September 22, 2011

அமெரிக்காவில் ராஜபக்சேவுக்க எதிராக வழக்கு.

அமெரிக்க சுற்று பயணத்தில் இருக்கும் ராஜபக்சே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.



விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கார்னல் ரமேஷின் மனைவி, இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.தனது கணவர் கொல்லப்பட்டதை எதிர்த்து அமெரிக்காவின் நியுயார்க் தென் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சே தற்போது அமெரிக்கா வந்துள்ளார். இந்த நிலையில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கார்ணல் ரமேஸின் மனைவியின் சார்பில் இந்த வழக்கை விஸ்வநாதன் ருத்திர குமாரன் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.வழக்கு குறித்து எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.

No comments: