August 15, 2011

அரசியல்அரசியல்

2 ஜி விவகாரத்திற்காக ஒரு

கூட்டத்தொடர் முழுவதும்

பாராளுமன்றத்தை முடக்கினார்கள்.146 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணானது.

அது பற்றி யாருக்கும் கவலையில்லை.



இப்போது காமன்வெல்த் விளையாட்டுப் பிரச்சினை .

மத்திய கணக்கு தணிக்கைக் குழு [சி.ஏ.ஜி] டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீதும் குற்றம் சாட்டியுள்ளது. அவர் ராஜினாமா பண்ணியே ஆக வேண்டும் என்கிறார்கள்.

இல்லையேல் பாராளுமன்றத்தை முடக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மீண்டும் மக்கள் பணம் ஒரு நாளைக்கு எட்டுக் கோடி ரூபாய் வீணாகப் போகிறது.


பாராளுமன்றம் என்பது மக்கள் மேடை நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்காக எதிர் கட்சிகள் குரல் எழுப்ப பாராளுமன்றம்தான் உரிய இடம்.

மக்கள் பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டிய இடத்தில்,

பேசவேண்டியவர்கள் பேசாமல் எழுந்து

போய்விட்டால் யாருக்கு நஷ்டம்?

மக்களுக்குதானே.

அதோடு மக்களின்
அடிப்படை உரிமைகள் பறிபோகின்றன.மக்களுக்குச் சேர வேண்டிய நலத் திட்டங்கள் பல உரிய நேரத்திரல் அமல்படுத்தப்படாமல் போகும் அவல நிலை.


தீராத மக்கள் பிரச்சனைக்காக ஒரு வாரம் பாராளுமன்றத்தை நீட்டியுங்கள் என்று ஒரு எ.பி.யாவது இதுவரை வாதாடியிருப்பாரா? மக்கள் பிரச்சனைக்காக பாராளுமன்றத்தை முடக்குவது ஜனநாயகமாகாது.அது ஒரு கேலிக்கூத்து.


பிரதமர் அலுவலகம் மீதும் சி.ஏ.ஜி. அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அப்படியானால் பிரதமர் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை முடக்கப் போகிறார்களா? பாராளுமன்ற முடக்கம் ஆழும்கட்சிக்கும் நல்லதல்ல எதிர்கட்சிக்கும் நல்தல்ல.மக்கள் பிரச்சினையைப் பேச எத்தனையோ வழிகள் இருக்க, பாராளுமன்ற முடக்கத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது வெட்கக்கேடு.




நன்றி.

குமுதம் வார இதழ்.

17.8.2011

No comments: