November 4, 2014

கடன் ஓர் கடன்

நம்ம அண்ணன் ஒருத்தர்ட்ட...

அண்ணே எனக்கு அவசரமா பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுது யார்கிட்டயாவது வட்டிக்கோ அல்லது டெய்லி சீட்டுக்கோ வாங்கித்தர முடியுமா என கேட்டேன் ..கடனாய் கேட்டாலும் தரமாட்டார்கள் என்பதால்தான் வட்டி என்ற பிட்டை போட்டேன் )
நொடி கூட தாமதிக்காம உடனே சொன்னார் .என்னது வட்டிக்கு காசா டேய் நாங்க எல்லாம் வாங்கிட்டு படுகிற அவஸ்த்தை எங்களுக்குதான் தெரியும் .எக்காலத்திலையும் வட்டிக்கு வாங்கும் எண்ணத்தை மட்டும் விட்டுவிடு என சீரியசாவே சொல்லி முடிச்சார் ..
.
நான் குழம்பிட்டேன் நம்ம நல்லதுக்குதான் வாட்டிக்கு வாங்க வேணாம்னு சொல்றாங்களா ..அல்லது நம்மேல் கொண்ட அதீத நம்பிக்கையின் பிரதிபலிப்பே இந்த நிராகரிப்பாய் இருக்குமா என குழம்பித்தான் போனேன் ..
இருந்தாலும் ...
அண்ணே எனக்கு ரொம்ப தேவை இருக்குண்ணே அதனால ஐந்தாயிரம் ரூபாய் கடனுக்காச்சும் கொடுண்ணே என்று கேட்டேன் ....
.
கொஞ்சமா திகைத்த முகத்தோடு சொன்னார் ....
வாய்ப்பே இல்லயப்பா ஏன்னா போனவாரம்  வட்டிக்கு வாங்குன  பத்தாயிரம் ரூபாய் சாயங்காலம் திருப்பி கொடுக்கணும் இப்போ ஐந்தாயிரம் ரூபாய்தான் இருக்கு மீதி ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஓடிட்டு இருக்கேன் ...இதுல நாளைக்கு ஒருத்தருக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கணும் ...அடுத்வாரம் இன்னும் ஒருத்தருக்கு ...
.
அண்ணே போதும்ணே இதோட நிறுத்திரு .உன்கிட்ட கடனுக்கும் கேட்கல வட்டிக்கும் கேட்கல .....போட்டா ..
.
ஹலோ நான்தான்டா எனக்கு அவசரமா ஒரு ஐந்தாயிரம் ரூபாய் தேவைப்படுது ....
.
டேய் மச்சான் நானே உன்கிட்ட கேக்கலாம்னு இருந்தேன்டா ... ...
.
அவன் பேசுனது பிறகு எனக்கு கேக்கவே இல்லை ...கட் பண்ணிட்டேன் அழைப்பை ......
.

No comments: