September 12, 2011

பயமாக இருக்கிறது,முதல்வர் ஜெயலலிதா......

இந்த அரசின் 100 நாள் சாதனைகளுக்காக அனைத்து க் கட்சியினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இதுமகிழ்ச்சியை விட அச்சத்தைத்தான் தருகிறது. இந்த 100 நாட்கள் பணிகளை மிஞ்சுகின்ற அளவுக்கு எங்கள் அரசின் பணிகள் இருக்க வேண்டுமே என்ற உணர்வுதான் எழுகிறது, என முதல்வர் ஜெயலலிதா கூறினார். அனைத்துத் தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு கடந்த 3 மாதங்களுக்குமுன்பு அமைய பெற்ற அதிமுக தலைமையிலான அரசு தன் பணியில் 100 நாட்களை இன்றுடன் நிறைவு செய்கிறது. இதை யொட்டி சட்டமன்ற கட்சி தலைவர்களும்,உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தார்கள். இங்கே பேசியவர்கள் பாராட்டு தெரிவித்த போதுஅது வெறும் சம்பிரதாய பாராட்டு போல எனக்கு தோன்றவில்லை.ஒவ்வொருவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.



இந்த பாராட்டுக்களை கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதை விட ஒருவித லேசான அச்ச உணர்வுதான் தோன்றியது.100 நாட்கள் முடிந்த பின்னணியில் பேசிய ஒவ்வொருவரும் குறை ஏதும் சொல்லாமல் முழு மனதோடு பாராட்டியிருக்கிறார்கள்.


இது தொடர்ந்து நீடித்திருக்க வேண்டுமே என்கிற அச்ச உணர்வும் இன்னும் வருகிற, பலப்பல100 நாட்களுக்கும் ஓராண்டு,இரண்டாண்டு என ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறும் வகையிலும் இந்த 100 நாட்கள் பணிகளை மிஞ்சுகின்ற அளவுக்கு எங்கள் அரசின் பணிகள் இருக்க வேண்டுமே என்ற உணர்வுதான் எழுகிறது.


தொடர்ந்துஉறுப்பினர்கள் பாராட்டக் கூடிய அளவுக்கு நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டுமே,அது ஒரு மிகப்பெரிய சவாலாக அமையுமே என்கிற உணர்வுதான் எனக்குள் எழுகிறது.ஆனாலும் உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களுடனும்,ஆதரவுடனும் இதை சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.நாங்கள் எதை செய்தாலும் உள்ளத் சுத்தியோடு செய்வோம்.மக்களை ஏமாற்றுகிற எண்ணம் எங்களிடம் கிஞ்சிற்றும் இல்லை.



கடந்த திமுக ஆட்சி காலத்தில் கேஸ் அடுப்பு வழங்கினார்கள்.ஒரு சிலருக்கு வழங்கி விட்டு அதற்கான சிலிண்டர் தரவில்லை. விவசாயிகளுக்கு மின் இணைப்பு தந்தார்கள்.ஆனால் மின்சாரம் தரவில்லை.அப்படி நாங்கள்மக்களை ஏமாற்றுகிற எதையும் செய்யமாட்டோம்.அத்தகைய எண்ணம் எங்களிடம் இல்லை.உள்ள சுத்தியோடும்,கர்ம சிரத்தையோடும் செய்வது தான் எங்கள் ஆட்சியின் நிலை. இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இப்பொழுது ஒரு உண்மையை நான் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

ஆள் அதிகாரபலத்தை விட அவர்கள் பணத்தைத்தான் நம்பினார்கள்.கடந்த 3மாதங்களுக்குமுன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர்கள் புழக்கத்தில் விட்ட பணம் ரூ.5,000 கோடி ஆகும்.தேர்தல் பிரச்சாரம் நடந்த போது தலைமை தேர்தல் ஆணையம் மிக கடுமையான நடவடிக்கை எடுத்ததன் காரணமாக திமுகவினரிடமிருந்து ரூ.50 கோடி பணம் கைப்பற்றப்பட்டது,அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான ஒருவர் நடைப் பயிற்சி சென்று கொண்டிருந்த போது எனக்கு வேண்டிய ஒருவரும் அங்கே இருந்திருக்கிறார். அப்போது தேர்தல் கமிஷன்50 கோடி ரூபாயை கைப் பற்றியிருக்கிறதே என்று அந்த நபரிடம் ஒருவர் கேட்க, அதற்கு கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமான அவர் 50 கோடிரூபாய் என்பது ஒரு பானை தண்ணீரை கொண்டு செல்லும் போது சிதறி விழுமே அந்த துளிதான் எங்களுக்கு அது ஒன்றும் பொருட்டு அல்ல.


எங்கள் அண்ணன் (அஞ்சா நெஞ்சனாக இருந்து இன்று காணாமல் போனாரே அந்த அண்ணன்) ரூ. 5000 கோடியை தேர்தலுக்காக அள்ளி இறைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். இந்த 5000 கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டு ஆசைகாட்டியும் மக்கள் மசியவில்லை. அவர்களுடைய பணபலத்திற்கு இடம் கொடுக்காமல் உறுதியாக இருந்து நல்ல முடிவை எடுத்துள்ளனர்.அதனால்தான் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் ஒரு ஆட்சியாக திட்டங்களைத் தந்திருப்பதாக விளம்பரம் செய்துள்ளோம்.அந்த மாற்றத்தை தந்த மக்களுக்கு அதிமுக சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர்களும்,எதிர்க் கட்சித் துணைத் தலைவர்களும் இந்த அரசுக்கு செய்ய வேண்டும் என்கிற மனம் உள்ளது. ஆனால் நிதி பற்றாக்குறைதான் அதற்கு தடையாக உள்ளது என்று கூறினார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் தாயின் நிலையில் உள்ள என் நிலைமையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்.ஒரு தாய்க்கு 10 பிள்ளைகள் உள்ளனர்.அவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கிறார்கள்.ஆனால் அந்ததாயாரிடம் அந்த வீட்டில் இருப்பது ஒரே தோசைதான். அது ஒரு குழந்தையின் பசியைப் போக்கக் கூட போதாது.அதனால் ஒரு குழந்தைக்கு ஒரு தோசையை கொடுத்து விட்டு ஒன்பது குழந்தைகளையும் பட்டினி போடலாமா என்று கருதிய தாய் அதனை துண்டு துண்டாக்கி 10 குழந்தைகளுக்கும் பகிர்ந்து தருவாள்.அவள்தான் நல்ல தாய்.
இருப்பதை பகிர்ந்து தரவேண்டும் என்கிற தாயின் நிலைமையில் தான் நான் இருக்கிறேன்.தமிழக மக்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்கிற ஆசை எனக்கும், இந்த அரசுக்கும் உள்ளது. பழைய திமுக ஆட்சியினர் மக்களை கடனாளியாக்கி விட்டு சென்றுள்ளனர்.மத்திய அரசு எந்த உதவியும் செய்யாமல் பாரா முகமாக உள்ளது.அத்தனையையும் மீறி நாங்கள் சாதிப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.


இந்த நேரத்தில் தமிழக மக்களை பார்த்து நான் சொல்ல விரும்புவது, “வருந்தாதே,ஏழை மனமே வருந்தாதே வருங்காலம் நல்ல காலம் அந்த நம்பிக்கையுடன்இருங்கள்’.விலையில்லாத அரிசி,ஏழைகளுக்குமிக்சி,கிரைண்டர்,பேன்,ஆடுமாடுகள் வழங்குவதை பாராட்டி இங்கேபேசினார்கள்.இலவசத்துக்காக கையேந்த வேண்டியதில்லை என்னை பொறுத்தவரை எனக்குள்ள ஆசை என்பது எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்,இங்கு இல்லாமை இல்லாத நிலை வரவேண்டும் என்பதுதான்.இனிமேல் தமிழக மக்களுக்கு இலவசம் தரவேண்டிய அவசியமில்லை. இனி எப்போதும் யாரிடமும் கை நீட்டி எதையும் பெறுகின்ற நிலை இருக்கக் கூடாது என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை என சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

2 comments:

A9RADIO said...

புரட்சித்தலைவியின் மனதில் ஏற்பட்டிருக்கும்
வரலாற்று மாற்றம் மிகவும் வரவேற்கத்தக்கது. அரசியல் என்கின்ற நிலையில் இருந்து சற்று உயர்ந்து, மக்களுக்கு உண்மையான தாய்மையுள்ளத்தோடு சேவை செய்ய அணுகுவது கண்டு மனம் பூரிக்கின்றது...!
"உணர்வுகளுக்குள் கட்டுப்பட்டு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் தமிழர்கள்"
இனிமேல்தான் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறார்கள்!

Try 🆕 said...

அது என்னவோ உண்மைதான்...அது என்னவோ உண்மைதான்...