September 9, 2011

ஆனந்த விகடனின் மங்காத்தா திரை விமர்சனம்...

புதிதாக வெளியிடப்பட்ட திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டுமா வேண்டாமா என்று விகடனின் விமர்சனத்தை படித்து விட்டு செல்லாம் என்று முடிவெடுக்கும் பலர் உண்டு அதில் நானும் ஒருவன்.பொதுவாக விகடனின் விமர்சனம் 90 சதவீதம் நாம் நினைத்தாற் போலவே இருக்கும்.நான் தலைவரின் திரப்படவிமர்சனத்திற்கு விகடன் எத்தனை மதிப்பெண்கள் தருவார்கள் என காத்தருந்த தருணங்களும் உண்டு.சில திரைப்படங்களுக்கு நாம் நினைத்ததை விட அதிகமாகவோ இல்லை குறைவாகவோ மதிப்பெண் தருவார்கள் அந்த நேரம் சிறிது கடுப்பாகவே இருக்கும்.இருந்தாலும் விகடனின் விமர்சனத்தை படிக்க காத்திருப்பது வாடிக்கைதான்.

அஜித் குமார் நடித்து வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படத்திற்கு விகடன் 42 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறது.நாற்பது மதிப்பெண்களுக்கு மேல் சென்றாலே அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேர்ப்பை பெற்றுள்ளது என்று அர்த்தம்.

கீழே விகடனின் மங்காத்தா விமர்சனம்....




கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் பணம் ரூபாய் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே மங்காத்தா!


தல ரசிகர்களுக்காக தல ரசிகர்களால் உருவாக்கப்பட்ட தல சினிமா?


சஸ்பென்சனில் இருக்கும் போலிஸ் அஜித். மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை மும்பையில் வைத்து கைமாற்றுகிறார் மாஃபியா புள்ளி ஜெயப்பிரகாஷ்.அவரிடம் இருந்து 500 கோடியை லபக்கத் திட்டமிடும் நான்கு கெட்டவன்களுடன் ஐந்தாவது கெட்டவனாக கை கோர்க்கிறார் அஜீத் .இந்த மாஃபியா மங்காத்தாவில் 500 கோடியை யார் கைப்பற்றுகிறார்கள் என்ற ரேஸ் சேஸ்தான் மங்காத்தா ஆட்டம்!


நம்புவீர்களா? அஜீத் படத்தில் ஹீரோ என்று யாருமே இல்லை. எல்லோரும் கெட்டவர்கள்.அதிலும் அஜீத் அநியாத்துக்குக் கெட்டவர். சமூகத்துக்கு நல்லது செய்யும் மாஸ் ஹீரோ படங்களின் கோல்டன் ரூல் விதியை உடைத்ததற்கு வெங்கட் பிரபுவுக்கு ஒரு வெல்டன்!



ஆன்ட்டி ஹீரோவாகக்கூட அல்ல ., முழு வில்லனாகவே அஜீத். தாடி, முடியில் நரையுடன் மே வந்தா எனக்கு 40 வயசாகுது என்று வெளிப்படையாகவே சொல்வது. படுக்கையில் இரவைக் கழித்த லட்சுமி ராயிடம் நீ யார்? எதுவும் தப்பா நடந்துகிட்டேனா? என்று அப்பாவியாகக் கேட்பது, காதலியின் அப்பாவை ஓடும் காரில் இருந்து தள்ளிவிடுவது, பண வெறியில் நண்பர்களை டப் டுப் என்று சுட்டுக் கொல்வது, சகட்டுமேனிக்குக் கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிப்பது என துவம்ச உற்சவம் நடத்தியிருக்கிறார்.திரையில் தோன்றும் சமயம் எல்லாம் லாஜிக் மறந்து ஒன் மேன் ஷோ மேஜிக்கில் அசரவைக்கிறார் அஜீத்.


கடமை உணர்வுடைய அதிகாரி என்ற பழகிய காதா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் அர்ஜுன். அஜீத்தின் சரக்கு கச்சேரிக்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயாக த்ரிஷா. அளவாக ,அழகாக இருக்கிறார் அவ்வளவே! படத்தில் அஞ்சலி,ஆண்ட்ரியா,லட்சும் ராய் ஆகியோர் இருக்கிறார்கள்.அஜீத் ஓட்டும் ஸ்விஃப்ட் கார்கூடப் படத்தில் இவர்களைவிட அதிக திருப்பத்தில் பங்கெடுக்கிறது.


சரக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் மட்டுமே புன்னகைக் வைக்கிறது வசனங்கள். சமய சந்தர்ப்பம் இல்லாமல் துருத்தும் பாடல் காட்சிகளும் பிரேம்ஜியின் ஸ்டீரியோ டைப் காமடியும்...ஆவ்வ்!



நான்கு கெட்டவர்களில் வைபவ் மட்டுமே தேறுகிறார். 500 கோடியை அடிப்பதற்கு எப்படி பக்காவான திட்டம் போடவேண்டும்? ஒரு கன்டெய்னர், ஒரு வேன் ஒரு கிரேன் , ஒரு லேப்டாப்...இவ்வளவுதான் கோவாவுல ரூம் போட்டு யோசிச்சிருக்கலாமே பாஸ்!


யுவன்ஷங்கர் ராஜா இசையில் விளையாடு மங்காத்தா பாடல் மட்டும் சுறுசுறு சுதி.அஜீத் நிற்கும் ,நடக்கும்,பறக்கும் காட்சிகளில் துடிப்பு ஏற்றுகிறது பின்னணி இசை.
பரபர துரத்துதல் காட்சிகளில் சுற்றிச் சுழன்று அசத்துகிறது ஷக்தி சரவணனின் கேமரா.


மாஸ்டர் பிரைன் அஜீத் எதற்குச் சாதாரண நான்கு அடியாட்களுடன் கொள்ளைக் கூட்டு வைக்கிறார்? பணம் இருக்கும் இடம் தெரிந்தும் அஜுத் அதைக் கைப்பற்றாம தேமே என்று இருப்பது ஏன்? இதுவும் இன்ன பிறவுமாக படத்தின் பல இடங்களில் ஸ்ட்ரிக்ட்லி நோ லாஜிக்!


அஜீத்தை நம்பி ஆடலாம்!


விகடன் விமர்சனக் குழு




நன்றி

ஆனந்த விகடன்.

No comments: