September 15, 2011

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஆசை அஜீத் பேட்டி

முன்னெப்போதும் இல்லாத நிதானமும் பக்குவமும் அஜீத்தின் பேச்சில் தெரிய ஆரம்பித்துள்ளது.ஏகன், அசல் என இரு சறுக்கல்களுக்குப் பிறகு வந்திருக்கும் அவரது மங்காத்தா வெற்றிப் படமாகியுள்ளது. இந்த வெற்றியை அவர் பெற்றுள்ள சூழ்நிலை மிக முக்கியமானது.தனது ரசிகர் மன்றங்களை எல்லாம் கலைத்து விட்டதாக அவர் அறிவித்த மூன்று மாதங்களில் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.இந்த முறை அஜீத் ரசிகர்களுடன் இணைந்து ரஜினி ரசிகர்களும் இந்தப் படத்துக்கு மகத்தான ஆதரவை அளித்தனர். விரும்பிப் பார்த்தனர். அதற்காக இது ரஜினிரசிகர்களால் வந்த வெற்றி என்று சொல்ல வரவில்லை! அஜீத்தின் யதார்த்தமான அணுகுமுறை, அவர் படங்களை ரஜினி, கமல் என சாதனையாளர்களின் ரசிகர்களையும் பார்க்க வைத்துள்ளது என்பதற்காகச் சொல்கிறோம். இன்னொன்று ரஜினி போன்ற சாதனையாளர்களை எந்த இடத்தில் வைத்துப் போற்ற வேண்டும் என்பதை அஜீத்தைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.இந்த வெற்றியை எப்படிப்பார்க்கிறார் அஜீத்?



குமுதம் இதழுக்கு அவர் அளித்த லேட்டஸ்ட் பேட்டியிலிருந்து சிலபகுதிகள்


மக்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். இது தனிப்பட்ட எனதுவெற்றியல்ல. வெங்கட்பிரபு,யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி,வைபவ் என நட்சத்திரங்கள்,டெக்னீஷியன்கள் அனைவரின் கூட்டு முயற்சிக்கும் கிடைத்த வெற்றி.இவர்கள் அனைவரும் என்னைத் தோளில் தூக்கிச் சுமந்து வெற்றி பெற வைத்துள்ளனர்.குறிப்பாக ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு நன்றி சொல்லவேண்டும். அடுத்தது தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மாஅவர்களுக்கு எனது நன்றிகள்,”என்கிறார்.ரசிகர் மன்றங்களைக் கலைத்தபிறகு வந்துள்ள இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில்,“ரசிகர்கள் மனதில் எனக்கென்று ஒரு இடம் உள்ளது என்பதை நிரூபித்துள்ள வெற்றி இது.இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு வார்த்தை, என்னை என் போக்கில் விட்டு விடுங்கள்.தரமான படங்களைத் தருகிறேன்,”என்றார்.சரி, அஜீத்தின் அடுத்த ஆசைஎன்னவாக இருக்கும்?
இதற்கான பதில், அவர் எவ்வளவு பெரிய ரஜினி ரசிகர் என்பதைக் காட்டுகிறது. எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன்.அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை.

நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என்லட்சியம். மங்காத்தாவின்மாபெரும் வெற்றியை ரஜினிசாருக்கு சமர்ப்பிக்கிறேன்,”என்றார்,அஜீத்.





நன்றி என்வழி வினோ அவர்கள்.


http://envazhi.com

No comments: