழக அரசின் கலைமாமணி விருதினையும், 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருதினையும், 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருதினையும், இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைகழகத்தினாலும் 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைகழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.



இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை நான்கு முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987இல் - சிந்து பைரவி (தமிழ்)
1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)
2009இல் - பழஸிராஜா (மலையாளம்)



(இசைக்கடவுளி ஏனைய ஆர்வங்கள்)



இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர்.

இவர் எழுதிய புத்தகங்கள் :
சங்கீதக் கனவுகள்'' (ஐரோப்பா பயண குறிப்புகள்)
''வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது'' (புதுக்கவிதைகள் தொகுப்பு)
''வழித்துணை''
''துளி கடல்''
''ஞான கங்கா''
''பால் நிலாப்பாதை''
''உண்மைக்குத் திரை ஏது?''
''யாருக்கு யார் எழுதுவது?''
''என் நரம்பு வீணை''
''நாத வெளியினிலே'' (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
''பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்''

போன்றவைகள்
''இளையராஜாவின் சிந்தனையில் உருவான முத்துக்கள் ஆகும்.

இசைஞானி வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.இன்னும் பல அண்டுகள் வாழ்ந்து இசை ரசிகர்களுக்கு விருந்து படைக்க இயற்கை அன்னை துணைபுரிய வேண்டுவோம்.

இசைக் கடவுள் இளையராஜா

இசைக்கடவுள் இளையராஜாவை பற்றி நான் என்ன சொல்வது உலகமே வியந்து கொண்டிருக்கும் ஆச்சர்ய மனிதர் அவர்.அவரது சாதனைகளை விவரிக்க ஆரம்பித்தால் ஒரு நாள் இரு நாள் அல்ல பல நாள் நீடிக்கும் அந்த அளவுக்கு இசையால் சாதனை புரிந்திருக்கிறார்.அவருடைய இசையில் எவ்வளவு இனிமை அப்பப்பா சொன்னாலே மெய்சிலிர்க்கும் .இளையராஜாவின் இசையைப்போல் எந்த இசையும் என்னை ஈர்த்ததில்லை .அவருடைய இசைக்கு மயங்காதவர்கள் இருந்தால் சொல்லி அனுப்புங்கள்.அந்த அதிசய பிறவியைப் பார்க்க வேண்டும்.அந்த அளவிற்கு உறுதியாக சொல்ல முடியும் இசைஞானியின் இசைக்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாதென்று.



அவரைப்பற்றி தெரியாதவர்களைப் பார்ப்பது அரிது.என்னுடைய வலைப்பக்கத்தில் இசைக்கடவுளைப் பற்றி பதிய வேண்டும் என்ற ஆசையினாலும் ,ஆர்வத்தினாலும்தான் இந்தப் பதிவு. இந்தப் பதிவு தமிழ் விக்கிப்பீடியாவின் உதவியுடன் தொகுக்கப்படுகிறது.

இசைஞானி தேனி மாவட்டம் பண்ணையபுரம் என்ற கிராமத்தில் ஜூன் 2,1943 ம் ஆண்டு பிறந்தார்.தந்தை ராமசாமி தாயார் சின்னத்தாயம்மாள் ஆகியோர் ஆவர்.
அவரது இயற்பெயர் ராசய்யா ஆகும்.
பாவலர் வரதராஜன்,கங்கை அமரன்,டேனியல் பாஸ்கர் ஆகியோர் அவரது உடன் பிறப்புகள் ஆவர்.

அவரது மனைவியின் பெயர் ஜுவா என்பதாகும்.

கார்த்திக்ராஜா,யுவன் சங்கர் ராஜா,பவதாரிணி ஆகியோர் அவரின் வாரிசுகள். தந்தையைப் போல மூவரும் இசைத்துறையிலே இருக்கின்றனர்.யுவன் சங்கர் ராஜா தமிழக திரைப்பட இசையமைப்பில் முன்னணியில் இருக்கிறார்.இவரை அப்பாவிற்கு தப்பாமல் பிறந்தப் பிள்ளை என்று தாராளமாகக் கூறலாம்.அந்த அளவிற்கு யுவனின் பாடல்கள் கொடிகட்டிபறக்கிறது.


இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இசைஞானி இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்ந்தார்.

அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படம் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான 'பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.



தமிழகநாட்டுப்புற இசை கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசை யில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.


சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.




1969 ஆம் ஆண்டு தன் 29ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார்.


சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார்.


அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதை தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.



நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினை தேடித்தந்தன.

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.



இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையை புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.


இசைஞானாயின் திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள் .


இளையராஜா, பஞ்சமுகி என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.


"How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா.

இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.


Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.


India 24 Hours என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.



1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.



ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.


ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.


மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

இன்னும் இசைக்கடவுளைப்பற்றி பல பிரமிப்பூட்டும் தகவல்கள் உள்ளன. அவைகள் அடுத்த இடுகையில் .