December 10, 2010

ஓர் ஆலோசனை

தொழிலதிபர்களாக ஆகவிருப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை. மூன்றாண்டு விதியைவிட மேலான உண்மைத் தத்துவம் வேறு இருக்க முடியாது. ஒரு தொழிலில் மூன்று ஆண்டுகள் உங்களால் தாக்குப் பிடிக்க முடிந்தால், நாலாவது ஆண்டு இன்னும் மேலேறி ஓடிக்கொண்டு இருப்பீர்கள்.ஒரு வேலையில் இருந்து கொண்டுருப்பதைவிட ஒரு தொழிலதிபராக நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவீர்கள்.என்னுடைய மூன்று சொந்த முயற்சிகளிலேயே இது நிகழ்ந்ததைப் பார்த்திருக்கிறேன்.அவற்றின் ஆரம்ப நிலைகளில் என்னை மிகவும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்.தொடர்ந்து ஏராளமான நண்பர்களோடு அந்தத் தொழில்கள் மிகச் சிறப்பாக ஆனதையும் பார்த்திருக்கிறேன். நான்கு மற்றும் அதற்கு மேலான ஆண்டுகள் தொழிலதிபர்களாக இருப்பவர்களுக்கு உங்களிடமிருந்து எனக்கொரு ஆலோசனை தேவை.ஒரு நிறுவனம் உங்களோடு இருந்ததைவிட நீங்கள் இல்லாத போது இன்னும் சிறப்பாகச் செயல்படும்படியாக அதைவிட்டு விட்டு எப்படு அதிலிருந்து வெளியேறப் போகிறீர்கள்? இந்தப் பெரிய உலகத்திற்கு என்னுடைய ஆலோசனை முதல் ஆளாக கொடுப்பதில் உள்ள சந்தோசத்தை அனுபவியுங்கள்.அதற்கு முயற்சியாவது செய்யுங்கள்.தேவைப்படுபவர்களுக்கு உங்கள் நேரத்தைக் கொடுங்கள், பணத்தைக் கொடுங்கள்,திறமையைக் கொடுங்கள்.அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவுங்கள்.நம்புங்கள் அதில் உங்களுக்கு கிடைக்கும் சந்தோசம் வேறு எதையும் விட அதிகமாகவே இருக்கும். சொன்னவர் வெங்கட் கிருஷ்ணன் கிவ் இந்தியா.

No comments: