October 8, 2014

ஆடை என்ற போலி திரை

நானும் கொஞ்சநாளா பார்த்துட்டே இருக்கேன்  இந்த அரைகுறை ஆடைப் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை ..தொலைக்காட்சியை திறந்தா அங்கும் இதுதான் ஓடுது பேஸ்ப்புக்கை திறந்தா இங்கும் அதுதான் ஓடுது ...கொய்யால ஐம்பது வருசத்துக்கு முன்னாடி வெறும் புடவையை மார்பை சுற்றிக்கொண்டு அலைந்தபோது எந்த நாதாரியும் நாகரீகத்தைப் பற்ற பேசவில்லை ..அப்போது ஜாதி துணைநின்றது ..இப்போது கலாச்சாரத்தை துணைகளைக்கிறார்கள் ..ஆடைதான் ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை தீர்மானிக்கிறது என்றால் அப்படிப்பட்ட ஆணியே வேண்டாம் என்பதே எண்ணம் ...
பாதி மார்பு வெளியே தெரிய வலம் வரும் கறுப்பு வெள்ளை தேசத்தில் எந்த ஆடவனும் ஆடை குறைவாக இருக்கிறதென்று குறுகுறுவென பார்த்தாக எந்தச் செய்தியும் சொல்லவில்லை ..மாறாக நம் சமூகத்தில் மில்லி மீட்டர்கள் மிடி உயரும் நேரம் பார்த்தது சென்டிமீட்டர்கள் உள்ளம் கேட்குமே மோர் ..என்ற வரிகளுக்கேற்பதான் நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம் ..நம் வடிவம்தான் மாறவேண்டுமே தவிர ஆடைகளுக்கான வடிவமல்ல ..கோணலோ நேரோ அதை பார்க்கும் பார்வையே தீர்மானிக்கிறது .
.
இப்படிக்கு...
நேராகப் பார்க்க முயற்சிப்பவன் ....

No comments: