December 29, 2011

இந்திய அணியைப் பற்றி என்ன சொல்ல ஆனால் சொல்கிறோம்.

எப்பவாச்சும் இப்படின்னா பராவாயில்ல எப்பவுமே இப்படின்னா எப்படி!அந்த மாதிரி கதையாகிப் போச்சு இந்திய அணியின் நிலமை.எவ்வளவுதான் வக்காலத்து வாங்குறது அடுத்த தொடர் அதற்கடுத்த தொடரென்று ஒவ்வொரு முறையும் ஒரே முடிவுதான் பதிலாக இருக்கிறது .


நாங்க வெளிநாட்டு சுற்று பயணங்களுக்கு சரிபட்டு வரமாட்டோம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது இந்திய அணி.இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போதுதான் வீரர்களுக்கு காயம்,காலநிலை ஏற்புடையதாக இல்லை என்றார்கள்.இப்போது என்ன காரணம் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.அதற்கும் தகுந்த காரணம் யோசித்து வைத்திருப்பார்கள்.இந்திய ரசிகர்கள் மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த தொடர் இதுவென்றால் மிகையாகாது.ஏனென்றால் உலக கிரிக்கெட் அணிகளிலேயே வலிமையான அணி எதுவென்று நேற்று இங்கிலாந்து ரசிகரிடம் கேட்டால் கூட இந்திய அணிதான் என்று யோசிக்காமல் பதில் வரும்.அந்த அளவு வலிமையான அணியாக காட்சி தந்த இந்திய அணி மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான் ரசிகன்.


ஆனால் வலிமை என்ற அந்த பிம்பம் இவ்வளவு விரைவாகவும்,எழிதாகவும் உடைந்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கெதிரான முதல் போட்டி துவங்கு முன் இருந்த இந்திய ரசிகனின் மனநிலையும் இப்போது இருக்கும் மனநிலையையும் ஒப்பிட்டால் வேதனைதான் மிஞ்சும்.எப்படியும் டெஸ்ட் தொடரை மொத்தமாக வெல்வார்கள் என்று இறுமாந்திருந்தால் இந்திய அணியோ முதல் போட்டியில் படுகேவலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோற்றிருக்கிறது.ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றிருந்தால் கூட இந்த அளவிற்கு வெறுப்பு ஏற்பட்டிருக்காது.ஆனால் நாம் தோற்றதோ எண்பது சதவீதம் புது முக வீரர்களை கொண்ட அணியிடம் அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் கடந்த பெரும்பாலான போட்டிகளில் திறமையற்ற அணியாகவே செயல்பட்டிருக்கிறது.அப்படியிருந்த அணி எழுச்சி காண இந்திய அணி உதவியதா அல்லது இந்திய அணிதான் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா?இதற்கான பதிலும் இந்திய அணியிடமே இருக்கிறது.இந்திய அணி மேலும் மேலும் இது போன்ற தோல்விகளை சந்தித்துக்கோண்டிருந்தால் ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதான மோகம் மறைந்து வெறுப்பு ஏற்படத் துவங்கி விடும்.ஏறக்குறைய நான் வெறுப்படையும் நிலைக்கு வந்து விட்டேன்.அடுத்த போட்டி என்றைக்கு என ஊடகங்கள் டமாரம் அடிக்காதவரை கிரிக்கெட் ரசிகன் தப்பினான்.
முதலில் ஊடகங்கள் மீண்டும் ஏமாற்றினார் சச்சின் என்ற வாசகத்தை அழித்து விட வேண்டும்.சச்சின் நூறாவது சதம் அடிக்குறாரோ இல்லையோ ஆனா இந்த ஊடகங்களுக்கு விரைவிலேயே உயர் இரத்த அழுத்தம் வந்துவிடும் அப்படி இருக்கிறது ஊடகங்களின் அலப்பரை.

No comments: