November 15, 2011

நீர் மூழ்கிக் கப்பல் ஒரு பார்வை.

சம்மரின் எனப்படும் நீர் மூழ்கிக் கப்பல் தண்ணீரில் அமிழ்ந்து செல்கிறது.பின் நீர் மட்டத்திற்கு வருகிறது.இந்த இரு இயக்கங்களும் ஆர்க்மிடிஸ் கண்டுபிடித்த கொள்கையின் விதிமுறையின் படியே நடைபெறுகின்றன.இந்த இயக்கங்கள் செம்மையாக நடைபெறும் படி சம்மரின் அமைக்கப்பட்டுள்ளது.

நீர் மூழ்கிக்கப்பல் தண்ணீரில் அமிழ்வதற்கு தேவையான நடவடிக்கை மிகவும் எளிதானது.நீர் மூழ்கிக்கப்பலின் எடை அதை மிதக்க வைக்கும் தண்ணீரின் சக்தியை விட அதிகரிக்கும் படி செய்கிறார்கள்.நீர் மூழ்கிக்கப்பலை மிதக்க வைக்கும் காற்று அடங்கிய டாங்குகளில் கடல் தண்ணீரை நிரப்புகிறார்கள்.காற்றின் இடத்தை கடல் நீர் எடுத்துக் கொள்கிறது.நூற்றுக் கணக்கான டன் எடையுள்ள தண்ணீர் டாங்குகளில் நிறைகிறது.அதன் விளைவாக நீர் மூழ்கிக் கப்பலின் எடை அதிகரிக்கிறது.அதன் இருப்பில் உள்ளதாகக் கருதப்படும் மிதக்கும் திறன் அகற்றப் படுகிறது.நீர் மூழ்கிக் கப்பல் மிதக்கும் போதும் முழுமையாக அமிழும் போதும் இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடைக்கு இடையே உள்ள வித்தியாசம்.


நீர் மூழ்கிக் கப்பல் ,அதன் டாங்குகளில் உள்ள தண்ணீர் இரண்டின் எடையும் சேர்த்து இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடையை விட அதிகமாக இருந்தால் கப்பல் மூழ்கிவிடும்.அதிக பட்சமாக நீ.கப்பல் 600 அடி ஆழம் வரை செல்லலாம்.அதை விட ஆழத்திற்குச் சென்றால் நீ.கப்பலின் உடற்பகுதியை தண்ணீர் வலுவாக அழுத்தும் அபாயம் ஏற்படும்.
நீ.கப்பலை ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் நிறுத்தி வைப்பதற்கு மின்சார மோட்டார்கள் மூலம் கப்பலிலிருந்து தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.அதாவது நீ.கப்பலின் எடை,இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடைக்குச் சமமாகும் வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.அப்போது நீ.கப்பல் மேல் நோக்கியும் நகராமல் கீழ் நோக்கியும் நகராமல் சம நிலையில் மிதக்கும்.நீ.கப்பல் மேல் மட்டத்திற்கு வருவதற்கு டாங்குகளில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள்.அப்போது நீ.கப்பலின் எடை,இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரை விட இலேசானதாகிவிடுகிறது .இதனால் நீ.கப்பலும் மேல் மட்டம் வந்து விடுகிறது.


இதுதான் நீர்மூழ்கிக்கப்பல் இயங்கும் விதம்.

No comments: