September 22, 2011

பேஸ்புக்னா சும்மாவா.

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஏறக்குறைய நாள் தோறும் ஏதேனும் ஒரு புது வசதியை
அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.கூகுல் நிறுவனம் தன்னுடைய சமூக வலைத்தளமான கூகுல் பிளஸ்சை பல புதிய வசதிகளோடு
அறிமுகப்படுத்தியதிலிருந்து பேஸ்புக்கிற்கு பிடித்தது தலைவலி. இருந்தாலும் போட்டியை சமாளிக்க பேஸ்புக்கும் ஏதேனும் ஒரு புது வசதியை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தனது newsfeed எனும் செய்தியோடையில் real time updates எனும் நிஜ நேர மேம்படுத்தல் வசதியை இணைத்துள்ளது. இதன் மூலம் இறுதியாக பேஸ்புக்கை பயன்படுத்திய நேரத்தை அறிந்து கொள்ள முடிவதுடன்,பெரிய புகைப்படங்களையும் இணைக்க முடியும்.இதனால் பார்வையாளர்களுக்கு மிகவும் அண்மைய தகவல்கள் தானாகவே வழங்கப்படும் .அதே வேளையில் குறைந்த அளவு தகவல் தொகுப்புகள் அடங்கிய மற்றொரு பகுதி கணினியின் வலது பக்கத்தின் மேலே காணக்கிடைக்கும்.



பேஸ்புக்கின் செய்தியோடை தினந்தோறும் 750 மில்லியன் உறுப்பினர்களால் பார்வையிடப்படுகின்றது. அதிகளவு புதிய தகவல்கள் தற்போது வெளியிடப்படுவதால் இதனை பேஸ்புக்கின் அறிமுக காலம் என வர்ணித்துள்ளார் அதன் நிறுவனர் MarkZuckerberg .


இந்த புதிய மாற்றமானது தற்போது நடை முறையில் உள்ள Top news மற்றும் Most Recent ஆகிய தேர்வுகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் தனது செய்தியோடையிலுள்ள பெரிய அளவிலான புகைப்படங்க ளை ஒன்றிணைத்து வலது பக்க மேல் மூலையில் “ Ticker ”எனும் புதிய வசதியையும் இணைக்கவுள்ளது. இதனால் நமது நண்பர்களின் செயற் பாடுகளை நேரடியாக கவனிக்க முடியும்.இந்த புதிய மாற்றங்கள் கடந்த ஓர் இரு நாட்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: