November 28, 2010

ஆர்வக்கோளாறு

வணக்கம்
ஆர்வக்கோளாறு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகவே நான் கருதுகிறேன்.சிலருக்கு ஆர்வக்கோளாறினால் நன்மை விளைவதும் உண்டு சிலருக்கு பாதகமாகவும் மாறிவிடுவதும் உண்டு.எதற்கு இதை இப்போது சொல்கிறேன் என்றால் என் ஆர்வக்கோளாறால் நன்மை விழைந்ததால்தான்.விழைந்தை அறுவடை வேறு செய்திருக்கிறேன்.அந்த நன்மை இணையம்தான்.இணையத்தின் மூலம் பல பயன்கள் உண்டென்று தெரிந்தாலும் அதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டது இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்தப் பின்னர்தான்.பல தகவல்கள்,விமர்சனங்கள்,கட்டுரைகள்,நண்பர்கள்,தகவல்பரிமாற்றங்கள்.இப்படி பட்டிமல் நீண்டு கொண்டே செல்லும்.இவ்வாறான பல அனுபவங்கள் கிடைத்தது என் ஆர்வக்கோளாறால்தான்.அதனால் அனைவரும் ஆர்வக்கோளாறோடு இருப்பது நல்லது என நான் பரிந்துரைக்கிறேன்.இதை யாராவது தவறிப்போய் படிக்க நேர்ந்திட்டால் ???

No comments: