July 14, 2016

நியாயமாரே..

எனக்கு அப்போது பதினேழு வயதிருக்கும்.பள்ளிக்கூடத்துக்கு போகாம வெட்டியாக சுத்திக் கொண்டிருந்ததால் பல நிர்பந்தங்களுக்கிடையில் கேரளாவிற்கு சித்தாள் வேலைக்குச் செல்ல பணிந்திருந்தேன்.வெற்றிகரமாக ஒரு மாதம் வேலையும் செய்து முடித்துவிட்டேன்.அந்நிலையில் ஒருநாள் ஓர் பழைய வீட்டிற்கு பழுது நீக்கும் பணிக்காக நாங்கள் இருவர் சென்றோம்.வேலையின்போது என் கவனக்குறைவால் அங்கிருந்த வேலைப்பாடு மிக்க மண் ஜாடியை உடைத்துவிட்டேன்.நான் அதிர்ச்சியில் உறைந்திருக்க அதற்கு மேல் அதிர்ச்சியாகி என் கொத்தனார் என்னை திட்டிக்கொண்டிருந்தான்.சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வந்த மலையாளியான முதலாளி..சம்பவத்தை பார்த்தவுடன் சாரமில்லடோ அவனை சீத்த பறையல்லே என எனக்காக பரிந்தார்..ஒரு சில முணுமுணுப்புடன் கொத்தன் நடக்க பின்னே தலை கவிழ்ந்தபடி நானும் நடந்தேன்..அந்நேரத்தில் வெளியே ஆட்டோ ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.சிறிது நேரத்தில் நாங்கள் வேலை செய்யும் இடத்தை ஆட்டோவில் வந்திறங்கிய மேஸ்த்திரி அதாவது கண்ராக் வந்தடைந்தார்..வரும்போதே உடைசலை வெளியே கொண்டுபோன வீட்டுக்காரை பார்த்திருப்பார் போல..லேய் அது எப்படிலே உடைஞ்சி என கொத்தநாரைப் பார்த்து கேட்டார்.நான் கொத்தநாரின் முகத்தை இன்சூரன்ஸ் இல்லாமல் மாட்டிய பைக்காரனின் கெஞ்சல் முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.இந்த பயதான் உடைச்சான் என யோசிக்காம உடனே போட்டுக்கொடுத்துட்டான்.இதற்கு முன்னரும் இதேபோல் உடைதலும் சரிதலும் எனக்கு சகஜம் என்பதால் எல்லாவற்றிர்க்கும் சேர்த்து வண்டை வண்டையா திட்டினார் மேஸ்த்திரி.அன்று பதினேழு வயது வாலிபனென்று இறுமாந்து அலைந்து கொண்டிருந்த நான் அழுதுகொண்டிருந்தேன்.மாலையில் வேலை முடித்து வரும்போது நான் கொத்தநாரிடம் அண்ணா வீட்டுக்காரரே அந்த ஜாடி ஒடஞ்சதுக்கு சாரமில்லைனு சென்னாரு நீ யாமண்ணா கண்ராக்கிட்ட நான் ஒடைச்சேன்னு சென்ன என பரிதாபமாக கேட்டேன்.கொத்தன் ஒத்த வரியில் சொன்னான் நான் கள்ளம் செல்லமாட்டேம்பிலேன்னு..ு.அவ்வளவுதான் நான் அதற்கு பின் பேசவேயில்லை.இப்படி ஒரு வாரம் கடந்திருக்கும்.நாள்தோறும் இரவில் மூன்று நான்குபேர் அமர்ந்து அறையில் சீட்டு விளையாடுவது வழக்கம் .அன்றும் அதேப்போல் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.நான் வழக்கம் போல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஆட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக என் எதிரி கொத்தனை கவனிக்கையில் அவன் உருவியது எத்தனை சீட்டு என்றும் தெரியாது. அவனிடம் எத்தனை சீட்டு இருக்கிறது என்றும் தெரியாது.ஆனால் அவன் களத்தில் ஒரு சீட்டு இடுவதற்கு பதிலாக இரண்டு சீட்டுகள் இட்டிருந்தான்.இது அப்பட்டமான ஏமாற்று .இதை நான் உடனே சொல்லியிருந்தால் பெரும்சண்டையே நடந்திருக்கும்.அல்லது நான் பொய் சொல்வதாக கூறி என் நொங்கை கொத்தன் எடுத்தாலும் எடுத்திருப்பான்.எதற்கு வம்பென்று நான் அமைதியாகிவிட்டேன்.அன்று இரவு மன உழச்சலிலேயே உறங்கினேன்.இந்த ஏமாற்றை மறுநாள் எப்படியும் கொத்தனிடம் கேட்டுவிட வேண்டுமேன தீர்மானித்துக்கொண்டேன்.மறுநாள் காலையில் ஆத்துக்கு குளிக்க போகும்போது கொத்தனுடன் ஒட்டிக்கொண்டேன்.அண்ணா நீ கள்ளம் செல்லமாட்ட அதுஇதுன்னு அண்ணைக்கு சென்ன.ஆனா நேத்து சீட்டு விளையாடம்ப எத்தனதடவ இரண்டு சீட்டு போட்ட ரெண்டு சீட்டு எடுத்தன்னு எனக்கு தெரியும்.ஏதோ பாவம்பாத்து அவியள்ட்ட செல்லேல சென்னா என்ன நடக்கம்னு தெரியமில்ல என மென்மையாக மிரட்டினேன்.ஊம்பி துப்பிருவானுவ போல உனக்க வேலைமயிரைப் பாத்துட்டு என கொத்தன் எகிறினான்.எனக்கும் எகிற ஆசைதான் என்ன பண்றது ஆளில்லாத இடம் வேற அவன் அடித்தானென்றால் தடுத்து நிறுத்துவதற்கும் ஆள் கிடையாது. அதனால் அமைதியாக போய்விட்டேன்.அங்கு ஒருசில வாரங்கள் கூட வேலை செய்துவிட்டு நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.ஒருமாதம் கடந்து எங்க ஊர் கடைத்தெருவில் என் கொத்தனைப் பார்க்கிறேன் .தலையில் பெரிய கட்டோடு நின்று கொண்டிருந்தான்.என்னண்ணா ஆச்சி என பொய்யான அதிர்ச்சியோடு கேட்டேன்.அந்தோணிக்க பய குடிச்சிட்டு முழக்கோலெடுத்து அடிச்சி போட்டான் என சொன்னான்.நானும் ஒருசில நிமிடங்கள் நடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டேன். பிற்பாடு வந்த தகவல்கள் இவை ...மண்டை உடைந்தது உண்மை ஏழு தையல்கள் போட்டது உண்மை,தாக்கிய ஆயுதம் முழக்கோல் வரை உண்மை. ஆனால் உடந்ததற்கான காரணம் பொய்...அவன் பொய்யினால் அடிவாங்கினான் என்பதே எனக்கு சந்தோசமாக இருந்தது.அடிநடந்தது என்னவோ சீட்டு விளையாட்டுக் களத்தில்தான் ஆனால் இம்முறை இரண்டு சீட்டு போட்டது என் கொத்தனல்ல.அடித்த அந்த அந்தோணி மகன்தான் பொய்யன்.பாவம் என் கொத்தன் நியாயம் கேட்கப் போனார் நியாயமானதை வாங்கினார்...
.
நியாயமாரே...

July 5, 2016

மரம் வளர்ப்போம்...எங்காவது..

நாங்கள் இரண்டு பேர் மரம் வளர்ப்பதைப் பற்றியும் சில திருமண வீடுகளில் வாழ்த்த வருவோர்களுக்கு மரக்கன்றுகள் அன்பளிப்பாக தருவதுபற்றியும் சின்ன விவாதத்தில் உழன்று கொண்டிருந்தோம்.அப்போது பேச்சுவாக்கில் நம்மளால நிறைய மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்க முடியவில்லையென்றாலும் நம் தெருவில் ஒரு மரமாவது நட்டு பாதுகாக்க வேண்டும் என நண்பர் ஆதங்கப்பட்டுக்கொண்டார்.நானும் பதிலுக்கு நாடோடி மாதிரி சுற்றிக்கொண்டிருக்கும் வாழ்கையில் இதல்லாம் எங்கண்ணே சாத்தியம் என்று குறைபட்டுக்கொண்டேன்.இப்படி எங்கள் உரையாடல் நொடிகளை கடந்துகொண்டிருக்க திடீரென அருகாமை கட்டிலில் படுத்துக்கிடந்த பெரியவர் (சுமார்50 வயதிருக்கும்.)என்னல பேசுதிய எனக்க வீட்டுக்ககிட்ட ரோட்டுல அவ்வளவு இடம் கிடக்கே சைடுல கொஞ்சம் மரம் வைப்போம்னு வச்சா ஊருகாரப்பயலுவ அடிக்க வாறானுவ.இதுல மரம் வளர்ப்பாம் பாதுகாப்பாம் போங்கலே..என்றுவிட்டு மீண்டும் படுத்துவிட்டார்.நான் கோபமாக அவர் ஊர்காரர்களுக்கு ஓர் கெட்டவார்த்தையை தந்துவிட்டு எப்படிணே அது நம்ம பாதுகாப்புக்கு மரம் வைக்க எவன்ட்டண்ணே அனுமதிவாங்கணும் என
ஆஊவென கத்திவிட்டு எத்தனை மரம்ணே வச்சீங்கன்னேன்.ஆறு மரம் வச்சேம்பா என்றார். பரவாயில்லையே சூப்பர்ணே என்ன மரம்ணே வச்சீங்க..ஆறும் வாழைமரம்தான் தம்பி என்றார்...எனக்கு கிர்ர்ர்ருனு மண்டையில் ஏதோ ஏறியிச்சு ஒண்ணும் சொல்லாம சிகரட் பாக்கட்டை எடுத்துட்டு வெளியே வந்துட்டேன்..என்கூட பக்கத்துல இருந்தவர் சிரிப்புசத்தம் மட்டும் முதுகுப்பக்கம் கேட்டுட்டே இருந்துச்சு...
.
பிராணவாயுக்காக மரம் வைக்கிறதைப்பற்றி பேசிட்டு இருந்தா..பக்கி ரோட்டுல விவசாயம் பண்ண முயற்சி செய்துவிட்டு முடியல்லன்னதும் கோபமா வேறபேசுது....
.
எல்லாம் என் கூட்டுக்கட்டு..

March 13, 2016

கோடைமழை விமர்சனம்

கோடைமழை விமர்சனம்..
.
நல்ல படம் என்பதற்கான உதாரணம் காட்ட வேண்டுமானால் கோடைமழையை தயங்காமல் முன்மொழியலாம்.எந்தவொரு முகம் சுளிப்புக்கும் இடந்தராமல் இயக்கிய இயக்குநருக்கு கம்பீர மரியாதை.கதை என்றுப்பார்த்தால் யதார்த்தம் .அவ்வளவுதான்.நம்மைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை அதாவது நாம் அறிந்திராத சுற்றுப்புறத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்லலாம்.இந்த திரைப்படத்தில் வில்லனே இல்லையென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.சூழ்நிலையை மட்டுமே வில்லனாக்கியுள்ளார் இயக்குநர் .அதிரடியை தவிர்த்து மற்ற அனைத்து மசாலாக்களையும் புகுத்தியிருக்கிறார் இயக்குநர்.குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகளை நாம் இனி சின்னத்திரையில் அடிக்கடி காணலாம். கலக்கல் நகைச்சுவை துளிகள் பல உண்டு கோடைமழையில்.
அடுத்ததா ஒளிப்பதிவு மிக அருமை .பொட்டல்வெளியையும் ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் மாதிரி ரசிக்க வைத்த பெருமை ஒளிப்பதிவாளரையே சேரும்..
ஒரு சாலையின் வளைவு கூட அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது.ஒலிப்பதிவையும் மெச்சியாகவே வேண்டும்.சிறு சப்த்தங்களுக்கும் பிரத்தியோக கவனம் கொண்டு வடிவமைத்திருக்கின்றனர்.திரையில் கன்னத்தில் விழும் ஒவ்வொரு அடியும் என் கன்னத்தில் விழுந்தது போலவே உணர்வு காரணம் தத்ரூப ஒலிப்பதிவுதான்.
.
சமீப காலமாக இவ்வளவு அருமையான கிராமிய மணம்கொண்ட பாடல்களை கோடைமழையில்தான் கேட்கிறேன். வைரமுத்துவின் வரிகள்னா சும்மாவா அற்புதம்.வரிகளுக்கேற்ப பின்னணிகோர்ப்பும் அதே அற்புதம். அது இசையாக இருந்தாலும் சரி காட்சியமைப்பாக இருந்தாலும் சரி.
.
நடிகர்களைப்பத்தி சொல்ல வேண்டுமென்றால் எலோருமே பொருத்தமான தேர்வுதான்.குறிப்பாக நாயகி ப்ப்பா என்னா அழகு.கூடவே நடிப்பும் அழகுதான் .இன்னும் சொல்லலாம்தான் வேண்டாம் எனக்கு வெக்கம் வருது..
.
இந்த திரைப்படம் மூலம் இயக்குநர் சொல்லவருவது கண்மூடித்தனமான கோபம் கொண்டுச்செல்வது பிறருக்கான இழப்பாயினும் அதைவிட பேரிழப்பு நமக்கும் வந்துத்தங்குமென சொல்லிச் செல்கிறார்.ஒரு திறமையான மற்றும் அழகியல் சார்ந்த இயக்குநராக கதிரவன் தமிழ் திரையுலகிற்கு கிடைத்திருக்கிறார்.வாழ்த்துகள். ஆனால் அவர் சிறந்த கதைசொல்லியா என்றால் ஆம் என்பதற்கு ஒரு மாற்று குறைவே என்பதாகத்தான் என்னால் மதிப்பிடமுடிகிறது.

கண்டிப்பாக ஒரு நல்லத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தியை கோடைமழை தரும்..

November 15, 2015

நட்பு....

நேற்று நண்பர் ஒருவரோடு சின்ன மனகசப்பு உண்டாகிவிட்டது.தவறு அவர்பேரில் என்பதால் நான் அதிகப்படியான ரோசத்தோடே இன்று மாலைவரை நடந்துகொண்டேன்.அப்படியே இரவும் வந்தது.நான் வேண்டா வெறுப்பாக வேடிக்கை பார்ப்பதில் கவனத்தை செலுத்த முயற்சித்துக் கொண்டிருக்கையில் என்னருகே வந்த நேற்றைய நண்பர் ,எனக்கு இப்போ பாதிதான் தேவைப்படுது அதுக்குமேல போனா வீட்டுக்கு போறது கடினமாகிவிடும் அதனால் நாம இரண்டுபேரும் பகிர்ந்து கொள்ளலாமே என்றார்.எனக்கு பழைய ரோசம் அப்படியேதான் இருந்தது எனினும் அவருக்கு என்னிடம் வெறுப்பு இல்லை என்பதை அறிந்துகொண்டதால் அல்லது அவர் மீண்டும் நெருங்கிவர முற்படுவதால் நானும் உங்களுக்கு அவ்வளவு தேவையில்லையென்றால் நானும் அதில் பங்கெடுத்துக்கிறேன் என சொல்லி நூற்றி முப்பதில் என் கோபத்தையும் ரோசத்தையும் கழுவினேன்.
.
இப்போது இதை எதுக்கு சொல்றேன்னா கோபத்தை நீட்டிக்க பலவாய்ப்புகள் உண்டானால் குறைக்க அல்லது இல்லாமலாக்க சில வாய்ப்புகளேனும் உண்டாகலாம் அதை நாம் பயன்படுத்துவதில்தான் நாளைய நம் நட்புகளின் இணக்கம் உறுதியாகிறது..
.
பின்குறிப்பு..
பாதிக்காக இவன் வியாதி வந்தவன்போல் மாறிப்போனதாக நீங்கள் நினைத்தால் கம்பனி பொறுப்பேற்காது....

April 7, 2015

பொங்கும் செம்மரம் ...

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட இருபது பேர் சுட்டுக்கொலை .அதில் சுமார் பனிரெண்டு பேர் தமிழர்களாம் .அதனால் சிலபல மனித உரிமை ஆர்வலர்களும்.சமூக போராளிகளும் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்களாம்.தவறு எவர் செய்தாலும் தவறுதான் அதில் கூடுதல் குறைவு என்ற வாதத்திற்கே இடமில்லை .அதனால் தமிழன் தவறு செய்தால் தவறு சரியாகாதுதானே .அப்படி இருக்கையில் ஒரு அரசின் எச்சரிக்கையையும் அவமதித்து அங்கு கண்காணிப்புக்கு இருந்த அதிரடிப்படை வீரர்களுக்கும் கட்டுப்பட மறுத்தவர்களை தாக்குவதை தவிர வேறு உபயம் இருந்திருக்க முடியாது .துரதிர்ஷ்டவசமாக இருபது பேர் மரணித்தது வேதனைக்குரியதுதான் .இங்கு திருட்டு பெரிய குற்றமல்லதான் .ஆனால் தேசத்துரோகம் பெரிய குற்றம்தானே ..அரசையும் இயற்கையையும் மதிக்காதவர்களுக்கு இந்த சம்பவம் ஒருபாடமாக அமையலாம் .நம்ம ஊர்ல இந்த பிக்பாக்கட் அடிக்கிறவன் ,தாலி அறுப்பவன்,வீடேறி திருடுபவன் இவர்களல்லாம் தங்கள் வயிற்றுக்காகவும் வாழ்க்கைக்காகவும்தான் திருடுகிறார்கள். அவர்களும் தமிழர்கள்தான் .ஆகவே எதிர்பாரமால் அகப்பட்டுவிட்ட திருடனை அவன் உடல் நோகாமல் காவல் துறையினரிடம்  ஒப்படைத்துவிடுவீர்காளா ...?மரண அடி கொடுத்தல்லவா காவல் துறையினரிடம் ஒப்படைப்போம் ...நம் மனித நேயம் அப்படி இருக்க எங்கோ நடந்த சம்பவத்திற்கு போராளி என்ற பெயரில் நம்மை விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறோம் ..காரணம் தமிழன் தாக்கப்பட்டானாம் .நாம் பொறாமையோடு எதிர்கொள்ளும் அடுத்த வீட்டுக்காரனும் தமிழன்தான் அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் ஏன் நம் நெஞ்சு இவ்வளவு பொங்குவதில்லை .காரணம் வீம்பு ,கர்வம் ,எரிச்சல் போன்ற இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள்தான் .எப்போதும் நாம் கண்ணுக்கு தெரியாதவனை மட்டும்தானே  கொண்டாடுவோம் .அதுபோல் கண்ணில் அகப்படாமல் தொலைவில் உள்ளவன் பெயரிலும் பரிவு கொள்கிறோம் .அந்தப் பரிவு ஒரு விளம்பரத்துக்காக மட்டும் இல்லாமல் இருப்பது வரை நல்லது ...
.
.
தோன்றியது  ...

January 26, 2015

ஐ விமர்சனம் ..

ஐ விமர்சனம் ...

.
.
இந்தப்  படத்தின் ஓட்டைகளை விமர்சிப்பதா அல்லது ஓட்டைகளையே மறக்கடிக்கவைக்கும் ஏனைய பிரம்மாண்ட காட்சிகளை சிலாகித்து விமர்சிக்கவா ...எதுவும் முடியாது .ஏன்னா படம் என்னை  மெர்சலாக்கிடிச்சு  ....
விக்ரம் -நடிகன்டா நீ....
.
சங்கர் -உங்கள் படைப்பாளுமைக்கு  நாங்கள் தலை வணங்குகிறோம் .அல்லது நான் ....
.
ரவிச்சந்திரன் -சார் நீங்க நிஜ ஹீரோ ....
.
ரகுமான் -உலகறிந்ததாயிற்றே ..
.
ஏனைய மற்ற கலைஞர்களுக்கும் நன்றிகள் ...
.
முடிவா ஒண்ணே ஒண்ணு ..
அதாவது மேஜிக்குல யாரும் லாஜிக் பார்ப்பதில்லை .அதை எப்படி சாதித்தார்கள் என்றுதான் யோசிப்போம் .அதே மாதிரிதான் ஐயும் எப்படி இப்படி படைத்தார்கள் என்று யோசிப்போம் .ரசித்துவிட்டு வரலாம் ...
.
ஐ லைக் ஐ.....

December 18, 2014

லிங்கா எனது பார்வையில் ..

லிங்கா .....
.
என் பார்வையில் ......
.
.
இந்த திரைப்படத்தின் நாயகனாக என் கண்முன்னே விரிவது ஒளி இயக்குநர் ரத்னவேலுதான் ...ப்ப்ப்ப்பா என்ன ஒரு கேமரா விளையாட்டு . சூப்பர் ..
.
அடுத்தது கலை இயக்குநர். அருமையான வேலைப்பாடுகள் அதுவும் கடின உழைப்பின் பிரதிபலிப்பு கண் கொட்டாமல் ரசிக்கவைக்கிறது .கலைக்கும் ஒளிக்கும் கொஞ்சம் மூளையாக இருந்த இயக்குனர் ரவிக்குமார் அவர்களுக்கு மிகுந்த நன்றிகள் ..
அவருக்கு இந்த இரண்டு துறை சார்பாகத்தான் நன்றியோ பாராட்டோ தெரிவிக்க முடியும் .ஏனையவை ஏனோதானோதான் ..இசையைப் பற்றி இப்போது பேசத்தேவையில்லை ஏன்னா முன்பே அறிந்துதான் பாடல்கள் அத்தனையும் அருமை .பின்னணி இசையும் அருமைதான் ....
.
ரஜினி ...
.
மாற்றம் மட்டுமல்ல தலைவரும் மாறமாட்டார் போல பழைய பல்லவியை மீண்டும் பாட முயற்சித்துக்கொண்டிருக்கிறார் ..குரல் கரகரத்து விட்டது என்பது ரசிகனான எங்களுக்கு வருத்தமே ...அமிதாப்பின் காலில் விழுந்தால் மட்டும் போதாது .அவர் கைப்பிடித்து அவர் பாதையில் கொஞ்சதூரமேனும் பயணப்பட்டால் ரஜினி என்ற  மாஸ் கலையாமலிருக்கும் என்பது என் எண்ணம் ....
.
ரஜினியின் எந்த திரைபடத்தையும் பார்த்தாலும் முன்பே பார்த்திருந்தாலும் ஒரு சில காட்சிகளாவது ரஜினி  என்னை சிலிர்க்க வைப்பார் .அதுவும் மீண்டும் மீண்டும் அதே காட்சிகளை பார்த்தாலும் .ஆனால் இந்த திரைப்படத்தில் ரஜினியோ ரவிக்குமாரோ அந்த வாய்ப்பை எனக்கு தரவில்லை ..வருத்தம்தான் போகட்டும் .பிரம்மாண்ட காட்சிகளால் கவர முயற்சித்துவிட்டு ..காட்சி அமைப்பதில் கோட்டை விட்டுவிட்டார் இயக்குநர். ஓட்டையாக...சிலபல நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படியாவே இருந்தது அதுவும் ரஜினியின் தோஸ்தான பாம்பு நகைச்சுவை அட்டகாசம் போங்க ..என்னா முகபாவம் சூப்பர் .கூடவே சீரியசான காட்சிகளும் சிரிப்பை வரவழைத்ததுதான் சோகம் ....
இப்படி பழைய ரஜினியை ரசிக்க முடியாமல் மனம் இரண்டுபட்டு கிடந்தவேளையில் ஒரே நிவாரணமாக வந்தார் அனுஷ்கா ....(பாஸ் அது நிர்வாணம் இல்ல நிவாரணம் )அவரைப்பார்த்து மனம் பெருத்த ஆறுதலடைந்தது ..இரண்டு திரைப்படத்தில் இரண்டான மனசு லிங்காவில் நாலானது ம் அவ்வளவு அழகு ....நடிப்பும் அழகுதான் ...
..
சோனாக்சி .....நல்லா நடிக்குறாங்க ...ஆனா நடனம்தான் ப்ப்ப்பா சகிக்கல ...
.
சந்தானம் ...
மணமில்லாத சந்தணம் ஆயிட்டார் ...
.
ஜெகபதிபாபு ....
அழகான மொக்க வில்லன் ..மொக்கையாக்கிட்டாங்க ...
.

.ரவிக்குமார் ....

கதை திரைக்கதை இயக்கம் ..மூணுமே சறுக்கல்தான் ..ரசிக்க முடியல ....ரஜினி நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படத்தில்தான் அவருக்கு மிக அதிகமான டூப் பயன்படுத்தியதற்காக ரவிக்குமாருக்கு மிகப்பெரிய கொட்டு ..காட்சிகளே கெட்டுப்போச்சு ......
.
இப்படி பல குறைகளும் சில நிறைகளும் இருந்தாலும் மீண்டும் இந்த திரைப்படத்தை பார்க்க விரும்புவேன் ..ஏன்னா நான்  ரஜினி ரசிகன் .....
.
..
மொத்தத்தில் லிங்கா கறுப்பு காகிதத்தில் வெள்ளைப்புள்ளி ......

November 4, 2014

கடன் ஓர் கடன்

நம்ம அண்ணன் ஒருத்தர்ட்ட...

அண்ணே எனக்கு அவசரமா பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுது யார்கிட்டயாவது வட்டிக்கோ அல்லது டெய்லி சீட்டுக்கோ வாங்கித்தர முடியுமா என கேட்டேன் ..கடனாய் கேட்டாலும் தரமாட்டார்கள் என்பதால்தான் வட்டி என்ற பிட்டை போட்டேன் )
நொடி கூட தாமதிக்காம உடனே சொன்னார் .என்னது வட்டிக்கு காசா டேய் நாங்க எல்லாம் வாங்கிட்டு படுகிற அவஸ்த்தை எங்களுக்குதான் தெரியும் .எக்காலத்திலையும் வட்டிக்கு வாங்கும் எண்ணத்தை மட்டும் விட்டுவிடு என சீரியசாவே சொல்லி முடிச்சார் ..
.
நான் குழம்பிட்டேன் நம்ம நல்லதுக்குதான் வாட்டிக்கு வாங்க வேணாம்னு சொல்றாங்களா ..அல்லது நம்மேல் கொண்ட அதீத நம்பிக்கையின் பிரதிபலிப்பே இந்த நிராகரிப்பாய் இருக்குமா என குழம்பித்தான் போனேன் ..
இருந்தாலும் ...
அண்ணே எனக்கு ரொம்ப தேவை இருக்குண்ணே அதனால ஐந்தாயிரம் ரூபாய் கடனுக்காச்சும் கொடுண்ணே என்று கேட்டேன் ....
.
கொஞ்சமா திகைத்த முகத்தோடு சொன்னார் ....
வாய்ப்பே இல்லயப்பா ஏன்னா போனவாரம்  வட்டிக்கு வாங்குன  பத்தாயிரம் ரூபாய் சாயங்காலம் திருப்பி கொடுக்கணும் இப்போ ஐந்தாயிரம் ரூபாய்தான் இருக்கு மீதி ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஓடிட்டு இருக்கேன் ...இதுல நாளைக்கு ஒருத்தருக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கணும் ...அடுத்வாரம் இன்னும் ஒருத்தருக்கு ...
.
அண்ணே போதும்ணே இதோட நிறுத்திரு .உன்கிட்ட கடனுக்கும் கேட்கல வட்டிக்கும் கேட்கல .....போட்டா ..
.
ஹலோ நான்தான்டா எனக்கு அவசரமா ஒரு ஐந்தாயிரம் ரூபாய் தேவைப்படுது ....
.
டேய் மச்சான் நானே உன்கிட்ட கேக்கலாம்னு இருந்தேன்டா ... ...
.
அவன் பேசுனது பிறகு எனக்கு கேக்கவே இல்லை ...கட் பண்ணிட்டேன் அழைப்பை ......
.

November 3, 2014

சில்லரை

சினிமாவில் யதார்த்தத்தை மீறிய சில காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடக்கும்போது மிக சுவாரஸ்யமாகிவிடுகிறது ... அப்படிதான் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தையில் வெட்டியாக நின்று கொண்டிருந்தபோது ஒரு குடிகார பிச்சைக்காரர் ஒரு பக்தி கானத்தை மிகுந்த உச்சக் கூக்குரலில் பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் .அவர் பாடும் தோரணையும் வித்தியாசமான பாவனையும் என்னை கவர்ந்ததால் அவரை கவனித்துக்கொண்டிருந்தேன் ...அவரும் நான்கைந்தை வரிகளை மட்டும் மீண்டும் மீண்டும் பாடியவாறே நான் நின்றிருந்த கடைக்கருகே வந்து மீண்டும் முதல் வரியிலிருந்து பாட ஆரம்பித்தார் ..கடைக்கு காய்கனி வாங்கவந்தவர்கள் பாடக பிச்சைக்கரரின் குரலின் உச்சநிலையைக் கண்டு அதுவும் செவிப்புறமாய் பாடும்போது மிரண்டுதான் போனார்கள் ...இதைப்பார்த்த கடை முதலாளிக்கு சிறிது கோபம் வந்துவிட்டது .இருந்தாலும் வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையாதலால் அமைதியாக இருந்துவிட்டார் ..பாடகரும் பாடிய நிலையிலேயே மூன்று முறை கையேந்தி விட்டார் ..முதலாளி கண்டுகொள்வதாக இல்லை ..மீண்டும் பாடகரின் ஒருசில முயற்சிச்சிக்குப் பின் முதலாளி வாயைத் திறந்து சில்லறை இல்லை என்று மூஞ்சை கோணலாக வைத்துக்கொண்டே சொன்னார் ...கொஞ்சமும் அலட்டாத பாடகர் பாடிபடியே இந்தாங்க எடுத்துக்கோங்க என்று தன் தட்டை முதலாளி முன் வைத்தார் ...... அப்படியே முதலாளி அதிர்ச்சியாயிட்டாரு.. சுத்தியிருந்த நாங்களும்தான் ...சில வினாடிகளுக்குப் பிறகு சாவதனாமாக பாடகர் சொல்கிறார் சில்லறை எடுத்துக்கோங்கன்னு சொல்லவந்தேன் அப்படி என்று விட்டு மீண்டும் பாட ஆரம்பித்து விட்டார் ..அவர் பாடலை ஆரம்பிக்கவும் நான் சிரிக்க ஆரம்பிக்கவும் சரியாய் இருந்தது..அதுவும் பலமாக சிரித்தேன் என் கூட துணைக்கு சிரிக்கவும் ஒருசிலர் இருந்தனர் ....இப்போது முதலாளிக்கு பிச்சைக்காரனை மறந்துவிட்டார் என்னை முறைக்க ஆரம்பித்தார் ..நான் இன்னும் பலமாக சிரித்தேன் .அவர் கோ ப ப்டவில்லை அவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார் ..... . ஆனா பிச்சைக்கார பாடகருக்குதான் காசு கிடைக்கவில்லை ..பிறகு நான்தான் என்கிட்ட சில்லரை இல்லையென சொல்லி வேறு ஒருவரிடம் ஒரு ரூபாய் கொடுக்க சொன்னேன் .....
.
நான் கொடுக்க சொல்லவில்லை என்றால் என்னையும் எடுக்கச்சொல்லியிருப்பார் ...........சில்லரை ......