October 20, 2011

சூப்பர் ஸ்டாரின் பேட்டி.

தான் பூரண நலத்துடன் உள்ளதாகவும், ராணா படத்துக்காக தயாராகி வருவதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார். மேலும் ராணா படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்பதையும் நிருபர்களிடம் தெரிவித்தார் ரஜினி.
உடல்நிலை சரியாகி, ஓய்விலிருக்கும் ரஜினி குறித்தும் அவரது ராணா படம் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அதுபற்றி சற்றும் அலட்டிக் கொள்ளாத ரஜினி, இயக்குநர் கே எஸ் ரவிக்குமாருடன் ராணா படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஈடுபட்டு வந்தார்.
ஓய்விலிருந்த நேரத்தில், ரஜினி எங்கேயும் வெளியில் வராமல் இருந்தார். 5 மாத இடைவெளிக்குப் பின் ஷாரூக்கான் நடித்துள்ள ரா ஒன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் ரஜினி. இதற்காக அவர் மும்பைக்கே போய் வந்தார். பின்னர் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த ஒரு நண்பரின் இல்லத் திருமணத்தில் புயலாய் வந்து போனார்.
தான் எப்போதும் போல நல்ல சுறுசுறுப்புடன், பூரண நலத்துடன் இருப்பதை அனைவருக்கும் காட்டிவிட்ட ரஜினி, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக புதன்கிழமை திருப்பதிக்கு குடும்பத்தினருடன் சென்றார்.
அதே துள்ளல் நடை, விறுவிறு பேச்சு, கூடவே பிறந்த ஸ்டைலுடன் தனக்கே உரிய வேகத்தில் கும்பிட்டபடி நடந்துவந்தார் ரஜினி.
கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்திய ரஜினி, கடவுள் கிருபையாலும், ரசிகர்களின் பிரார்த்தனைகளாலும் தான் மிகவும் நலமுடன் இருப்பதாகக் கூறினார். திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்க வந்ததாகக் கூறிய ரஜினியிடம் நிருபர்கள் ஒரேநேரத்தில் பல கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு சிரித்தபடி ரஜினி கூறிய பதில்கள்:
ராணா படம் தள்ளிப்போனதன் காரணம் என்ன? படப்பிடிப்பு எப்போது?
ராணா படம் தொடங்க இன்னும் இரண்டொரு மாதங்கள் பிடிக்கும். காரணம் அது மிகப்பெரிய படம். பெரிய பட்ஜெட். ஆக்ஷன் மற்றும் காஸ்ட்யூம் ட்ராமா. அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். அநேகமாக ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும்.


சார்… உங்களுக்காக உங்கள் ரசிகர்கள் செய்த பிரார்த்தனைகள் குறித்து…
அவர்களுக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். என் நன்றியை அவர்களுக்கு எப்படி சொல்வேன் என்று தெரியவில்லை. ஊடகங்கள் என் உடல் நலம் குறித்து மிகவும் அக்கறை காட்டின. அவர்களுக்கு நன்றி.
ரா ஒன்னில் ஷாரூக்கானுடன் நடித்துள்ளீர்களா?
ஆமாம்… ஷாரூக்கானுக்காக செய்து கொடுத்தேன். அதில் பணியாற்றியது சந்தோஷம்.
-இவ்வாறு கூறினார் ரஜினி.
பின்னர் அனைவருக்கும் தனது அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


நன்றி.
http//envazhi.com

No comments: