November 4, 2011

என்ன வாழ்கைடா இது.ஜெயலலிதா.

பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. கோர்ட் விசாரணைக்கு காலவரம்பு எதுவும் விதிக்க முடியாது என்றும் தொடர்ந்து ஆஜராகி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்றைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். விசாரணைக்கு தடை விதித்து நாங்கள் தவறான முன்னுதாரணமாக மாற முடியாது , ஆஜராகும் நாள் வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். என்றும் கூறிவிட்டனர். அதுவும் விசாரணை கோர்ட்டுதான் முடிவு செய்யும் என்றனர்.











இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு வழக்கை இழுத்தடிக்கலாம் என நினைத்தார் ஜெயலலிதா ஆனால் நீதிமன்றம் அவருடைய ஆசையை நிராசையாக்கி விட்டது.இந்த வழக்கில் அவருக்கு தண்டனை உறுதியாக கிடைக்கும் என்று அவரே நம்புகிறார் போல அதனால்தான் இந்த மேல் முறையீடு, வேலைப்பளு போன்ற காரணங்கள்.அங்கு ஒரு சிலரை விசாரணைக்கு என்று அழைத்துச் சென்று விட்டு ஜாமீனே தரவில்லை.இங்கு என்னடாவென்றால் வழக்கை வேகமாக முடிக்கலாம் என்று நீதிமன்றமே அழைக்கிறது அப்படியிருந்தும் இன்னும் வாய்தாக்கள் வேண்டும் என்று கேட்டால் கேட்பவரை என்னவென்று சொல்வது?

வாழ்க ஜனநாயகம்.

No comments: