August 8, 2011

என்ன கொடுமை சார் இது?

எங்களால்தான் அதிமுக ஜெயித்தது..ஐம்பது சதவீதம் ஓட்டு என் மகனின் ரசிகர்களுடையதுனு ஊர் ஊராக பேசிக்கொண்டிருக்கிற இயக்குனர் மீது கார்டன் தரப்பு கடுங்கோபத்தில் இருக்கிறதாம். இப்படியே பேசவிட்டால் நமக்கு கெட்டப் பேரு. ஏதாவது செய்யணுமுன்னு மேலிடத்தை உசுப்பேற்ற, அவருடைய தயாரிப்பாளர் சங்க பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்குதாம்.அம்மா ஆதரவாளர்னு சொல்லிட்டுதான் புறவாசல் வழியா பதவியைப் பிடித்தார்.இப்ப இரண்டு பேருக்கும் புகைச்சல். அவரைப் பதவி நீக்கம் செய்தே ஆகவேண்டுமென்று ஒரு தரப்பு தீவிரமாக வேலை செய்கிறதாம் .ஆனால் இதுப்பற்றி கவலைப்படாத இயக்குனரோ எங்களுக்கு டார்ச்சர் கொடுத்தால் உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தனித்து நிற்போம். இலைக்கட்சி ஓட்டுகளை பிரிப்போம்னு காமடி பண்ணுகிறாராம்.இது தினமலரில் வந்த பெட்டிச் செய்தி. நன்றி , தினமலர் நாழிதள்.இதைப்படிக்கிற போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் விஜய் அடுத்தத் திரைப்படம் வெளியடப்படுவதில் திரையரங்கு சிக்கல் ஏற்படுமென்று நினைக்கிறேன்.ஒரு பழமொழி நினைவிற்கு வருகிறது. அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைப் பிடிப்பானாம்,,,,,?

No comments: