உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்(12-12-2011)உண்மையிலேயே ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு திருநாள்தான்.ரசிகர்கள் மன்றங்கள் சார்பாக தங்களின் பணத்தில் அன்னதானம் வழங்குவதும்,ஏழைகள் பயன்பெறும் விதத்தில் சிறு உதவிகளான தையல் இயந்திரங்கள் வழங்குவது,வேட்டி,சேலை,கல்வித்தொகை வழங்குவது என ரஜினி ரசிகர்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கி வருகிறார்கள்.அது மட்டுமல்லாமல் கலைநிகழ்ச்சிகள்,விழையாட்டு போட்டிகள் என அன்றைய தினமே திமிலோகப்படும்.எனக்கு ரஜினி என்ற நடிகர் மீது ஈடுபாடு வர காரணமும் ஒரு ரசிகர் மன்றம்தான்.கன்னியாகுமரி மாவட்டத்தில் காட்டாத்துறை என்னும் ஊரின் அருகே இருக்கும் தும்பயன் தோட்டம் என்ற சிறு கிராமத்தில்தான் அந்த ரசிகர் மன்றம் இருந்தது.தும்பயன் தோட்டம் என்னுடைய பாட்டியின் ஊர் என்பதால் என்னுடைய குழந்தை பருவத்தை பெரும்பாலும் அங்குதான் களித்தேன்.அதனால் அங்கிருந்த ரஜினி ரசிகர் மன்றம் மூலமும் அவர்கள் நடத்தும் நிகழ்சிகள் மூலமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயர் என் மனதில் கவர்ச்சிகரமாக நுளைந்தது.என்னை பொறுத்த வரை ரஜினியின் ரசிகர்கள் மற்ற ஏனய நடிகர்களின் ரசிகர்களை விட வித்தியாசமானவர்கள்.இதற்கு விளக்கம் கூற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.ஏனென்றால் ரஜினியைப் போல அவர் ரசிகர்களும் தனி வழியைக் கடைபிடிப்பவர்கள்.அப்படிப்பட்ட அன்பு ரசிகர்களின் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
thankyou...google.images.com









No comments:
Post a Comment