December 19, 2011

கை உடைந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா.

அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் அ.தி.மு.,க வில் இருந்து மொத்தம் 12 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார்.சசிகலா,


நடராஜன், தினகரன், சுதாகரன், திவாகர் ,பாஸ்கரன்,ராமசந்திரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன்,ராவணன், மோகன் உள்ளிட்ட 12 பேரும் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அவர் மேலும் இந்த 12 பேருடன் கட்சிக்காரர்கள் யாரும் இனி எவ்வித தொடர்பும் கொள்ள கூடாது என்று கடும் எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளார். 12 பேரும் சசியின் நெருங்கிய வட்டாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் மகிழ்ந்திருப்பார்கள்.அந்த அளவுக்கு அ.தி.மு.க வில் சசிகலா குடும்பத்தாரின் ஆதிக்கம் இருந்து வந்தது.பல ஆண்டுகளுக்கு முன்னரே இதை பிரபல பத்திரிகைகள்,வார இதழ்கள் போன்றவை வெளிப்படையாக சுட்டிகாட்டியப் பின்னரும் ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை.ஆனால் இப்போது யாரும் எதிர்பாரா வண்ணம் அனைவரும் அதிர்ச்சியடையம் விதத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.உண்மையில் ஜெயலிலிதா ஒரு கை அல்ல இரு கையும் உடைந்த நிலையில் இருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இது மகிழ்ச்சியான விசயமாக இருந்தாலும்,முதல்வரைப் பொறுத்தவரை இது இளப்புதான்.தொண்ணூறுகளில் ஒற்றை பெண்மணியாய் போராடிய காலத்தில் ஜெயலலிதாவுக்கு பக்கதுணையாகவும்,ஆதரவாகவும் இருந்தவர் சசிகலா என்பது எவராலும் மறுக்க முடியாது.இன்று முதல் ஒரு வாரத்துக்கு ஊடகங்களுக்கும்,இணைய பதிவர்களுக்கும் இதைப்பற்றி ஆராயவே பொழுது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.தற்போது தமிழகத்தில் நடந்த நடைப்பெற்றுக்க கொண்டிருக்கிற நிகழ்வுகளால் பொதுமக்களிடம் கெட்டப்பெயரை வாங்கி வைத்திருக்கும் முதல்வர் இனிமேலாவது நற்பெயரை சம்பாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

December 16, 2011

தலைவனென்றால் போராட வேண்டும்?

தமிழகத்தின் பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது முல்லை பெரியாறு அணை.அணை உடைந்து விடும் என்ற பெயரில் கேரள அரசு செய்யும் அடவாடித்தனங்கள் எல்லை மீறிக் கொண்டிருக்கும் நிலையில் பதில் சொல்ல வேண்டிய தமிழக அரசோ வெற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றி நாங்களும் போராடுகிறோம் என்று அறிக்கை விடுகிறார்கள்.


அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமில்லாத தமிழ்நாட்டில் போராட்ட களத்தில் ஒரு சில கட்சிகளை தவிர மற்ற அரசியல் கட்சிகளும் தலைவர்களும் என்ன ஆனார்கள் என்ற தகவலுமில்லை.முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஓங்கி ஒலிக்கும் ஒரே குரலாக என் கண்களுக்கு தென்படுவது திரு.வைகோ அவர்களின் குரல் மட்டும் தான்.கேரளாவில் போராட்டக்காரர்கள் வைகோ ஒழிக என்று கோசம் எழுப்புகிறார்களேயொளிய ஜெயலலிதா ஒழிக தமிழினத் தலைவர் கருணாநிதி ஒழிக என்று யாரும் கோசம் எழுப்பவில்லை.நிலமை இப்படி இருக்க கடமை உணர்சியுடைய சில அரசியல்வாதிகள் தங்கள் வீட்டிலிருந்தபடியெ அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கென்ன அல்லல்படுவது தமிழர்கள் தானே தமிழினத் தலைவர்கள் இல்லையே அதனால் அறிக்கை மட்டும் போதும் என்று நினைத்திருப்பார்கள்.ஆட்சி அதிகாரங்களுக்கு ஆசைப்படும் தலைவர்கள் போராட்டக்களத்தில் முன் நின்று போராட வேண்டும் என்று நினைப்பதில்லை.லட்சக்கணக்கான மக்களுக்கு தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் அவர்கள் போராடினால் அவர்களுக்கு பின்னால் லட்சம் பேர் திரளுவார்கள்.


தனி மனிதனான நான் போராடினால் ஏதாவது ஒருச் சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருப்பேன்.என்னை மீட்க என் குடும்பத்தார் மட்டுமே போராட வேண்டும்.ஆனால் தலைவர்கள் மேல் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்தால் கூட அதை எதிர்த்து போராட தொண்டன் என்ற பெயரில் சாதாரண குடிமகன் இருக்கிறான்.தனி மனிதர்களான நம்மால் என்ன செய்ய முடியும் நண்பரிடமோ அல்லது பக்கத்து வீட்டுக்காரரிடமோ நாலு கெட்டவார்த்தைகளால் அர்சித்து விட்டு அடுத்த வேலைய பார்க்க போய்விடுவோம்.இதுதான் யதார்த்தம்.இந்த யதார்த்தையும் மீறி ஒரு சிலர் இருப்பர் அவர்கள்தான் தலைவராகியிருப்பார்கள் எதிர்காலத்தில் தலைவராகவும் இருப்பார்கள்.ஒரு சமூகமோ ஒரு இயக்கமோ ஒரு நாடோ எதுவாயினும் முன்னேற அல்லது எழுச்சி காண ஒரு தீரமிக்க தலைவன் தேவைப்படுகிறான்.ஆனால் தமிழக மக்களின் துரதிஷ்டம் தலைவர்கள் நிறைய கூடவே குறைகளும்.எது எப்படியோ தலைவர்களோ தொண்டர்களோ அனைவரும் ஒரு அணியில் இணைந்தால்தான் நம் வலிமை என்னவென்று உலகுக்கு பறைசாற்ற முடியும்.

December 11, 2011

வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்(12-12-2011)உண்மையிலேயே ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு திருநாள்தான்.ரசிகர்கள் மன்றங்கள் சார்பாக தங்களின் பணத்தில் அன்னதானம் வழங்குவதும்,ஏழைகள் பயன்பெறும் விதத்தில் சிறு உதவிகளான தையல் இயந்திரங்கள் வழங்குவது,வேட்டி,சேலை,கல்வித்தொகை வழங்குவது என ரஜினி ரசிகர்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கி வருகிறார்கள்.அது மட்டுமல்லாமல் கலைநிகழ்ச்சிகள்,விழையாட்டு போட்டிகள் என அன்றைய தினமே திமிலோகப்படும்.எனக்கு ரஜினி என்ற நடிகர் மீது ஈடுபாடு வர காரணமும் ஒரு ரசிகர் மன்றம்தான்.கன்னியாகுமரி மாவட்டத்தில் காட்டாத்துறை என்னும் ஊரின் அருகே இருக்கும் தும்பயன் தோட்டம் என்ற சிறு கிராமத்தில்தான் அந்த ரசிகர் மன்றம் இருந்தது.தும்பயன் தோட்டம் என்னுடைய பாட்டியின் ஊர் என்பதால் என்னுடைய குழந்தை பருவத்தை பெரும்பாலும் அங்குதான் களித்தேன்.அதனால் அங்கிருந்த ரஜினி ரசிகர் மன்றம் மூலமும் அவர்கள் நடத்தும் நிகழ்சிகள் மூலமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயர் என் மனதில் கவர்ச்சிகரமாக நுளைந்தது.என்னை பொறுத்த வரை ரஜினியின் ரசிகர்கள் மற்ற ஏனய நடிகர்களின் ரசிகர்களை விட வித்தியாசமானவர்கள்.இதற்கு விளக்கம் கூற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.ஏனென்றால் ரஜினியைப் போல அவர் ரசிகர்களும் தனி வழியைக் கடைபிடிப்பவர்கள்.அப்படிப்பட்ட அன்பு ரசிகர்களின் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.














thankyou...google.images.com

December 9, 2011

உலகக் கோப்பையை வென்ற அணிகள் ஒரு பார்வை.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி ஆனால் இந்திய மக்களால் அதிகம் ரசிக்கப்படும் விளையாட்டு கிரிக்கெட்.ஐந்து வயது சிறுவன் முதல் எண்பது வயது முதியவர் வரை என அனைத்து தரப்பினரையும் தன்னுடைய ரசிகர்களாக வைத்திருக்கிறது கிரிக்கெட்
.



கிரிக்கெட்டை கண்டு பிடித்து பல ஆண்டுகள் வரை டெஸ்ட் போட்டிகள்தான் நடைபெற்றன.1970 களில்தான் ஒரு நாள் போட்டிகள் அறிமுகப் படுத்தப்பட்டன.1975 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது.இதன் பின்னர்தான் கிரிக்கெட்டிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இது வரை மொத்தம் பத்து முறை உலககோப்பை போட்டிகள் நடந்துள்ளன.அதில் வெற்றிப் பெற்ற அணிகளின் சிறு பட்டியல் இதோ.





1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின இதில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றது.போட்டி விவரம்.மே.தீ.291/ 60 ove 8 விக்.

ஆஸ்.274/58.4 overs all out.






1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மீண்டும் மேற்கிந்திய தீவு அணி வெற்றி வாகை சூடியது.இது இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் கிடைத்த வெற்றியாகும்.போட்டி விவரம்.

மே.தீ.286/60 overs . 9 Wickets


இங்கி: 194/51 overs all out







1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப்பெற்ற போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

போட்டி விவரம்.
இந்தியா:183/54.4 overs all out


மே.தீ:140/52 overs all out






1987 ல் நடைப்பெற்ற உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவும் , பாகிஸ்தானும் இணைந்து நடத்தின.இத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து அணியும் மோதின இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றது.

போட்டி விவரம்.
ஆஸ்: 253/50 overs 5 Wickets


இங்கி: 246/50 overs 8 Wickets




1992 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போட்டிகளை ஆஸ்திரேலியாவும் , நியூசிலாந்தும் இணைந்து நடத்தின.இத்தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றிப்பெற்றது.போட்டி விவரம்.பாகி: 249/50 overs 6 Wickets


இங்: 227/49.2 all out




1996 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா , பாகிஸ்தான் , இலங்கை ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தின.இத்தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது.
போட்டி விவரம்.ஆஸ்: 241/50 overs 7 Wickets


இலங்: 245/46.2 overs 3 Wickets




1999 ல் இங்கிலாந்தில் நடைப்பெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது.

போட்டி விவரம்.ஆஸ்: 133/20.1 overs 2 wickets


பாகி:132 All out 39 Overs




2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைப்பெற்ற உலகக்கோப்பை போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியை பெற்றது.

போட்டி விவரம்.
ஆஸ்: 359/ 50 overs 2 wickets


இந்தியா: 234 All out in 39.2 Overs





2007 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைப்பெற்ற உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
போட்டி விவரம்.
ஆஸ்.281/ 38.0 overs 4 wickets


இலங்.215 /36.0 overs 8 wickets .





2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியா , இலங்கை , வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.மும்பையில் நடைப்பெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது.

போட்டி விவரம்.
இந்தியா.277/48.2 overs 4 wickets;


இலங்.274/50 Overs 6 wickets,

December 7, 2011

இயற்கையின் பத்து பிரம்மாண்டங்கள்.

இயற்கை அன்னையின் பிரம்மாண்டங்களில் சில.



கிரேட் பேரியர் ரீப் . ஆஸ்திரேலியா



இது உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளின் சங்கமம் ஆகும். வடக்கு கிழக்கு கடற்கரை சுமார் 344.400 சதுர
கிலோமீட்டர் ஆகும்.ஒரு பகுதிக்கு 2,600 கிலோமீட்டர் .இந்த நீட்சி 2.900 தனிப்பட்ட திட்டுகள் மற்றும் 900 தீவுகளை
உள்ளடக்கிய உலகின் மிக பெரிய பவள பாறைகள் அமைப்பு ஆகும்.இங்கு
ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங், போன்ற பொழுதுபோக்குகள் பிரபலமானவை.




நயாகரா நீர்வீழ்ச்சி,அமெரிக்கா

கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா இடையிலான எல்லையில் இந் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது, நயாகரா
நீர்வீழ்ச்சி மூன்று தனி நீர்வீழ்ச்சிகளை கொண்டிருக்கிறது.

இது உயரமானது அல்ல, ஆனால் அதிக அகலமும் லட்சகணக்கான கேலன் நீரையும் சுமந்து கொண்டிருக்கிறது.




குனங் முலு தேசியப்பூங்கா,மலேசியா



இந்த பூங்கா உலகின் மிக விரிவான மற்றும்
கண்கவர் குகை அமைப்பு கொண்டிருக்கிறது.
இங்கு 600 அடி உட்புற
நீர்வீழ்ச்சிகளை காண முடியும். அது மட்டுமல்லாமல் இங்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான வெளவால்கள்
உயிர் வாழ்கின்றன.இதன் மொத்தப் பரப்பு 754 சதுர கி.மீட்டர்கள்.





விக்டோரியா நீர்வீழ்ச்சி, சாம்பியா ,ஜிம்பாப்வே


விக்டோரியா நீர்வீழ்ச்சியில் ஒரு நிமிடத்தில் வெளியேறும் தண்ணீரின் அளவு 120 மில்லியன் கேலன்கள் ஆகும். 1,500 மீட்டர் உயரமுடைய குன்றின் மீதிருந்து
விக்டோரியா நீர்வீழ்ச்சி கீழே விழுகிறது.




பரீகுடின் எரிமலை,மெக்ஸிகோ


பரீகுடின் எரிமலை 1943 ஆம் ஆண்டு வெடித்ததில் இரு கிராமங்கள் எரிமலைக் குழம்பால் மூடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.இன்றும் இந்த எரிமலை லாவா குழம்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.இதன் உயரம் 2,800 மீட்டர்கள்.





ஏஞ்சல் நீர்வீழ்ச்சி,வெனிசுலா


807 மீட்டர் உயரம் கொண்ட ஏஞ்சல் நீர் வீழ்ச்சி உலகின் உயரமான இயற்கை நீர்வீழ்ச்சிகளில் உயரமானது ஆகும்.





அரோரா பொரியலிஸ்,



அரோரா பொரியலிஸ் என்பது இயற்கையின் மாற்றத்தால் ஏற்படும் ஒரு வகை ஒளியின் வாண வேடிக்கை ஆகும். இது முழுக்க முழுக்க இயற்கையின் ஜாலமாக கருதப்படுகிறது.இது பெரும்பாலும் நார்வே,
ஸ்வீடன், பின்லாந்து, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அலாஸ்கா மற்றும் கனடா போன்ற
நாடுகளில் இந்த ஒளி நிகழ்வு அடிக்கடி தோன்றுவதாக அறியப்படுகிறது.பெரும்பாலும் செப்டம்பர் ,ஏப்ரல் ,அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் வானத்தில் இயற்கையின் வாணவேடிக்கைகள் நடைபெறுகிறது.





எவரெஸ்ட் சிகரம்,

எவரெஸ்ட் சிகரம் பூமியில் மிக உயரமான பகுதி ஆகும்.எவரஸ்ட்டின் உயரம். சுமார் 8.844 மீட்டர்
இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு முதல் ஐந்து மில்லி மீட்டர் வளர்ச்சி பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.







ரியோ டி ஜெனிரோ துறைமுகம்.பிரேசில்

ரியோ டி ஜெனிரோ துறைமுகம் சுமார் 30 கி.மீட்டர்கள் நீளத்திற்கு இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும்.





கிராண்ட் கேனியன்,அரிசோனா,அமெரிக்கா



கிராண்ட் கேனியன் பத்து லட்சம் வருடங்களுக்கு முன்பே கொலராடோ நதியின் நீரோட்டத்தால் உருவானதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.இது
445 கி.மீட்டருக்கு மேல் நீளமும் கிட்டத்தட்ட 26 கி.மீட்டர் அகலமும் கொண்டதாகும்.இது பார்ப்பதற்கு வறண்ட பாலைவனம் போல் காட்சி அளிக்கும் ஓர் இயற்கையின் அ ற்புதம்.

December 3, 2011