July 28, 2011

ரஜினிகாந்திற்கு ஓர் கடிதம்ரஜினிகாந்திற்கு ஓர் கடிதம்

கடிதத்துக்கு ரியாக்ஸன். தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிக்கு உருக்கமான கடிதத்தை ஃபேக்ஸ் அனுப்பியிருக்கிறார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். இது உங்களுக்கு மறுபிறப்பு.போன பிறவியில் ஒரு நடிகராக மட்டுமே இருந்தீர்கள்.மகத்தான மாற்றத்தை உண்டாக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருந்தாலும் அதனை நீங்கள் பயன்படுத்தவே இல்லை. இந்த பிறவியிலாவது மக்கள் நலன் சார்ந்த விசயங்களுக்காக நீங்கள் போராடவேண்டும்.உங்களுக்கு கிடைத்த உயரிய சிகிட்சைகள் சாதாரண மக்களுக்கு கிடைப்பது சாத்தியமில்லை.அடிப்படை மருத்துவத்துக்கே வழியற்ற நிலமை தமிழகத்தில் நிலவுகிறது.அதனை தீர்க்கும் விதமான முன்னெடுப்பைச் செய்வதுதான் உங்களைக் கொண்டாடும் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் பதிலீடாக இருக்கும்! என அழுத்தமாக எழுதி இருக்கிறார் சௌந்தர்ராஜன். உயிர் மீண்ட நெகிழ்வில் இருக்கும் ரஜினியை அந்தக் கடிதம் ரொம்பவே உசுப்பியிருக்கிறதாம்.சமுகம் சார்ந்த கைக்கோப்புக்கான அழைப்பு எப்போதும் ரஜினியிடமிருந்து கிளம்பலாம். நன்றி. ஆனந்தவிகடன். 29.6.11

No comments: