October 5, 2014

நண்பன் ..

நேற்று இரண்டு நண்பர்களுக்கு பிரச்சினையாம் .கொஞ்நேரம் கழிச்சு ஒரு நண்பன் வந்து அவர் தரப்பு நியாங்களையும் எதனால் கோபமடைந்தேன் என காரணங்களையும் விவரித்தார் .. . நான் அமைதியாக கேட்டுக்கொண்டே இவ்வளவு மோசமாகவா நடந்துகொண்டான் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே உன்னைமாதிரி நல்ல குணமுள்ளவனாச்சே என சொல்லி பேச்சை முடித்தேன் ... . இன்னும் கொஞ்ச நேரம் கடந்து சண்டயிட்ட மற்றொரு நண்பனும் வந்தான் ....அவரும் முதலாமவர் போலவே பல சிலவற்றை அடுக்கினார் ..நானும் முதலாமவருக்கு சொன்ன அதே வசனத்தை சொல்லி நாளை சந்திப்போமென நகர்ந்தேன் ... . இன்னைக்கு பார்க்குறேன் இரண்டுபேரும் கைகோர்த்துட்டே டாஸ்மாக் நோக்கி வேகமா நடந்துகிட்டு இருந்தாங்க ... அதைப்பார்த்து கொஞ்சம் அதிர்ச்சிதான் நேத்து அந்தமாதிரி திட்டிகிட்டவங்க இன்று இந்த மாதிரி போனா அதிர்ச்சி வராம என்ன வரும் .....நான் நேரா அவர்களை பார்ல போய் பிடிச்சேன் (சத்தியமா நான் குடிக்குறதுக்காக அங்கு போகல அவங்ககிட்ட பேசறதுக்குதான் போனேன் .பேசிப்பேசி பேசிப்பேசி..... ) ஏண்டா நேத்து அவ்வளவு அசிங்கமா திட்டிக்கிட்டீங்க இன்னைக்கு புருஷன் பொண்டாட்டி மாதிரி குலாவிட்டே போறீங்க நீங்க சொல்றதல்லாம் கேக்குறவன் கேணையானாடா ..என கோபமாக கேட்டன் ..... . எதிர்ல இருந்தவன் சிரிச்சுகிட்டே மற்றவரிடம் சொல்கிறான் ...மச்சான் நம்ம ரெண்டு பேரோட  சிந்தனையும் செயலும் ஒரே பாதையில் போகுதுல்ல ...பார் நேத்துகூட ஒரே கேணைய ரெண்டுபேரும் தெரிவு செய்துருக்கறோம்ன்னு சொல்லிக்கிட்டு ஹாஹாஹா சிரிக்குறானுங்க .... இதைப்பார்த்து என்னால் என் கோபத்தை அடக்கவே முடியவில்லை ...படார்னு எதிரில் இருந்த மதுபுட்டிய எடுத்தேன் .அப்படியே உடைச்சேன் சிசிசிசி திறந்தேன் ..கப்புல ஊத்தி குடிச்சேன். .அவனுங்களுக்கு கொஞ்சம்தான் கொடுத்தேன் ...இதுதான் சரியான தண்டனை அவர்களுக்கு ....... . . கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் கற்பனையும் ..தொகுப்பிலிருந்து ....

No comments: