November 2, 2014

ஆங்கிலம் கற்பதற்கு ஓர் வியாபாரக்கூடம்

எட்டு வயது குழந்தையுடன் ஒரு உரையாடல் ....
உன் பெயரென்னம்மா ....
.
கிப்சிகா ...
.
எத்தனாவது வகுப்பு படிக்குற ..
.
மூணாவது...
.
எந்த பள்ளிக்கூடம் ..
.
ஏபிஜெஎம்..காக்காவிளை ..
.
உன்னுடைய வகுப்பில் மொத்தம் எத்தனை பேர் ..
.
பதினான்கு ..
.
சரி திருக்குறள் தெரியுமா ..
.
தெரியும் ..
.
எத்தனை ..
.
ஒன்று ..
.
ஒண்ணுதான் தெரியுமா ..
.
ஆமா ..
.
மொத்தம் எத்தனை திருக்குறள் உண்டுனு தெரியுமா ...
.
தெரியாது ...எங்களுக்கு சொல்லிதரல ..
.
தமிழ் பாடம் நடத்துவாங்கதானே ..
.
ஆமா ஒரு பிரீயடு மட்டும் ...
.
சரி உங்க பள்ளிக்கூடத்தில் இங்கிலீஷ்ல பேசுவீங்களா தமிழ்ல பேசுவீங்களா ...
.
தமிழ் பிரீயடை தவிர மத்த நேரம்லாம் இங்கிலிஷ்லதான் பேசனும் மீறிப் தமிழ்ல பேசுனா பைன் போடுவாங்க ..சில நேரம் அடிக்கவும் செய்வாங்க ...
.
ஐயையோ ரொம்ப அநியாயமா இருக்கே ..
.
ம்.
.
வீட்ல அப்பா அம்மாகிட்ட பள்ளிக்கூடத்துல இந்த மாதிரி தண்டனை தராங்கன்னு சொன்னியா ...
.
சொன்னேன் அவங்க ஒண்ணும் சொல்ல ..
.
உனக்கு தமிழ்ல பேசி தண்டனை கிடைச்சுருக்கா..
.
ஆமா ஒருதடவை ....
.
உனக்கு இங்கிலீஷ்ல பேசுறது பிடிக்குமா தமிழ்ல பேசுறது பிடிக்குமா ...
.
தமிழ்ல பேசுறதுதான் பிடிக்கும் ...
.
ஓ செல்லம் சூப்பர் ..
.
சரி தமிழ்ல பேசுனா தண்டனை பள்ளிக்கூடத்தை அடிச்சு உடைச்சுரலாமா ...
.
குறு குறுவென என் முகத்தைப் பார்த்துவிட்டு ..உங்களால் அது முடியாது என்றாள் ....
நானும் அதோடு பேச்சை நிறுத்திவிட்டேன் ....புள்ள கடைசி பதிலை சரியாதான் சொல்லிருக்கா ......
இந்த நிகழ்ச்சியை நாளைக்கு அல்லது அடுத்த நாளோ நாலுபேரிடம் பேசிட்டு இருக்கும்போது பொங்குவேன் அடுத்ததான் நான் என்  வேலையைப் பார்க்கப் போய்விடுவேன் ...மிகச் சாதாரண சாமான்யனின் கோபம் எதிர்த்து பிரச்சினை செய்யாத நாலுபேரோடு முடிகிறது ......

No comments: